Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

கொட்டாரத்தில் ஆக்கிரமிப்பு கடை அகற்றம்

Print PDF

தினமணி 05.05.2010

கொட்டாரத்தில் ஆக்கிரமிப்பு கடை அகற்றம்

கன்னியாகுமரி, ஏப். 4: கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் அருகே ஆக்கிரமிப்பு கடையை சனிக்கிழமை அதிகாரிகள் அகற்றினர். கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான வணிகவளாகம் அமைந்துள்ளது. இதன் அருகே பேரூராட்சி காலி இடத்தில் தனியார் ஒருவர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டும் விதமாக பெட்டிக்கடை அமைத்தார். இதனை உடனடியாக அகற்ற பேரூராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் வழங்கியது. ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதையடுத்து அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடையை அகற்றினர். கடையை அகற்றும் போது பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Last Updated on Monday, 05 April 2010 10:14
 

காணாமல் போன கண்மாய்கள் கணக்கெடுப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அரசு உத்தரவு

Print PDF

தினமலர் 05.05.2010

காணாமல் போன கண்மாய்கள் கணக்கெடுப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அரசு உத்தரவு

கம்பம் : தமிழகம் முழுவதும் உள்ள கண்மாய்கள் மற்றும் குளங்கள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தி, ஆக்கிரமிப்பு இருந்தால் நடவடிக்கை எடுத்து மீட்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான நிலையில் இருப்பதாக, புவியியல் வல்லுனர்கள் சமீபத்திய ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக அரசிற்கு அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான சிறிய கண்மாய்கள், குளங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, விளைநிலங்களாகவும், வீடுகளாகவும் மாற்றப்பட்டு விட்டது தான் நிலத்தடி நீர்மட்டம் குறைவிற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

இதனால் மழை நீர் மற்றும் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளநீர் தேங்காமல், வழிந்தோடி வீணாகிறது. ஊரைச் சுற்றியுள்ள கண்மாய் மற்றும் குளங்களில் தண்ணீர் தேங்கினால் தான், நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால், நிலத்தடி நீர் மட்டும் அபாயகரமான அளவிற்கு சென்றுள்ளது என்றும் எச்சரித்துள்ளனர்.
அதற்கு மாற்று என்ன வழி என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட கிராம கணக்கு புத்தகங்களில் உள்ள கண்மாய்கள் மற்றும் சிறிய குளங்கள் பற்றிய விபரங்களை சேகரிக்கவும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர் தேங்குமாறு செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

முதற்கட்டமாக வி...,க்கள் மற்றும் தாலுகா சர்வேயர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட ஆர்.டி.., தாசில்தார் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது....

Last Updated on Monday, 05 April 2010 06:41
 

திடீர் குப்பம் குடிசைகள் அகற்றம்

Print PDF

தினமலர் 05.05.2010

திடீர் குப்பம் குடிசைகள் அகற்றம்

சேலம்: சேலம் ஜான்சன்பேட்டை திடீர் குப்பம் பகுதியில் உள்ள குடிசைகள் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. அசம்பாவிதம் தவிர்க்க அங்கு போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

சேலம் மாநகராட்சி 12வது வார்டுக்கு உட்பட்டது ஜான்சன்பேட்டை திடீர் குப்பம். 200க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தோர் அங்கு வசித்து வந்தனர். அந்த பகுதியில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. அதேவேளையில் குப்பத்தில் இருந்து வெளியேற மாட்டோம் என அப்பகுதி மக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.ஆனால், உயர் நீதிமன்றம் குடிசைகளை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் குடிசைகளை அகற்ற சென்றபோது, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதாக உறுதியளித்தால் மட்டுமே இடத்தை காலி செய்வோம்' என, மக்கள் கூறினர். அதிகாரிகள், 'உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வந்துள்ளோம். அந்த பகுதி புறம்போக்கு நிலம் அல்ல. மாநகராட்சி எல்லைக்குள் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க முடியாது. குடிசை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்' என, உறுதியாக கூறினர்.

நேற்று காலை பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கிருந்த 187 குடிசைகள் அகற்றப்பட்டன. போலீஸ் துணை கமிஷனர் ஜான்நிக்கல்சன் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.ஆர்.டி.., குழந்தைவேலு, தாசில்தார் சித்ரா, ஆதிதிராவிட நல அலுவலர் சின்னசாமி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். அப்பகுதி மக்கள் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து ரோட்டில் வைத்தபடி, என்ன செய்வதென தெரியாமல் குழந்தைகளுடன் வெயிலில் காத்திருந்தனர்.

'ஜான்சன்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்கனவே அவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் கட்டப்படும் வீடுகளில் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும்' என, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.

Last Updated on Monday, 05 April 2010 06:38
 


Page 125 of 204