தினமணி 20.08.2009
புதுகை நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுக்கோட்டை, ஆக. 19: புதுக்கோட்டை நகரில் உழவர் சந்தை அருகே இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
புதுக்கோட்டை நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் இடையூறு ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில், ஊழியர்கள் உழவர் சந்தை அருகே அனுமதியின்றி சாலையோரம் காய்கறி விற்பனை செய்து வந்த 6 தள்ளுவண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடைகளின் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கூரைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகளை வரும் 21-ம் தேதிக்குள் தானாகவே முன்வந்து அகற்ற வேண்டும் எனவும் தவறினால் 22 -ம் தேதி நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் எச்சரித்தார் ஆணையர் கே. பாலகிருஷ்ணன்.