Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

கடையநல்லூர் பாப்பாங்கால்வாயில் ஏப்ரல் முதல் வாரத்தில் ஆக்ரமிப்பு அகற்றம் : தென்காசி ஆர்.டி.ஓ.அறிவிப்பு

Print PDF

தினமலர் 23.03.2010

கடையநல்லூர் பாப்பாங்கால்வாயில் ஏப்ரல் முதல் வாரத்தில் ஆக்ரமிப்பு அகற்றம் : தென்காசி ஆர்.டி..அறிவிப்பு

தென்காசி : 'கடையநல்லூர் பாப்பாங்கால்வாயில் வரும் ஏப்ரல் முதல் வாரம் ஆக்ரமிப்பு அகற்றப்படும்' என தென்காசி ஆர்.டி..மூர்த்தி கூறினார்.

கடையநல்லூர் வழியே செல்லும் பாப்பாங்குளம் கால்வாயில் ஆக்ரமிப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால் இந்த கால்வாய் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும் மழை காலங்களில் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்து விடுவது வாடிக்கையாகி விட்டது. இதனை தவிர்க்க ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கால்வாயில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தென்காசி ஆர்.டி..அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி..மூர்த்தி தலைமை வகித்தார். புளியங்குடி டி.எஸ்.பி.பாஸ்கரன், தென்காசி தாசில்தார் பரமசிவன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஆர்.டி..மூர்த்தி கூறியதாவது: ''கடையநல்லூர் பாப்பாங்கால்வாயில் 6 கி.மீ.ஆக்ரமிப்பு உள்ளது. இதில் 2 கி.மீ.தூரம் சுமார் 260 கட்டடங்கள் முழுமையான ஆக்ரமிப்பில் கட்டப்பட்டுள்ளன. சில கட்டடங்கள் பகுதி ஆக்ரமிப்பில் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்கள் கடையநல்லூர், மாவடிக்கால் பகுதியில் கால்வாயை ஆக்ரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்ரமிப்புகளை அகற்றும் பணி ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆக்ரமிப்பு செய்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. ஆக்ரமிப்பு அகற்றும் பணி குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். ஆக்ரமிப்பு அகற்றப்படும் போது போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மருத்துவ குழுவினர், தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருப்பர்'' என்று ஆர்.டி..மூர்த்தி கூறினார்.

கூட்டத்தில் வீரகேரம்புதூர் தாசில்தார் மணிபாபு, தென்காசி மண்டல துணை தாசில்தார் சுமங்கலி, துணை தாசில்தார் பீட்டர், கடையநல்லூர் உதவி பொறியாளர் மணிகண்டராஜன், நகரமைப்பு ஆய்வாளர் அப்துல்காதர், நகரசார் ஆய்வாளர் வேலுச்சாமி, தென்காசி வட்டார துணை ஆய்வாளர் செய்யதுஉமர், கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா, ஆர்..ஆதிநாராயணன், வி...கள் கடையநல்லூர் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணாபுரம் இசக்கிதுரை, வைரவன்குளம் சண்முகவேலு, கம்பனேரி புதுக்குடி நல்லகண்ணு, கடையநல்லூர் எம்.எல்..உதவியாளர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.

 

திருச்சி மாநகராட்சி நிலம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் அகற்றம்

Print PDF

தினமலர் 23.03.2010

திருச்சி மாநகராட்சி நிலம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் அகற்றம்

திருச்சி: திருச்சி வண்ணாரப்பேட்டை உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தின் ஒருபகுதியை பார்வையற்றோர் நலச்சங்கம் கடந்த 1987ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வருகிறது. தற்போது அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று மாநகராட்சி கோரிவருகிறது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

பார்வையற்றோர் பயன்படுத்தி வந்த இடத்துக்கு அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடத்தில் ஒரு பிரிவினர் சிலுவை கோவில் ஒன்றை அமைத்தனர். இதற்கு போட்டியாக அந்த இடத்துக்கு பக்கத்திலேயே மற்றொரு பிரிவினர் ஆஞ்னேயர் சிலை வைத்து கும்பிட்டு வந்தனர். இரு மதத்தின் கோயில்களும் அருகருகே இருந்ததால், அந்த பகுதி மக்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை இருந்தது.

இதையடுத்து மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்களை இடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை கோவில்களை இடிக்க பொக்லைன் இயந்திரத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் வண்ணாரப்பேட் டை வந்தனர். இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பலாம் என்பதால், உறையூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீஸார் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். போலீஸாரின் துணையோடு மாநகராட்சியினர் அந்த இரு கோவில்களையும் இடித்து லாரியில் அள்ளிச் சென்றனர். இதனால் அந்த பகுதி நேற்று காலை இரண்டு மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Last Updated on Tuesday, 23 March 2010 08:29
 

திருச்சி அரசு ஆஸ்பத்திரி அருகே 2 கோவில்கள் இடிப்பு

Print PDF

மாலை மலர் 22.03.2010

திருச்சி அரசு ஆஸ்பத்திரி அருகே 2 கோவில்கள் இடிப்பு

திருச்சி, மார்ச்.22-

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரியில் பின்புறம் மாநகராட்சிக்கு சொந்தமான 6400 சதுர அடியில் காலி இடம் உள்ளளது. இதன் அருகே சத்துணவு கூடம் உள்ளது. இந்த நிலையில் அந்த நிலத்தில் சிலர் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் கிறிஸ்தவ மாதா கோவிலையும் கட்டி வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி உச்சநீதிமன்ற உத்தரவுபடி அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வன்னாரபேட்டை இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வேலி அமைக்க முடிவு செய்தது.

இதற்காக காலி இடத்தை சுற்றி கல்தூணை அமைத்து மாநகராட்சி ஊழியர்கள் வேலி அமைக்க தொடங்கினர்.

இதற்கிடையே அந்த காலி இடத்தில் திருச்சி மாவட்ட தேசிய கண்பார்வையற்றோர் சங்கத்துக்கு, 2400 சதுர அடி இடம் உள்ளது எனவும் அந்த இடத்தை மாநகராட்சி வேலி அமைத்து கைப்பற்ற கூடாது எனவும் பார்வையற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அந்த காலி இடத்தில் குடிசை போட்டு கண் பார்வையற்றோர் 1 வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கண்பார்வையற்றோர் சங்கம் நிலம் தொடர்பான வழக்கு முடிவு 4 நாட்களில் வந்து விடும் என்று கூறப்படுகிறது. எனவே அதை தவிர்த்து மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த ஆஞ்சநேயர் கோவில், மாதா கோவில் ஆகியவற்றை பொக்லின் எந்திரம் மூலம் மாநகராட்சி கோஅபிஷேகபுரம் கோட்ட உதவி பொறியாளர் ராஜஷ் கண்ணா தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Monday, 22 March 2010 11:53
 


Page 128 of 204