Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ராமேஸ்வரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 06.04.2010

ராமேஸ்வரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. இதையொட்டி ராமேஸ்வரம் தாசில்தார் முருகேசன் தலைமையில் நேற்று தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி ஊழியர்கள் போலீசார் பாதுகாப்புடன் நேற்று ராமேஸ் வரம் பஸ் ஸ்டாண்டு துவங்கி மேலத்தெரு, கடைத் தெரு, வர்த்தகன்தெரு வழியாக வேர்கோடு வரை சென்று ரோட்டின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி.,இயந்திரம் கொண்டு அகற்றினர்.

Last Updated on Tuesday, 06 April 2010 06:20
 

அவிநாசி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் தூள் தூளாகும்: செம்மொழி மாநாட்டை ஒட்டி அகற்ற முடிவு

Print PDF

தினமலர் 06.04.2010

அவிநாசி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் தூள் தூளாகும்: செம்மொழி மாநாட்டை ஒட்டி அகற்ற முடிவு

திருப்பூர்: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, அவிநாசி - கோவை நெடுஞ்சாலை அகலப் படுத்தப்பட உள்ளது. அதற்காக, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பொதுமக்கள் குறைகேட்பு கூட் டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் சமயமூர்த்தி தலைமையில் நடந்தது. மக்களிடம் இருந்து மனுக்கள் வர தாமதமானதால், துறைகளுக்கு இடையே உள்ள சிறு பிரச்னைகள் குறித்து அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். காங்கயம் பகுதி மின்வாரிய அதிகாரி, 'புதிய மின் இணைப்புக் காக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள் ளன. ஆனால், கம்பங்கள் நடுவதற்கு, பல இடங்களில் நெடுஞ்சாலைத் துறை தடையின்மைச் சான்று வழங்க தாமதம் செய்கிறது,' என்றார்.

கலெக்டர் பதிலளிக்கையில், 'உடனடியாக அனுமதி கொடுத்து விட்டால், நீங்கள் கம்பங்களை நட்டு விடுவீர்கள். பின், அகலப்படுத்தும் போது, நெடுஞ்சாலைத்துறையினர் உங்களுக்கு பணம் செலுத்த வேண் டும். அப்போது கூட, நீங்கள் தாமதம் செய்வீர்கள். எனவே, ஆலோ சனைக்குப்பிறகு, அவர்கள் தடை யின்மைச் சான்று வழங்க நினைத் திருக்கலாம். இருப்பினும், இது குறித்து விரிவாக ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் அழகுராஜ் கூறுகையில், 'அவிநாசி ரோட்டில் அகலப்படுத்தும் பணிக்கு இடை யூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும். மின்வாரியத்தின் துரித நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்,' என்றார்.

'பணம் செலுத்தியும் இப்பிரச்னை ஓராண்டாக நீடிக்கிறது. ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி, மின்வாரியம் கிடப்பில் போடக் கூடாது. விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 'இதுமட்டுமல்ல, அவிநாசியில் ரோடு அகலப்படுத்தப்பட உள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்க உள்ளதால், அவிநாசி - கோவை ரோட்டில் போக்குவரத்து அதிகரிக்கும். 'எனவே, சாலை விரிவாக்கப் பணியை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும். மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். இப்பணியை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தப்படும்,' என்றார் கலெக்டர்.

திடீர் 'ரவுண்ட்ஸ்': குறைகேட்பு கூட்டத்துக்கு வரும் கலெக்டர், தனது சேம்பரில் இருந்து நேரடியாக கூட்ட அரங்குக்கு வந்து விடுவார். ஆனால், நேற்று திடீரென அலுவலக வளா கத்தைச் சுற்றி, பார்வையிட்டார். மனுக்கள் வாங்கும் பகுதி சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு சென்ற கலெக்டர், குப்பையை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். கற்கள் குவியலாக இருப்பதைப் பார்த்து, 'மாநகராட்சியிடம் சொல்லி சீராக அடுக்கச் சொல்லுங்கள்; அடுத்த வாரம், மனுக்கள் பெறு வதற்கு முந்தைய தினம், தண்ணீர் ஊற்றி இப்பகுதியைச் சுத்தம் செய்யுங்கள்,' என அறிவுறுத்தினார். அலுவலகத்துக்குள் பொதுமக் களுக்கு குடிநீர் வினியோகம் சரி யில்லை என புகார் எழுப்பப் பட்டிருந்தது. இதையடுத்து, குடிநீர் சுத்திகரித்து வழங்கும் இயந் திரத்தையும் சரிபார்த்து, குடிநீர் குளுமையாக வருகிறதா என பரிசோதித்தார

Last Updated on Tuesday, 06 April 2010 06:06
 

ஜான்சன்பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 05.05.2010

ஜான்சன்பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சேலம், ஏப். 4: சேலம் ஜான்சன்பேட்டையில் ஆக்கிரமிப்பு குடிசைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

÷அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 180-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

÷இந்நிலையில் இந்த நிலத்தை ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்து வீடு கட்டித் தர அரசு முடிவு செய்தது. ஆனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்களுக்கு வீடு கட்டித் தரத் தேவையில்லை என்றும் பட்டா கொடுத்தாலே போதும் என்றும் கூறி வந்தனர்.

÷இந்நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள்-அரசு அதிகாரிகள்-போலீஸôர் கலந்து கொண்ட அமைதிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

÷இக் கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். இப்பகுதியில் உள்ளவர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அவர்கள் உடனடியாக அங்கு செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

÷இந்நிலையில் சேலம் ஆர்.டி.ஓ. குழந்தைவேலு, வட்டாட்சியர் சித்ரா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் காலை 7 மணிக்கு ஜான்சன்பேட்டை பகுதிக்குச் சென்றனர். மேலும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜான் நிக்கல்சன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

÷இதையடுத்து 6 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அங்கிருந்த வீடுகள் இடிக்கப்பட்டன. முன்னதாக குடிசைகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள் உள்ளிட்ட 8 பேரை போலீஸôர் கைது செய்தனர்.

Last Updated on Monday, 05 April 2010 10:23
 


Page 124 of 204