Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை: கலெக்டர்

Print PDF

தினமலர் 22.03.2010

நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை: கலெக்டர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் (பொ) கருணாகரன் தலைமையில் நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் (பொ) கருணாகரன் பேசியதாவது: நீர்நிலை புறம்போக்குகளான ஏரி, குளம், வாரி, ஆறு, வாய்க்கால் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வல்லம்புதூர் ஏரியினை விரிவாக்கம் செய்ய பொதுப்பணித்துறையினர் தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். வெண்ணாற்றில் உள்ள காமாட்சியம்மன் கோயில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நில அளவை செய்து தேவையான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து நகராட்சிகள் மற்றும் டவுன் பஞ்சாயத்துகளில் அனுமதி பெறாமல் ரோட்டோரம் வைக்கப்பட்டுள்ள பல நிறுவனங்களின் விளம்பர தட்டிகளை உடனடியாக அகற்ற நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து அலவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.உயர்நீதிமன்ற உத்தரவுபடி மாவட்டத்திலுள்ள நீர்நிலைப்புறம்போக்குகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கையினை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரவிக்குமார், ஆர்.டி.., க்கள் தஞ்சாவூர் ரவீந்திரன், கும்பகோணம் செங்குட்டுவன், பட்டுக்கோட்டை மெய்யழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 22 March 2010 10:12
 

திண்டிவனத்தில் விளம்பர பேனர்களை அகற்ற உத்தரவு

Print PDF

தினமணி 19.03.2010

திண்டிவனத்தில் விளம்பர பேனர்களை அகற்ற உத்தரவு

திண்டிவனம், மார்ச் 18: திண்டிவனம் நகரில் கடைகளில் வைக்கப்பட்டுள்ள புகையிலை பொருள்கள் விளம்பர பேனர்களை மூன்று நாள்களுக்குள் அகற்றவேண்டும் என விழுப்புரம் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார்.

÷திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் மற்றும் பங்க் கடைகளில் ஆய்வுசெய்த அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை விளம்பர பேனர்களை அகற்ற உத்தரவிட்டார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜரத்தினம் தலைமையில் வந்த பணியாளர்கள் பேனர்களை அப்புறப்படுத்தினர்.

÷இதையடுத்து கிருஷ்ணராஜ் செய்தியாளர்களிடம் கூறியது: புகையிலை தடுப்புச் சட்டத்தின்படி பொது இடங்களில் புகை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதிலும் இதுவரை இச் சட்டத்தை மீறிய 5000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் நான்கரை லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

÷புகையிலை குறித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்ற கடை உரிமையாளர்களுக்கு மூன்று நாள்கள் அவகாசம் அளிக்கப்படும்.

÷புகையிலை பலகைகள் வைத்தால் அதன் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதமும் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், கடைகளில் வைத்திருப்பவருக்கு ரூ. 3 ஆயிரம் அபராதமும், 1 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

÷பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் 100 மீட்டர் தொலைவுக்கு புகையிலை பொருள்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதை பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும்.

÷விழுப்புரம் மாவட்டத்தை புகையில்லா மாவட்டமாக அறிவிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

 

Last Updated on Friday, 19 March 2010 10:54
 

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 19.03.2010

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை, மார்ச் 18: திருவண்ணாமலை தேரடி வீதியில் ஆக்கிரமிப்புகளை போலீஸôர் துணையோடு அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் எதிரே தேரடியில் உள்ள சக்கரகுளம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனை

மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டபோது, 20 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த பழைமையான மாணிக்கவாசகர் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அதைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டார். அங்கிருந்த ஒரு கடை மட்டும் நீதிமன்றத் தடையாணையால் அகற்றப்படவில்லை.

இந்நிலையில் டிஎஸ்பி வைத்தியலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.விஸ்வநாதன், கோட்டாட்சியர் பத்மா, வட்டாட்சியர் சுப்பிரமணி, நகராட்சி ஆணையர் சேகர் ஆகியோர் நேரில் சென்று வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அங்கிருந்த கட்டடங்கள் அகற்றப்பட்டன. சம்பவ இடத்தில் ஏராளமான போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 


Page 129 of 204