தினமலர் 11.02.2010
ஆக்கிரமிப்பாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சவுண்டையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொது இடங்கள், கோயில், தேவாலயங்கள் பள்ளிவாசல்கள், குருத்துவாரா ஆகிய மத சம்பந்தப்பட்ட இனங்கள் வாயிலாக அனுமதியின்றி செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி பகுதி உள்ளிட்ட 9 தாலுகாகளிலும் மேற்படி மத சம்பந்தப்பட்ட இனங்கள் மூலம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களே பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி உடனடியாக அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்திக் கொள்ளாவிட்டால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்படும்.