Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ராமேஸ்வரத்தில் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 16.03.2010

ராமேஸ்வரத்தில் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் நகரில் பஸ் ஸ்டாண்டில் துவங்கி, தேசிய நெடுஞ்சாலை, நான்குரத வீதிகள், அக்னிதீர்த்த கடற்கரை, கடைத் தெரு, மார்க்கெட் தெரு,ரயில்வே பீடர் ரோடு, வேர்கோடு பகுதிகளில் ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன.

மேலும் ,ரோட்டின் இரண்டு பக்கத்திலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், பொதுமக்கள் தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். ராமேஸ்வரம் தீவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ,பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில், ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து ராமேஸ்வரம் நகரில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் நாளை(மார்ச் 18) அகற்றப்பட உள்ளது. "பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி ,ஒத்துழைப்பு தரவேண்டும்,' என, ராமேஸ்வரம் தாசில்தார் முருகேசன், நகராட்சி கமிஷனர் போஸ் தெரிவித்துள்ளனர்.

Last Updated on Tuesday, 16 March 2010 09:41
 

சாலையோர ஆக்கிரமிப்பு வருவாய் துறையினர் ஆய்வு

Print PDF

தினமலர் 15.03.2010

சாலையோர ஆக்கிரமிப்பு வருவாய் துறையினர் ஆய்வு

பந்தலூர் : பந்தலூர், கூடலூர் தாலுகாக்களில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு குறித்து, வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை, ஊராட்சிக்கு உட்பட்ட சாலை, கிராமப்புற சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு, பொதுப்பணித் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் செல்லும் பகுதியில் ஏற்படுத்தியுள்ள ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்தப்படும் கூட்டத்தில் சமர்பிக்க, அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பந்தலூர் - சோலாடி மாநில நெடுஞ்சாலை, எலியாஸ்கடை - நம்பியார்குன்னு சாலை, நெலாக்கோட்டை - பாட்டவயல் சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நெல்லியாளம் நகராட்சி, சேரங்கோடு மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப்புற சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து சர்வே செய்து விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீராம், பந்தலூர் தாசில்தார் விஜயகுமாரி, பிர்கா சர்வேயர் சேவியர், எருமாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன், வி...,க்கள் தனராஜ், குமார், உதவியாளர்கள் ராஜேந்திரன், தங்கப்பன் பங்கேற்றனர்.

கூடலூர் தாலுகா பகுதியில் ஆர்.டி.., ஹரிகிருஷ்ணன் தலைமையில், தாசில்தார் ரெங்கநாதன், தாலுகா சர்வேயர் போஜன் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, பேரூராட்சி சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Last Updated on Monday, 15 March 2010 07:05
 

பஸ் ஸ்டாண்டு அமைக்க ஆக்ரமிப்பு அகற்றும் பணி

Print PDF

தினமலர் 15.03.2010

பஸ் ஸ்டாண்டு அமைக்க ஆக்ரமிப்பு அகற்றும் பணி

குளித்தலை: குளித்தலை அருகே தோகமலையில் புதிய பஸ் ஸ்டாண்டு அமைக்கவும், மாநில நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காகவும் ஆக்ரமிப்பு அகற்றும் பணிகள் நடந்தன.குளித்தலை அருகே தோகமலையில் புதிய பஸ் ஸ்டாண்டு அமைக்கும் பணிக்காக, 27.24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த வாரம் டி.ஆர்.டி.., திட்ட அலுவலர் கவிதா முன்னிலையில் பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவின் பேரில், புதிய பஸ் ஸ்டாண்டு அமைக்கவும், மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக சாலை ஆக்ரமிப்புக்களை அகற்றும் பணி நடந்தது.

டி.ஆர்.டி.., திட்ட அலுவலர் கவிதா, தாசில்தார் ஜெயமூர்த்தி, யூனியன் கமிஷனர்கள் ரகுபதி, மணி, ஆர்.., ஜீவன், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் முன்னிலையில், தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டின் உள்புறம் இருந்த 19 கடைகள், சாலையின் இருபுறமும் இருந்த 50க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.

பஸ் ஸ்டாண்டில் காலனி கடைகள் நடத்தி ஒன்பது பேர், பேச்சுவார்த்தைக்குப் பின் தாங்களாகவே முன் வந்து கடைகளை அகற்றிக் கொண்டனர். இவர்கள் தங்களுக்கு புதிய பஸ் ஸ்டாண்டில் முன் உரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஆக்ரமிப்பு அகற்றுப்பணியின் போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Last Updated on Monday, 15 March 2010 06:46
 


Page 131 of 204