தினமணி 07.04.2013
அரியலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன
அரியலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி பணியாளர்கள் சனிக்கிழமை அகற்றினர்.
அரியலூர் நகராட்சிக்குள்பட்ட பேருந்து நிலையம், மார்க்கெட், சாலைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்களே அகற்றிக் கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையர் சரஸ்வதி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அரியலூர் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மார்க்கெட் தெரு, தேரடி, சின்னகடை தெரு, மங்காய் பிள்ளையார் கோவில் தெரு, வெள்ளாள தெரு, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். நகராட்சி ஊழியர்களும் ஒருசில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அரியலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன
அரியலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி பணியாளர்கள் சனிக்கிழமை அகற்றினர்.
அரியலூர் நகராட்சிக்குள்பட்ட பேருந்து நிலையம், மார்க்கெட், சாலைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்களே அகற்றிக் கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையர் சரஸ்வதி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அரியலூர் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மார்க்கெட் தெரு, தேரடி, சின்னகடை தெரு, மங்காய் பிள்ளையார் கோவில் தெரு, வெள்ளாள தெரு, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். நகராட்சி ஊழியர்களும் ஒருசில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.