Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

விதிகளை மீறி உயரமாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை

Print PDF

தினமணி 12.03.2010

விதிகளை மீறி உயரமாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை

மதுரை
, மார்ச் 11: பாதுகாப்பு கருதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி விதிமுறை மீறி உயரமாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியது:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி 1994}ம் ஆண்டுக்கு முன்னர் உரிய ஒப்புதல் பெற்று கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே அந்தக் கட்டடங்களை இடிக்க முடியாது.

பாதுகாப்பு தொடர்பாக விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க போலீஸ் சார்பில் எவ்வித நோட்டீஸýம் மாநகராட்சிக்கு வழங்கப்படவில்லை.

மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டருக்கு உயரமாக கட்டடங்கள் கட்டக் கூடாது என்று அரசு உத்தரவிட்ட பின்னரும் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது மாநகராட்சி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.

Last Updated on Friday, 12 March 2010 09:25
 

ரங்கப்பிள்ளை வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 12.03.2010

ரங்கப்பிள்ளை வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுச்சேரி
, மார்ச் 11: புதுச்சேரி ரங்கப்பிளளை வீதியில் ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை போக்குவரத்து போலீஸôரால் அகற்றப்பட்டது.

÷புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் பெரியகடை மார்க்கெட் உள்ளது. இம்மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். ÷

இந்த வீதியில் ஆக்கிரமிப்புகளால் மார்க்கெட்டுக்கு வருவோரும், அவ்வழியாக வந்து செல்வோரும் அவதிப்படுவதாக போக்குவரத்து காவல் கண்காணிபாளர் ஜி.பி.பழனிவேலுவுக்கு புகார்கள் வந்தது.

÷இதைத் தொடர்ந்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிவேலு தலைமையிலான போலீஸôர் அவ்வீதியில் உள்ள கடைகளின் முன்பு வைக்கப்பட்டு இருந்த போர்டுகள், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோரக் கடைகள், 3 சக்கர சுமைத் தூக்கும் வண்டிகள், தள்ளு வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர்.

Last Updated on Friday, 12 March 2010 09:20
 

ஆக்கிரமிப்பு அகற்றிய புள்ளி விபரம் சேகரிப்பு

Print PDF

தினமலர் 12.03.2010

ஆக்கிரமிப்பு அகற்றிய புள்ளி விபரம் சேகரிப்பு

பெருந்துறை: பெருந்துறை நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றியது குறித்த புள்ளி விபரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். பெருந்துறையில் நாளுக்கு நாள் வர்த்தக நிறுவனங்கள் பெருகி வருகிறது. நிறுவனங்கள் தங்கள் விளம்பர பலகைகளை ரோட்டை ஆக்கிரமித்து வைத்துள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மற்றும் மக்கள் செல்ல போதுமான இட வசதியின்றி, விபத்துகள் ஏற்படுகின்றன. பெருந்துறை டி.எஸ்.பி., ஜெயராமன், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், வணிகர் சங்கங்களுடன் ஆலோசித்தனர். இதன் பயனாக கடை வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஒருங்கிணைந்த ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கைக்கு பல முறை தேதி குறிக்கப்பட்டது. ஆனால் ஒரு அதிகாரி இருந்தால், மற்றவர் இருப்பதில்லை. அதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. கடந்த 4ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்ற முடிவானது. இது சம்பந்தமாக பஞ்சாயத்து சார்பில் தண்டோரா போடப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் டி.எஸ்.பி., ஜெயராமன் போலீஸாருடன் கடை, கடையாக சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறினார். ஒரு சிலர் ஆக்கிரமிப்புகளை எடுத்துக் கொண்டனர். பலர் எடுக்கவில்லை. இதையடுத்து 4ம் தேதி ஒருங்கிணைந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. ஆனால், முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றியதாக கூறி கடைக்காரர்கள் கடந்த 6ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தினர். தற்போது பஞ்சாயத்துகள் சார்பில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட கடைகள் பற்றிய புள்ளி விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Last Updated on Friday, 12 March 2010 06:57
 


Page 132 of 204