Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் அதிரடி கடை?ஆக்கிரமிப்புகள்?தரைமட்டம் காஸ்?பயன்படுத்தியவர்கள்?ஓட்டம்

Print PDF
தினகரன்                       05.09.2012

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் அதிரடி கடை?ஆக்கிரமிப்புகள்?தரைமட்டம் காஸ்?பயன்படுத்தியவர்கள்?ஓட்டம்

மதுரை, : மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கடைகளில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. விதியை மீறி காஸ் சிலிண்டர் பயன்படுத்திய வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு ஓடி விட்டனர்.

மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்டில் மாநகராட்சி சார்பில் 141 கடைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இங்கு விதிமீறல்கள், ஆக்கிரமிப்புகளால் இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, மாநகராட்சி துணை ஆணையாளர் சாம்பவி தலைமையில் நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன் மற்றும் அலுவலர்கள் பஸ் ஸ்டாண்ட்டில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். ஏராளமான கடைகள் அனுமதிக்கப்பட்ட ஒரு வாசலுக்கு பதில் பக்கவாட்டில் இடித்து இரு வாசல் ஏற்படுத்தி, 2 கடைகளாக்கப்பட்டு இருந்தன.

கடைகள் முன் பிளாட்பாரத்தை ஆக்கிரமித்தும், கட்டிட சுவரை இடித்தும் ஷோகேஸ்கள் மற்றும் அலங்கார போர்டுகள் பொருத்தப்பட்டு இருந்தன. 100க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் 2 கடைகளாக்கிய தடுப்புகள் இடித்து அகற்றப்பட்டன. இதில் ஷோகேஸ்கள், கண்ணாடிகள் நொறுங்கின. பஸ் ஸ்டாண்ட் கடைகளில் காஸ் சிலிண்டர் பயன்படுத்த அனுமதி கிடையாது. இதை மீறி சில கடைகளில் காஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அதிகாரிகள் நடவடிக்கையை கண்டதும் காஸ் சிலிண்டர் பயன்படுத்தியவர்களும், விதிமீறிய கடைக்காரர்கள் பலரும் கடைகளை மூடி விட்டு ஓட்டம் பிடித்தனர்.ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மாலை 5 மணி வரை நிறுத்தும்படி துணை ஆணையாளர் சாம்பவியிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மன்றாடினர். அதை துணை ஆணையாளர் ஏற்கவில்லை.போலீஸ் உதவி கமிஷனர் வெள்ளத்துரை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு நிலவியது.
Last Updated on Wednesday, 05 September 2012 10:54
 

ரேஸ்கோர்சில் இன்னொரு நடைபாதை தயாராகிறது

Print PDF
தினகரன்      04.09.2012

ரேஸ்கோர்சில் இன்னொரு நடைபாதை தயாராகிறது

கோவை, : கோவை ரேஸ்கோர்சில் வீட்டு முன்புறம் உள்ள சாலையோர பூங்கா அகற்றப்பட்டு, இன்னொரு நடைபாதை ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோவை மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி நேற்று அளித்த பேட்டி:

கோவை மாநகரில் சிறப்பு தூய்மை பணி வார்டுதோறும் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியின்போது அந்தந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர்படுத்தப்பட்டு வருகிறது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பங்களாக்கள் முன்புறம் சாலையை ஆக்கிரமித்து வீட்டு காம்பவுண்ட் சுவரையொட்டி சிறிய அளவிலான பூங்காக்களை அந்தந்த வீட்டு உரிமையாளர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். இதனால், சாலையோரம் வாகனங்களை நிறுத்த முடியவில்லை. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஒருசில வீடுகளில் 25 முதல் 30 அடி வரை சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இவற்றை கண்டறிந்து ஆக்கிரமிப்பு பூங்காக்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் ஒருசில தினங்களில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏற்கனவே ஒரு நடைபாதை உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முழுமையாக முடிந்த பின்னர் இன்னொரு நடைபாதை ரவுண்டானா அமைக்கப்படும். அத்துடன், நடைபயிற்சிக்கு வருவோரின் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை முறையாக நிறுத்த பார்க்கிங் வசதி செய்துகொடுக்கப்படும். இதற்கான வரைபடம் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. இன்னும், ஒருசில வாரங்களில் இன்னொரு நடைபாதைக்கான பணிகள் துவங்கும்.

எல்இடி தெருவிளக்கு:

கோவை மாநகரில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன. இவற்றில், சோடியம் மற்றும் டியூப் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், மின்சாரம் நிறைய வீணாகிறது. இதை மிச்சப்படுத்த எல்இடி விளக்கு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசிடமிருந்து எல்இடி விளக்கு ஒதுக்கீடு வரவேண்டியுள்ளது. மிக விரைவில் வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். உத்தரவு வந்தவுடன் அனைத்து சோடியம் மற்றும் டியூப் லைட்கள் அகற்றப்பட்டு, ஒரே சீராக எல்இடி விளக்குகள் பொருத்தப்படும். மாநகருடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு அடுத்தக்கட்டமாக விரிவுபடுத்தப்படும்.

‘ஸ்கை வாக்‘ பாலம்:

பிரதான சாலைகளை பாதசாரிகள் கடந்து செல்வதின் மூலமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க கோவை அரசு மருத்துவமனை, ரயில்நிலையம், உக்கடம், மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையம் முன்புறம் ஆகிய நான்கு இடங்களில் ‘ஸ்கை வாக்‘ பாலம் அமைக்கப்பட உள்ளது. உக்கடத்தில் சுரங்கப்பாதையும் அமைக்கப்படும். இதற்கான ஆய்வுப்பணியை பெங்களூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. கடந்த பத்து நாட்களாக இப்பணி நடக்கிறது. ஆய்வுப்பணி முடிவடைந்து, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன் டெண்டர் விடப்பட்டு, பணி துவங்கும். அத்துடன், டவுன்ஹால், உக்கடம், ஆர்.எஸ்.புரம், கிராஸ்கட் ரோடு ஆகிய நான்கு இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வுப்பணியும் ஒருசேர நடந்து வருகிறது.

சென்டர் மீடியன்:

புரூக்பாண்ட் ரோட்டில் சாலைவிபத்தை குறைக்க சென்டர் மீடியன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாரதிபார்க் ரோட்டில் வாகனங்கள் மீது உரசும் மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்படுகிறது. நகரில் போக்குவரத்தை எளிதாக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கமிஷனர் பொன்னுசாமி கூறினார்.
 

ரூ. 40 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

Print PDF

தினகரன்           31.08.2012

ரூ. 40 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

கோவை, : கோவை யில் ரூ.40 கோடி மதிப்புள்ள நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.

கோவை மாநகரில் புதி தாக உருவாகும் லே-அவுட்களில் 40 சதவீதம் சாலை, பூங்கா மற்றும் ரிசர்வ் சைட் பயன்பாட்டுக்கு விடப்பட வேண்டும். மீதமுள்ள 60 சத வீத நிலங்களில் வீட்டுமனை பிரித்துக்கொள்ளலாம்.இந்த விதிமுறை கடைபிடிக்கப்பட்டால் மட்டுமே வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஆனால், பலர் அங்கீகாரம் பெற்றுக்கொண்டு ரிசர்வ் சைட் விடுவதில்லை.

இன்னும் சிலர், அங்கீகா ரம் பெற்று முறைப்படி விடப்பட்ட ரிசர்வ் சைட்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றனர். இதுபற்றி ஆய்வு நடத்தி, பட்டியல் தயாரிக்கும்படி மாநகராட்சி மேயர் செ.ம.வேலு சாமி, கமிஷனர் பொன்னுசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மின்மயானத்துக்கு எதிரே மாநகராட்சிக்கு சொந்த மான 1.20 ஏக்கர் ரிசர்வ் சைட் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தில் கூரை அமைத்து குடோன்களாக பயன்படுத்தி வந்தனர்.

இந்த இடத்தை மாநகராட்சி கமிஷனர் பொன்னு சாமி நேற்று நேரில் பார்வையிட்டார். உடனடியாக கூரை களை அகற்றிவிட்டு நிலத்தை மீட்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் புல்டோசர் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டன. 1.20 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, சுற்றி லும் வேலி அமைக்கப்பட்டது. அந்த இடத்தில், ‘‘இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம், அத்துமீறுவோர் தண்டிக்கப்படுவார்கள்‘‘  என எச்சரிக்கை போர்டு நட்டுவைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.40 கோடி.

இதுபற்றி கமிஷனர் கூறு கையில், ‘‘இதுபோன்ற ஆக்கிரமிப்பு நிலங்கள் தொடர்பாக ஆய்வுநடத்தப்பட்டு, பறிமுதல்செய்யப்படும்‘‘ என்றார்.

 


Page 31 of 204