Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

தியாகராயநகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 15 கடைகள் மூடப்பட்டன; மேயர் அதிரடி நடவடிக்கை

Print PDF

மாலை மலர் 01.02.2010

தியாகராயநகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 15 கடைகள் மூடப்பட்டன; மேயர் அதிரடி நடவடிக்கை

சென்னை, பிப்.1-

சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தியாகராயநகர், வாணி மகாலில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனுக்கள் வாங்கினார். அப்போது தியாகராய நகரில் பஸ் நிலையம் சுற்றியுள்ள மேட்லிசாலை, கில்டுசாலை, நடேசன் சாலை, முத்துரங்கம் சாலை ஆகிய பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து நடைபாதையில் கடைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.

மேயர் மா.சுப்பிரமணியன் இன்று நேரிடையாக இப்பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது மேட்லி சாலையில் 5 துரித உணவகங்கள், நடேசன் சாலையில் 4 துரித உணவகங்கள், ஒரு தேநீர் விடுதி, ஒரு சிப்ஸ் கடை, ஒரு குளிர் பானக்கடை ஆகியவையும், கில்டு சாலையில் ஒரு துரித உணவகம் மற்றும் முத்துரங்கம் சாலையில் 2 துரித உணவகங்கள் நடை பாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பதை பார்த்தார்.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய தற்காகவும் இந்த 15 சாலை யோர கடைகள் உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் கில்டு சாலையில் குவிந்துள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளையும் மேயர் முன்னிலையில் மாநகராட்சி அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் அகற்றி, சுத்தம் செய்தனர். மாநகராட்சியின் உடனடி நடவடிக்கைக்கு இப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது மன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, மண்டல அலுவலர் ஞானமணி, உதவி சுகாதார அலுவலர் டாக்டர் சரஸ்வதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

ராஜபாளையம் அருகே ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்

Print PDF

தினமணி 01.02.2010

ராஜபாளையம் அருகே ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்

ராஜபாளையம், ஜன. 31: ராஜபாளையம் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசை வீடுகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

ராஜபாளையம் அருகேயுள்ள தென்றல் நகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தை இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து, 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை அமைத்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை ராஜபாளையம் வட்டாட்சியர் சங்கரநாராயணன், டி.எஸ்.பி. முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.

இப்பகுதியை மீண்டும் ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

அரசிடம் முறைப்படி மனு செய்து, அனுமதி கிடைத்தால் இப்பகுதியில் வீடு கட்டலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Monday, 01 February 2010 06:54
 

மரங்களில் விளம்பர பதாகைகள் அகற்றம்

Print PDF

தினமணி 01.02.2010

மரங்களில் விளம்பர பதாகைகள் அகற்றம்

பழனி ஜன.31: பழனி நகரில் மரங்களில் மேல் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள்,தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் ஒப்புதலின்பேரில் அகற்றப்பட்டன.

பழனி நகரில் சாலை ஓரங்களில் இருந்த மரங்களில், பல்வேறு நிறுவனத்தினரும் தங்களது விளம்பரங்களை ஆணியால் அறைந்தும், கம்பியால் கட்டியும் தொங்க விட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த மரங்களைக் காக்க, பாலசமுத்திரம் விவேகானந்தா சேவா டிரஸ்ட் விளம்பரங்களை அகற்ற முன் வந்தது.

இதுதொடர்பாக, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு டிரஸ்ட் சார்பில் அனுப்பப்பட்ட விண்ணப்பம் ஏற்கப்பட்டது.

இதனையடுத்து, பழனியாண்டவர் கலைக் கல்லூரி முதல் பஸ் நிலையம் வரையில், சாலையோர மரங்களில் உள்ள அட்டைகள் மற்றும் போர்டுகள் நீக்கப்பட்டு அவை, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விரைவில் ஆர்.எப். சாலை மற்றும் புது தாராபுரம் சாலையில் மரங்களில் உள்ள விளம்பரங்கள் அகற்றப்படும் எனத் தெரிகிறது.

Last Updated on Monday, 01 February 2010 06:53
 


Page 153 of 204