Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

'கார் ஸ்டாண்ட்' ஆக்கிரமிப்பு: அகற்ற முயன்றதால் பரபரப்பு

Print PDF

தினமலர் 17.04.2010

'கார் ஸ்டாண்ட்' ஆக்கிரமிப்பு: அகற்ற முயன்றதால் பரபரப்பு

உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே 'கார் ஸ்டாண்ட்' ஆக்கிரமிப்பை நேற்று போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, 1972 ம் ஆண்டு டாக்சி ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. இந்த இடத்திற்கு ஏலம் நடத்தி, ஒப்பந்ததாரர்கள் மூலம் நகராட்சி நிர்வாகம் சுங்கம் வசூலித்து வந்தது. 2002-03ம் ஆண்டில், 6335 ரூபாய்க்கும், 2003 -04ம் ஆண்டில் 6600 ரூபாய்கும் ஏலம் போனது. அடுத்து வந்த ஒப்பந்தகாலத்தில் யாரும் ஏலம் எடுக்கவில்லை. இதனையடுத்து, 2005 ஏப்29ம் தேதி நகர மன்ற கூட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்காக, ஏல இனத்திலிருந்து டாக்சி ஸ்டாண்ட் நீக்கப்பட்டு, அதனை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு பயன்படுத்த நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இடத்தை காலி செய்ய நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. 2009ம் ஆண்டு பிப் 3ம் தேதி இறுதி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப் பட்ட நிலையில், நகராட்சி நிர்வாகத்தை எதிர்த்து டாக்சி ஸ்டாண்ட் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, காலி செய்வதற்கு தடையாணை பெறப்பட்டது. டாக்சி ஸ்டாண்ட்டிற்கு ஒதுக்கப் பட்ட இடத்தை தவிர, காலியாக உள்ள இடத்தையும் கூடுதலாக ஆக்கிரமித்துள்ளதாகவும்,உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நேற்று வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாணிக்கம் தலைமையிலான போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சித்தனர்.

நகரமைப்பு அலுவலர் இளங்கோவன், டாக்சி ஸ்டாண்டிற்கு 222 சதுர மீட்டர் இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 63 சதுர மீட்டர் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியாகவும், 32 சதுர மீட்டர் சமையல் கூடமாகவும், 635 சதுர மீட்டர் பரப்பளவு காலி இடமாகவும் உள்ளது. இந்த இடத்தையும் ஆக்கிரமித்துள்ளனர் . பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு இதனை காலி செய்ய வேண்டும்' என்று கூறினார். இதற்கு டாக்சி ஸ்டாண்ட் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. டாக்சி டிரைவர்கள் காலி செய்ய மறுத்ததால், கார்களை வாகனம் மூலம் தூக்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், டாக்சி டிரைவர்கள் நகராட்சி கமிஷனர் மற்றும் நகராட்சி தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைடிப்படையில், உடனடியாக காலி இடத்திலிருந்து கார்களை அப்புறப்படுத்திக்கொள்வது, டாக்சி ஸ்டாண்டிற்கு மாற்று இடம் தேர்வு செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, டிரைவர்கள் கார்களை எடுத்துச்சென்றன

Last Updated on Saturday, 17 April 2010 06:42
 

காலியிடங்கள் ஆக்கிரமிப்பு

Print PDF

தினமலர் 16.04.2010

காலியிடங்கள் ஆக்கிரமிப்பு

ஊட்டி : ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட்டில் உள்ள காலியிடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. ஊட்டியில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி அவ்வப்போது நடக்கிறது. மார்க்கெட்டிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி முறைப்படுத்த, மார்க்கெட் வியாபாரிகளே நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்புதல் அளித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கும் நிலையில், ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள், மார்க்கெட்டில் உள்ள காலியிடங்களில் ஆக்கிரமிப்பு முளைத்து வருகின்றன.மார்க்கெட்டில் உள்ள நுழைவு வாயில்கள் மற்றும் மார்க்கெட் வெளிப்புறம் உள்ள வணிக வளாகத்தின் முதல் தளம் செல்லும் படிகட்டு பகுதி காலியிடத்தை, சிலர், தற்காலிக வியாபார இடமாக மாற்றி வருகின்றனர். மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வாடகை செலுத்தி, வியாபாரம் நடத்தும் வியாபாரிகளிடையே, எவ்வித மூலதனமும் இல்லாமல் வியாபாரம் நடத்தும் இந்த 'திடீர்' வியாபாரிகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது; இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 16 April 2010 06:38
 

சித்தாபுதூர் பகுதியில் நிலம் ஆக்கிரமிப்புமீட்டுத்தர முயலுமா மாநகராட்சி?

Print PDF

தினமலர் 15.04.2010

சித்தாபுதூர் பகுதியில் நிலம் ஆக்கிரமிப்புமீட்டுத்தர முயலுமா மாநகராட்சி?

கோவை :கோவை சித்தாபுதூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான சில பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இப்பகுதி மக்கள் பிரதான ரோட்டை அடைய வழி இல்லாமல் தினமும் படாதபாடுபட்டு வருகின்றனர்.மாநகராட்சிக்கு உட்பட்ட சித்தாபுதூர் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட, தற்போது வீடுகளும் தொழில் நிறுவனங்களும் பெருகி விட்டன. இவற்றில் சில, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.முன்னர் இப்பகுதி மக்கள் சத்தி ரோட்டுக்கு செல்ல தனி ரோடு வசதி இருந்தது. ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் இந்த ரோடு சிறுக, சிறுக மூடப்பட்டு விட்டது. சைக்கிள் கூட செல்ல முடியாத அளவுக்கு இந்த பாதை குறுகி விட்டது. சத்தி ரோடு செல்ல இப்பகுதி மக்கள் சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ரோடு , திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டு, கிராஸ்கட் ரோடு சிக்னலை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது.காலை, மாலை நேரங்களில் இந்த ரோடுகளில் வாகன நெருக்கடி அதிகரித்துள்ளது. சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலின் பின்புறம் வழியாக செல்லும் ரோடு வழியாக ஜி.பி. சிக்னலை கடப்பதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. நடைபாதை வசதி இல்லாததால், நடந்து செல்பவர்களால் எளிதில் இப்பகுதியை கடக்க முடியாது.சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வழியாக பொதுமக்கள் எளிதாக சத்தி ரோட்டை அடைந்தனர். ஐயப்பன் கோவில் பின்புற ரோடு வாகன நெரிசல் இல்லாமல் இருந்தது.

தற்போது ஆக்கிரமிப்புகளால் இந்த வழிகள் முழுமையாக அடைக்கப்பட்டு 'முட்டுச் சந்து' ஆகி விட்டது; அவசர காலங்களில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், சாலை நெருக்கடியால் படாதபாடு படுகின்றனர். பொதுமக்களின் உபயோகத்துக்கு சொந்தமான மாநகராட்சி நிலத்தை யார், எத்தனை ஆண்டுகள் ஆக்கிரமித்திருந்தாலும் அத்தனையையும் அதிரடியாக அகற்றி சாதனை புரிந்து வரும் மாநகராட்சி நிர்வாகம், சித்தாபுதூர் பகுதியில் பல ஆண்டுகளாக தொடரும் அக்கிரமங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது, புரியாத புதிராக உள்ளதாக இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரனிடம் கேட்டதற்கு, ''ஆக்கிரமிப்பு பற்றிய புகார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் விரைவில் சர்வே செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வே ஆவணங்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Last Updated on Thursday, 15 April 2010 07:37
 


Page 122 of 204