Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு திட்டச்சாலை மீட்பு; மாநகராட்சி அதிரடி

Print PDF

தினமலர் 05.02.2010

ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு திட்டச்சாலை மீட்பு; மாநகராட்சி அதிரடி

கோவை : கோவை நகரில் இணைப்புச் சாலை மற்றும் திட்டச் சாலையை ஆக்கிரமித்திருந்த தனியார் கட்டடங்கள் நேற்று இடித்து அகற்றப்பட்டன. கோவை நகரிலுள்ள சுங்கம், கருணாநிதி நகர் அருகே முனுசாமி கார்டன் பகுதியில், தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதையொட்டி, 30 அடி திட்ட சாலை அமைந்துள்ளது. திட்ட சாலைக்காக தனியார் கட்டுமான நிறுவனம் 200 அடி நீளம் கொண்ட பகுதியை ஏற்கனவே மாநகராட்சிக்கு தான கிரயம் செய்து கொடுத்துள்ளது. ஆனால், அதன்படி செயல்படாமல், தான கிரயம் செய்து கொடுத்த பகுதியையும் ஆக்கிரமித்து கட்டடம், தண்ணீர் தொட்டியை கட்டியிருந்தது.

இதை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது. நீண்ட நாட்களாகியும் ஆக்கிரமிப்பு எடுக்கப்படாததால், மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேற்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட பகுதியை புல்டோசர் கொண்டு இடித்து அகற்றினர். இதே பகுதியில், மற்றொரு தனியார் நிறுவனமும் 200 வீடுகளை கட்டியுள்ளது. இந்நிறுவனம், அப்பகுதியிலுள்ள இணைப்புச் சாலையை ஆக்கிரமித்து 300 சதுர அடியில் "ஷெட்' அமைத்திருந்து. இதற்கும் மாநகராட்சி சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது; எனினும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இந்த ஆக்கிரமிப்பும் நேற்று இடித்து அகற்றப்பட்டது. இதன் மூலம், திட்டசாலைக்கு கிழக்கு நோக்கி 80 அடி ரோடு இணைப்பும், இணைப்புச் சாலைக்கு தெற்கு நோக்கி 100 அடி இணைப்பும் கிடைத்துள்ளது. ஆக்கிரமிப்பு பகுதிகள் மீட்கப்பட் டுள்ளதால், அப்பகுதி மக்கள் இரண்டு சாலைகளையும் பயன்படுத்த ஏதுவாக மாநகராட்சி நிர்வாகம் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

Last Updated on Friday, 05 February 2010 06:31
 

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 04.02.2010

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரூர், பிப்.3: அரூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. அரூர் வழியாக சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, கோவை, வேலூர், சென்னை உள்ளிட்ட தொலைதூர இடங்களுக்கு செல்லும் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. அதனால் அரூர் நகர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் பல வந்தன. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரூர் பழையப்பேட்டை பாலம் அருகே தொடங்கி கடைவீதி, பஸ் நிலையம், வர்ணதீர்த்தம் வழியாக கச்சேரிமேடு வரையிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 04 February 2010 11:12
 

தி.நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: மேயர் உறுதி

Print PDF

தினமலர் 04.02.2010

தி.நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: மேயர் உறுதி

தி.நகர் : ""தி.நகரில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும்,'' என, மேயர் சுப்ரமணியன் பேசினார். சென்னை 122வது வார்டுக்கு உட்பட்ட பொது மக்களுக்கு, இலவச கலர் "டிவி' வழங்கும் விழா, அசோக் நகர் மூன்றாவது அவென்யூவில் நேற்று நடந்தது. மேயர் சுப்ரமணியன் தலைமை வகித்து பேசியதாவது: சென்னையில் இதுவரை ஐந்து லட்சத்து 40 ஆயிரம் கலர் "டிவி'கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் தி.நகரில், ஆறாயிரத்து 991 "டிவி'க்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்த தொகுதியில் மொத்தம் 55 ஆயிரத்து 67 "டிவி'கள் வழங்கப்பட்டுள்ளன. தி.நகரில் இரு பூங்காப் பணி, இரண்டு கோடியே 55 லட்ச ரூபாய் செலவிலும், வடபழனியில் 24 மணி நேர மருத்துவமனை ஒரு கோடி 25 லட்ச ரூபாயிலும், 74 தார்ச்சாலைப் பணிகள் ஐந்து கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தாண்டு மட்டும் இங்கு 32 கோடியே 12 லட்ச ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த இரு தினங்களுக்கு முன், தி.நகரில் ஆக்கிரமிப்பு செய்திருந்த, 15 சாலையோர கடைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து இப்பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.இவ்வாறு மேயர் பேசினார்.

Last Updated on Thursday, 04 February 2010 06:33
 


Page 150 of 204