Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிப்பாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 11.02.2010

ஆக்கிரமிப்பாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சவுண்டையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொது இடங்கள், கோயில், தேவாலயங்கள் பள்ளிவாசல்கள், குருத்துவாரா ஆகிய மத சம்பந்தப்பட்ட இனங்கள் வாயிலாக அனுமதியின்றி செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி பகுதி உள்ளிட்ட 9 தாலுகாகளிலும் மேற்படி மத சம்பந்தப்பட்ட இனங்கள் மூலம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களே பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி உடனடியாக அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்திக் கொள்ளாவிட்டால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்படும்.

Last Updated on Thursday, 11 February 2010 08:13
 

ஆக்ரமிப்பு அகற்றம் தொடர்கிறது: 14 குடிசை வீடுகள் அகற்றம்

Print PDF

தினமலர் 11.02.2010

ஆக்ரமிப்பு அகற்றம் தொடர்கிறது: 14 குடிசை வீடுகள் அகற்றம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் நேற்று ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், திடீர் கடைகள் அகற்றப்பட்டன.தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்டங்களுக்கு இடையூறாக இருந்து வரும் ஆக்ரமிப்புகள், மக்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்ரமிப்புகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அகற்றி வருகிறது.நேற்று மாநகராட்சி முதுநிலை நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், காந்திமதி, ஆறுமுகம், நாகராஜன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி பகுதியில் சில இடங்களிலும் ஆக்ரமிப்புகளை அகற்றினர்.சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி வாறுகால் அமைப்பதற்கு இடையூறாக இருந்த குரூஸ்புரம் பகுதியில் 14 குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் அகற்றப்பட்டது. திருச்செந்தூர் ரோட்டில் கால்வாய் அமைப்பதற்கு இடையூறாக இருந்த ஓட்டு வீடு இடிக்கப்பட்டது. தேவர்புரம் ரோட்டில் திடீரென முளைத்த திடீர் கடைகள் அகற்றப்பட்டன.அரசு திட்டங்களுக்கு இடையூறாக மற்றும் மக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்ரமிப்புகள் முழுமையாக அகற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக முதுநிலை நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 11 February 2010 08:05
 

பொது இடங்களில் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள அறிவுறுத்தல்

Print PDF

தினமணி 10.02.2010

பொது இடங்களில் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள அறிவுறுத்தல்

திருச்சி, பிப். 9: திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதியின்றி செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாகவே உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெருக்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கோயில், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், குருத்துவாரா ஆகிய மத சம்பந்தப்பட்ட இனங்கள் வாயிலாக அனுமதியின்றி செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதி உள்பட 9 வட்டங்களிலும் மத சம்பந்தப்பட்ட இனங்கள் மூலம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்களே பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி உடனடியாக அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்திக் கொள்ளாவிட்டால் மாவட்ட நிர்வாகம் மூலம் ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்படும் என்றார் அவர்.

Last Updated on Wednesday, 10 February 2010 11:53
 


Page 146 of 204