Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

விருதுநகரில் இனி வாரம்தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 18.02.2010

விருதுநகரில் இனி வாரம்தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விருதுநகர் :விருதுநகரில் இனி வாரம் தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.அவர்கள் தெரிவித்ததாவது: விருதுநகரில் பல இடங்களுக்கும் மினிபஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் மேலரதவீதி, தெற்கு ரதவீதி வழியாக மட்டும் வந்து செல்கின்றன. இந்த பஸ்களை மெயின் பஜார் வழியாக வரவோ அல்லது செல்லவோ நடவடிக்கை எடுத்தால் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகள் தானாக அகன்றுவிடும். அதுபோல, நகராட்சிப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் கடைகள் வைத்திருப்பவர்களிடம் மட்டுமே கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என டெண்டர் விடப்படுகிறது. ஆனால் டெண்டர் எடுத்தவர்களோ நகராட்சி பகுதிகள் முழுவதும் கடை வைத்துள்ளவர்களிடம் வசூல் செய்கிறார்கள். இதனாலும் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கின்றன. எனவே நகராட்சிப் பகுதியில் டெண்டர் எடுத்துள்ள பகுதிகளில் மட்டுமே கடைகள் போடவும், வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டரின் உத்தரவுபடி விருதுநகரில் இனி வாரம்தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமென்றும், அடுத்த வாரம் பழைய அருப்புக்கோட்டை ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 18 February 2010 07:23
 

குளத்தை அழகுபடுத்த 59 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு :ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

Print PDF

தினமலர் 18.02.2010

குளத்தை அழகுபடுத்த 59 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு :ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒக்கபிறந் தான் குளத்தை அழகுப் படுத்தும் பணி விரைவில் துவக்கப்பட உள்ளது.பெரியகாஞ்சிபுரம் ஒக்கபிறந்தான் குளம் தெருவில் ஒக்கபிறந்தான் குளம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெறும்.விழாவின் பத்தாம் நாள் அன்று திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, ஏலவார்குழலி அம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு ஒக்கபிறந்தான் குளத்தை சென்றடைவார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.காமாட்சியம்மன், கன்னியம்மன் ஆகியோரும் அங்கு எழுந்தருள்வர். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இக்குளம் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

வேகவதி ஆற்றிலிருந்து பிரியும் புத்தேரி கால்வாய் ஒக்கபிறந்தான் குளத்தை சென்றடைகிறது. குளம் நிரம்பியதும் உபரி நீர் மஞ் சள் நீர் கால்வாய் வழியே வெளியேறும்.மஞ்சள் நீர் கால்வாய் காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் செல்கிறது. ஒக்கபிறந்தான் குளத்தில் எப் போதும் தண்ணீர் இருந்ததால் அப்பகுதியில் நிலத் தடி நீர்மட்டம் குறையாமலிருந்தது.குளம் மக்களுக்கு பல் வேறு வகையில் உபயோகமாக இருந்தது. மக்கள் நீராடுவதற்கு வசதியாக குளத் தின் கரைகளில் படிக்கட்டுகள் கட்டப்பட்டிருந்தன.நாளடைவில் குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. பராமரிப்பில்லாமல் குளம் தூர்ந்தது. படிக்கட்டுகள் மணலில் புதைந்தன.காஞ்சிபுரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.மக்கள் தொகை அதிகரிப்பால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அதிகரித்தது.

30
ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் போதுமானதாக இல்லை.இதனால் நகர் முழுவதும் பாதாள சாக்கடையில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேற துவங்கின.அதை சரி செய்ய முடியாததால் பாதாள சாக்கடை கழிவு நீர் நேரடியாக மழை நீர் கால்வாயில் வெளியிடப்பட்டது. அவை நேரடியாக ஒக்கபிறந்தான் குளம் மற்றும் மஞ்சள் நீர் கால்வாயில் கலந்தன.இதனால், ஒக்கபிறந் தான் குளம் மற்றும் மஞ்சள் நீர் கால்வாய் கழிவு நீர் தேக்கமாக மாறியது.. எனவே குளத்தை தூர் வாரி சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.சமீபத்தில் காஞ்சிபுரம் நகரில் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக முதல்வர் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். அதில் 59 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒக்கபிறந்தான் குளத்தை சீரமைக்க 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியில், குளத்தை தூர் வாரி, குளத்தை சுற்றி நடைபாதை மற்றும் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அப்பகுதியில், மஞ்சள் நீர் கால்வாயை சீரமைத்து இருபுறமும் தடுப்பு சுவர் கட்ட ஒரு கோடியே 93 லட்சம் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது.

நேற்றுமுன்தினம் ஒக்கபிறந்தான் குளத்தை கலெக் டர் சந்தோஷ்கேமிஸ்ரா நேரில் சென்று பார்வையிட்டார். அவரிடம் புதுப் பிக்கப்பட உள்ள ஒக்கபிறந்தான் குளம் மாதிரி வரைபடத்தை பொதுப் பணித்துறை(நீர்பாசனம்) செயற்பொறியாளர் சிவபெருமாள் காண்பித்தார். அப்போது குளத்தில் தொடர்ந்து கழிவு நீர் கலப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். அதை கேட்ட கலெக்டர் நகராட்சி கமிஷனர் மகாலட்சுமிதேவியிடம் உடனடியாக குளத்தில் கழிவு நீர் கலப் பதை தடுத்து நிறுத்தும்படி உத்தரவிட்டார்.அதன்பின் கலெக்டர், குளத்தில் கழிவு நீர் கலக் கும் பகுதியைப் பார்வையிட்டார்.அப்போது பாரதிநகர் மக்கள் அப்பகுதியில் உள்ள நெல் அரவை மில்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அதிக அளவில் குளத்தில் கலப்பதாக தெரிவித்தனர்.

உடனே கலெக்டர் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு சம்மந் தப்பட்ட நெல் அரவை ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.பொதுமக்களிடம் குப்பைகளை கண்ட இட்தில் கொட்டாதீர்கள். இங்கு குளத்தை தூர் வாரி அழகிய பூங்கா அமைக்க உள்ளோம். அதை நீங்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.பின்னர் அதிகாரிகளிடம் குளத்தை சுற்றியுள்ள ஆக் கிரமிப்பாளர்களிடம் ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறுங்கள்.அவர்கள் அகற்றாவிட்டால் துறை ரீதியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப் படுவதுடன், அதற்குரிய செலவு சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுங்கள் என்றார்.

Last Updated on Thursday, 18 February 2010 07:01
 

விருதுநகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றல்

Print PDF

தினமணி 17.02.2010

விருதுநகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றல்

விருதுநகர், பிப். 16: விருதுநகரில் கடை வீதிகள் மற்றும் முக்கிய இடங்களில் ஆக்கிரமித்திருந்தவைகளை நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்தினர்.

விருதுநகர் மாவட்ட நிலையில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன் வலியுறுத்தினார்.

இதையொட்டி விருதுநகரிலுள்ள முக்கிய இடங்கள் மற்றும் கடை வீதிகளில் ஆக்கிரமித்திருந்த ஆக்கிரமிப்புக்களை அவரவர் தானகவே அகற்ற வேண்டும் என்றும், அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நகரில் பல இடங்களில் ஆக்கிரமிப்புக்களை கடைக்காரர்களே அகற்றி விட்டனர்.

கடை வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தவை, தேசப்பந்து மைதானம் உள்ளிட்ட இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்புப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ராமசுப்பு, உதவிப் பொறியாளர்கள் புதிய நாயகம், நவநீதகிருஷ்ணன், நகராட்சித் திட்ட அதிகாரி மாலதி ஆகியோர் பார்வையிட்டனர்.

விருதுநகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பாரபட்சம் கூடாது என்று சாலையோர வியாபாரிகள் மற்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Wednesday, 17 February 2010 09:15
 


Page 143 of 204