சுங்ககேட் வளைவில் ஆக்கிரமிப்பு அகற்றினால் சுவர்: நகராட்சி தீர்மானம்
Thursday, 21 January 2010 07:46
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
தினமலர் 21.01.2010 சுங்ககேட் வளைவில் ஆக்கிரமிப்பு அகற்றினால் சுவர்: நகராட்சி தீர்மானம் கரூர்: "தாந்தோணி சுங்ககேட் வளைவில் உள்ள சாக்கடை பகுதியில் ஆக்கிரமிப்பை மாவட்ட நிர்வாகம் அகற்றினால், தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தாந்தோணி நகராட்சியில் தீர்மானிக்கப்பட்டது. தாந்தோணி நகராட்சி கூட்டம் தலைவர் ரேவதி தலைமையில் நடந்தது. கமிஷனர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார். தாந்தோணி நகராட்சியில் 2009-10ல் 12வது நிதிக்குழு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள மொத்த ஒதுக்கீடு தொகைக்கு திட்ட விதிமுறைப்படி 50 சதவீதம் தொகை திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கும், 25 சதவீதம் கால்வாய் மற்றும் சாலைப் பணிக்கும், 25 சதவீதம் மின்கட்டணம் மற்றும் டேட்டா அபிவிருத்தி பணிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது. சுங்ககேட் நகராட்சி பகுதியில் சுங்ககேட் சாலை திருப்பத்தில் உள்ள சாக்கடையால் பல விபத்து ஏற்படுவதால், சாலையோரம் இரண்டு அடி உயரத்தில் சுவர் அமைக்க நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நகராட்சி நிர்வாகம் கவனத்துக்கு கொண்டுவந்தது. இப்பொருள் மீதான விவாதத்தில், "சம்மந்தப்பட்ட பகுதியில் சாக்கடை ஆக்கிரமிப்பை மாவட்ட நிர்வாகம் அகற்றித்தந்தால், சுவர் கட்டித்தருவது குறித்து முடிவெடுக்க' தீர்மானிக்கப்பட்டது. கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஆயுதப்படை குடியிருப்பு அருகே மண் சாலைக்கு தார் சாலை போடுவது குறித்த தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் ரவி, பாபுகுமார், கண்ணகி, ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Last Updated on Thursday, 21 January 2010 07:47
|
'வெரி குட்' குட்ஷெட் தெரு
Thursday, 21 January 2010 07:29
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
தினமலர் 21.01.2010 'வெரி குட்' குட்ஷெட் தெரு மதுரை : மதுரை குட்ஷெட் தெரு, ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கித் திணறியது. யாருக்கும் பயன்படாத, அகலமான பிளாட்பாரம்; கட்டுப்பாடு இல்லாமல் ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்; ஆங்காங்கே எப்போதும் சரக்குகளை இறக்கும் லாரிகள் என ரோடு, கூனி குறுகிப் போய் இருந்தது. இந்த ரோட்டில் போவதே, ஒரு வேதனையான அனுபவமாக இருந்தது. நேற்று போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் தேவதாஸ், நகரமைப்பு அலுவலர்கள் பழனிச்சாமி, நல்லதம்பி மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை எடுத்தனர். பிளாட்பாரங்களை அகற்றி, ரோட்டை அகலப்படுத்தினர்.
Last Updated on Thursday, 21 January 2010 07:32
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வாலாஜாவில் நாளை தொடக்கம்
Wednesday, 20 January 2010 10:32
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
தினமலர் 20.01.2010 ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வாலாஜாவில் நாளை தொடக்கம் வாலாஜாபேட்டை: வாலாஜாபேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நாளை தொடங்குகிறது. வாலாஜாவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, போலீசார் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில், ஆக்கிரமிப்புக்களை அகற்றி சாலையின் இருபுறமும் "பேரிகார்டு' அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு நகராட்சி, தேசிய நெடுஞ்சாலை, வருவாய்த்துறை, காவல்துறையுடன் இணைந்து செயல்படவும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையே, பொங்கல் பண்டிகை வரை அவகாசம் தந்தால் நாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி தருகிறோம் என்று வியாபாரிகள் உறுதியளித்தனர். இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டு, "பேரிகார்டு' அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், நாளை முதல் 3 நாட்களுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை, காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு துண்டுபிரசுரங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated on Wednesday, 20 January 2010 10:34
|
|
|
|
Page 155 of 204 |