மாலை மலர் 4.11.2009
சைதாப்பேட்டையில் தனியார் ஆக்கிரமித்த 60 கிரவுண்டு நிலம் மீட்பு; மேயர் நேரடி நடவடிக்கை
சென்னை, நவ.4-
சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்று ஓரப்பாதையில் கீரைத்தோட்டத்தில் பல ஆண்டு காலமாக தனியாரால் 60 கிரவுண்டு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மழைநீர் செல்வதற்கு பெருந் தடையாகவும், கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும் இடமாகவும் இருந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை, மாவட்ட வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் மேயர் முன்னிலையில் 30-க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்காக 5 லாரிகள், ஒரு பொக்லைன் பயன்படுத்தப்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மண்டல அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆகியோர் மேற்பார்வையில் தொடர்ந்து நடந்தது