Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்த 30 கடைகளுக்கு சீல்

Print PDF

தினமணி 17.12.2009

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்த 30 கடைகளுக்கு சீல்

மதுரை, டிச. 16: மதுரை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, புதன்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன.

இந்த பஸ் நிலையத்தில் உள்ள 30 கடைகள், கடந்த 7 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத நிலையில் இருந்துவந்தன. இதனால் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்தக் கடைகளை நடத்தியவர்கள் பாதியிலேயே விட்டுச் சென்றதால், மாநகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும், அவர்களிடம் இருந்து எவ்வித பதிலும் வராத நிலையில், கடைகளை மாநகராட்சியே சீரமைத்து மீண்டும் ஏலத்துக்கு விட முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து, மேற்கண்ட 30 கடைகளும் மாநகராட்சி பொறியியல் பிரிவு மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தக் கடைகளை அப்பகுதியில் உள்ள சிலர் ஆக்கிரமித்து வியாபாரம் செய்துவருவதாக மாநகராட்சி ஆணையருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, மாநகராட்சி உதவி ஆணையர் (வருவாய்) இரா.பாஸ்கரன், உதவிப் பொறியாளர் முருகன், சந்தைக் கண்காணிப்பாளர் ரங்கராஜன் மற்றும் பணியாளர்கள், புதன்கிழமை அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 30 கடைகளையும் மீட்டு, அவற்றைப் பூட்டி சீல் வைத்தனர்.

Last Updated on Thursday, 17 December 2009 08:41
 

கோவை மாநகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினத்தந்தி 15.12.2009

 

அரக்கோணத்தில் மயான ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 12.12.2009

அரக்கோணத்தில் மயான ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரக்கோணம், டிச 11: அரக்கோணம் நகராட்சிக்கு உள்பட்ட காலிவாரிகண்டிகை மயானத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

அரக்கோணம் நகராட்சி 8-வது வார்டிற்கு உள்பட்ட பகுதி காலிவாரிகண்டிகை. இப் பகுதிக்கான மயானப் பகுதியை சிலர் கடந்த சில தினங்களுக்குப முன் ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்தனர்.

அதில் அரசியல் கட்சிகளின் கொடிகளையும் பறக்கவிட்டனர். இதையடுத்து, அப் பகுதிக்கான நகரóமன்ற உறுப்பினர் யமுனா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நகர மளிகை வியாபாரிகள் சங்கத் துணை தலைவர் கே.எம்.பி ஜனார்த்தனன் உள்பட அப்பகுதியைச் சேர்ந்த பலர், ராணிப்பேட்டை கோட்டாட்சியர், அரக்கோணம் வட்டாட்சியர், அரக்கோணம் நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் தொடர்ந்து கடந்த நாண்கு தினங்களாக புகார் அளித்து வந்துள்ளனர். இந் நிலையில் அப்பகுதியில் ஒருவர் இறந்ததை அடுத்து அச்சடலத்துடன் போராட்டம் நடத்தப் போவதாக அப்பகுதி இளைஞர்கள் வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் நகராட்சி நகரமைப்பு அலுவலர் தயாநிதி, உதவிப் பொறியாளர் நளினி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மற்றும் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீஸôர் சென்று நகராட்சி ஊழியர்கள் மூலம் மயானத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இதையடுத்து, சடலம் அமைதியான முறையில் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

 


Page 168 of 204