Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் ஆக்ரமிப்பு அகற்றம் வருவாய் துறையினர் அதிரடி

Print PDF

தினமலர் 24.02.2010

நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் ஆக்ரமிப்பு அகற்றம் வருவாய் துறையினர் அதிரடி

நாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்த ஆக்ரமிப்புகளை, வருவாய் துறையினர் அப்புறப்படுத்தினர். சைக்கிள், டூவீலர் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பஸ் ஸ்டாண்ட் நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு மப்சல் மற்றும் டவுன் பஸ்கள் நுழைந்து செல்கின்றன. இப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 150 கடைகளும் உள்ளன. பஸ் ஸ்டாண்டுக்குள் சென்னை, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், நாகர்கோயில், திருச்செந்தூர், ஒசூர் உள்ளிட்ட மாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் பஸ்கள் வந்தும், இங்கிருந்து சென்றும் வருகிறது. மொத்தம் 422 அரசு மப்சல் மற்றும் 169 டவுன் பஸ்சும், 130 தனியார் மப்சல் மற்றும் 9 டவுன் பஸ்சும் என மொத்தம் 730 பஸ்கள் நாள் ஒன்றுக்கு இந்த பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், மக்கள் என ஒயிரக்கணக்கானோர் நாமக்கல் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். நகராட்சிக்கு சொந்தமான ஒரு சில கடைகள், தங்களது எல்லையை தாண்டி வராண்டாவை ஆக்ரமிப்பு செய்து கடையை நடத்தி வருகின்றனர். பஸ் ஸ்டாண்டில் நிழற்குடை இல்லாததால், கடைமுன் உள்ள போர்டிகோவில் மக்கள் குவிகின்றனர். ஆனால் போர்டிகோவை கடைக்காரர்கள் ஆக்ரமிப்பு செய்துள்ளதால் பயணிகள், பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்
.

சில நேரங்களில் கைக்குழந்தையுடன் பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என பலரும் வெயிலில் நிற்கும் அவலம் ஏற்படுகிறது. அவ்வப்போது நகராட்சி சார்பில் ஆக்ரமிப்பு அகற்றுவதும், மீண்டும் சில்லறை வியாபாரிகள் ஆக்ரமிப்பு செய்வதும் அடிக்கடி அரங்கேற்றி வருவது தொடர்கதையாக நடக்கிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் செய்யப்பட்டது. தாசில்தார் குப்புசாமி தலைமையில் வருவாய் துறையினர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்த ஆக்ரமிப்புகளை அகற்றினர். தள்ளுவண்டி கடைகள், தட்டுக்கூடை வியாபாரிகள், சில்லறை வியாபாரிகளின் பழக்கூடைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். சைக்கிள், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். "இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், ஆக்ரமிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் வருவாய் துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.�

Last Updated on Wednesday, 24 February 2010 07:01
 

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 24.02.2010

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் சன்னிதி தெருவில் நேற்று சாலையோரமிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட் டன.காஞ்சிபுரம் நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் வரதராஜப் பெருமாள் கோவில் சன்னிதி தெருவில் இருபுறமும் அழகிய கைப்பிடியுடன் கூடிய நடைபாதை, தெருவின் இருபுறமும் அழகிய தூண்கள் அமைக்கப்பட உள்ளன.அதையொட்டி, சன்னிதி தெருவில் இருபுற முமி ருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது.நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Last Updated on Wednesday, 24 February 2010 06:58
 

அனுமதிபெறாமல் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடத்திற்கு 'சீல்'

Print PDF

தினமலர் 24.02.2010

அனுமதிபெறாமல் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடத்திற்கு 'சீல்'

கோவை: ஆவராம்பாளையம் பாரதி காலனியில், அனுமதியின்றி கட்டப்பட்ட நான்கு தள அடுக்குமாடி குடியிருப்பிற்கு, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் "சீல்' வைத்தனர். கட்டட கட்டுமான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ஆவராம்பாளையம் பாரதி காலனி பகுதியில், சரஸ்வதி என்பவருக்கு சொந்தமான ஐந்து சென்ட் இடத்தில், மாநகராட்சி அனுமதியின்றி, அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதற் கான பணிகள், சில மாதங்களுக்கு முன் துவங் கியது. தரைதளத்திலிருந்து, நான்கு தளத்திற்கும், மேற்புற கான்கிரீட் போடப்பட்டு, பணிகள் வேகமாக நடந்தது. கட்டடம் கட்ட மாநகராட்சி நகரமைப்பு பிரிவிலிருந்து அனுமதி பெறவில்லை. மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர்கள் புவனேஸ்வரி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர், கட்டட உரிமையாளர் சரஸ்வதிக்கு எச்சரிக்கை விடுத்தனர். முறையாக மாநகராட்சியில் விண்ணப்பித்து, கட்டட அனுமதி பெற வேண்டும்; மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை முறையாக செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.கட்டுமான பணி நடக்கும் பகுதியில் இருந்த செங்கற்கள், ஜல்லிகற்கள், மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கட்டட கட்டுமான பணிகள் தொடராமல் இருக்க கட்டடத்திற்கு "சீல்' வைக்கப்பட்டது. மாநகராட்சி விதிகளை மீறி பணி மேற்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 24 February 2010 06:50
 


Page 139 of 204