Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளை சீரமைக்க நகராட்சிக்கு உத்தரவு

Print PDF

தினமலர் 04.02.2010

ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளை சீரமைக்க நகராட்சிக்கு உத்தரவு

கம்பம்: கம்பம் நகராட்சியில், தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப் பட்ட பகுதிகளை, நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கம்பம் மெயின்ரோட்டில் சில வாரங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டன. இதில், நூற்றுக்கணக்கான கடைகள், குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றிய பிறகு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், செலவாகும் நிதியை யார் ஏற்றுக் கொள்வது என்பது குறித்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளவில்லை. மெயின்ரோட்டில் 1.5 கி.மீ., தூரத்திற்கு ரோட்டின் இரண்டு பக்கமும் இடிக்கப்பட்ட கட்டட இடிபாடுகளை விட்டு சென்றுவிட்டனர். இதனால் ரோட்டின் இருபுறமும் சாக்கடையை சுத்தம் செய்வதில் நகராட்சி திணறி வருகிறது. சாக்கடை கட்ட வேண்டும் என்றால் இரண்டு கோடி ரூபாய் வரை செலவாகும் என்று நகராட்சி தெரிவித்துள்ளது. அந்த அளவிற்கு நிதி நகராட்சியில் நிதி கிடையாது

இந்நிலையில் தேனி மாவட்டத்திற்கு துணை முதல்வர் ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு ரோட்டை சுத்தமாக வைக்க நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட கலெக்டர் முத்துவீரன் உத்தரவிட்டுள்ளார். நகராட்சி நிர்வாகம், தற்போது ரோட்டின் இரு பக்கங்களிலும் உள்ள கட்ட இடிபாடுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட துவங்கியுள்ளது. இருந்த போதும் சாக்கடை கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

Last Updated on Thursday, 04 February 2010 06:08
 

நகராட்சி இடத்தை பயன்படுத்திய தனியார் பள்ளியின் கதவுக்கு சீல்

Print PDF

தினமணி 03.02.2010

நகராட்சி இடத்தை பயன்படுத்திய தனியார் பள்ளியின் கதவுக்கு சீல்

வாலாஜாபேட்டை, பிப்.2:ஆர்க்காட்டில் பூங்காவுக்கு என நகராட்சி ஒதுக்கியிருந்த இடத் தை ஆக்கிரமித்த தனியார் பள்ளியின் கதவுக்கு வட்டாட்சியர் திங்கள்கிழமை சீல் வைத்தார்.

ஆர்க்காடு நபிஷா நகரில் வீட்டுமனை லே-அவுட் போடும் போது நகராட்சி பூங்காவுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினர்,அந்த இடத்தை பள்ளிக்கு சென்றுவரும் பாதை மற்றும் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர்.

இதனால் பொதுமக்களுக்கும், தனியார் பள்ளி நிர்வாகத்திற்கும் பிரச்னை ஏற்பட்டது. இச்சூழலில் சிலர் பூங்கா மைதானத்தில் கோயில் கட்டுவதற்காக மேடை அமைத்தனர். தகவலறிந்த ஆர்க்காடு வட்டாட்சியர் ராணி, நகராட்சி ஆணையர் பாரிஜாதம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கோயில்கட்டுவதற்காக அமைக்கப்பட்ட மேடையை அகற்றினர். அத்துடன் அப்பள்ளி நிர்வாகம் அமைத்திருந்த பள்ளிக் கதவுக்கும் சீல் வைத்தனர்.

Last Updated on Wednesday, 03 February 2010 10:59
 

ஆக்கிரமிப்பு அகற்றம்! பொள்ளாச்சி கவுன்சிலர்கள் 'சிக்னல்' : நகராட்சி அதிகாரிகள் அதிரடி 'சர்வே'

Print PDF

தினமலர் 03.02.2010

ஆக்கிரமிப்பு அகற்றம்! பொள்ளாச்சி கவுன்சிலர்கள் 'சிக்னல்' : நகராட்சி அதிகாரிகள் அதிரடி 'சர்வே'

பொள்ளாச்சி : பொள்ளாச்சி திரு.வி.., மார்க்கெட் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் "சர்வே' செய்யும் பணியை நிறைவு செய்துள்ளனர். கவுன்சிலர்கள் "சிக்னல்' கொடுத்ததால் சிக்கல் இல்லாமல் பிரச்னை முடிகிறது.

பொள்ளாச்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டதையடுத்து போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. மேலும், இரண்டு பஸ் ஸ்டாண்டையும் இணைக்க சுரங்க நடைபாதை அமைக்கும் பணிநடக்கிறது. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பழைய பஸ் ஸ்டாண்டில் பின்பக்கம் "டூ-வீலர் பார்க்கிங்' ஸ்டாண்ட் அகற்றி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்க நடைபாதை பணி நிறைவடைந்ததும், சென்டர் மீடியன் அமைக்கப்படுகிறது. அப்போது, பழைய பஸ் ஸ்டாண்ட் பின்பக்கமுள்ள திரு.வி.., மார்க்கெட் ரோடு போக்குவரத்துக்கு பயன்படுத்தவுள்ளதால், அந்த ரோட்டில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பஸ் ஸ்டாண்டில் இருந்து அகற்றப்பட்ட டூ-வீலர் பார்க்கிங் ஸ்டாண்டை, திரு.வி.., மார்க்கெட்டில் பின்பகுதியில் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். மார்க்கெட்டில் நகராட்சி சார்பில் கடைகள் கட்டிக்கொடுத்து ஒழுங்குபடுத்தாத நிலையில் பார்க்கிங் ஸ்டாண்ட் வருவதற்கு மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவுன்சிலர் "சிக்னல்': இப் பிரச்னை நகராட்சி கூட்டத்தில் எதிரொலித்தது அப்போது, கவுன்சிலர்கள் தலையீடு இல்லாவிட்டால் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தப்படும்' என அதிகாரிகள் அறிவித்தனர். இதற்கு, அரசியல் வேறுபாடு மறந்து கவுன்சிலர்கள் "சிக்னல்' காட்டினர். இதையடுத்து, ஆக்கிரமிப்பு "சர்வே'பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.அதிகாரிகள் கூறியதாவது: பஸ் ஸ்டாண்ட் பின்பகுதியில் இடநெருக்கடியான இடத்தில் திரு.வி.., மார்க்கெட் மூலம் நகராட்சிக்கு அதிகளவில் வருவாய் இல்லை. எனவே, வெங்கடேசா காலனி உள்ளிட்ட லே-அவுட்களில் ரிசர்வ் சைட்களில் காய்கறி கடைகள் வைத்துக்கொண்டால் மக்களுக்கும் வியாபாரிகளும் பயனுள்ளதாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.இதேபோல், கவுன்சிலர்கள் சார்பில் திரு.வி.., மார்க்கெட் வியாபாரிகளிடம் பேச்சு நடத்தப் படவுள்ளது. இங்குள்ள 84 சென்ட் இடத்தில் 34 சென்ட்டில் பார்க்கிங் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திரு.வி.., மார்க்கெட் மாற்றம் செய்யப்படும் போது அனைத்து இடத்திலும் "பார்க்கிங் ஸ்டாண்ட்' அல்லது முன்பகுதியில் வணிக வளாகமும் பின்பகுதியில் பார்க்கிங் ஸ்டாண்ட்டும் வரும் திட்டமும் உள்ளது.எனவே, முதற்கட்டமாக திரு.வி.., மார்க்கெட் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சர்வே செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கப்படும். போலீஸ், வருவாய்த்துறையுடன் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது. இவ்வாறு, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Wednesday, 03 February 2010 06:52
 


Page 151 of 204