தினகரன் 24.12.2009
பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு திட்டக்குடி பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வுதிட்டக்குடி: திட்டக்குடி பேரூராட்சியில் உள்ள சிவன்கோயில் வீதி, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து கடலூர் பேரூராட்சி உதவி இயக்குநர் சடையப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் குளம் தூர் வாரும் பணி மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து பேரூராட்சி உதவி இயக்குநர் சடைப்பன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேரூராட்சியில் வருவாய் ஆதாரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண் டார். செயல் அலுவலர் பன்னீர்செல்வம், உதவி செயற்பொறியாளர் முருகேசன், கவுன்சிலர்கள் ராஜஅலெக்ஸ்சாண்டர், செந்தில், செல்வம், செந்தில்குமார், வசந்தாதுரைசாமி உட்பட பலர் உடனிருந்தனர். அப்போது அவரிடம் கவுன்சிலர் செந்தில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் காந்தி மைதானத்தில் பூங்கா அமைக்க கூடாது. கோயில் திருவிழா காலங்களில் காந்தி மைதானம் பயன்படுத்தப்படும் என மனு அளித்தார். இது குறித்து பரிசிலினை செய்யப்படும் என உதவி இயக்குநர் உறுதியளித்தா