Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

சென்னையில் பத்திரிகை தானியங்கி மிஷின் அறிமுகம்

Print PDF

தினமலர் 23.09.2009

 

வரி வருமானம் அதிகரிப்பு

Print PDF

தினமணி 23.09.2009

வரி வருமானம் அதிகரிப்பு

புது தில்லி, செப். 22: தொழில் நிறுவனங்கள் முன்கூட்டியே செலுத்தும் வரி வருமானம் 13.10 சதவீதம் உயர்ந்துள்ளது. இது பொருளாதார மீட்சியைக் குறிப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக கடந்த ஓராண்டாக அரசின் வரி வருவாய் கணிசமாகக் குறைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு வரிச் சலுகையை இரண்டு கட்டங்களாக அறிவித்தது. இதனால் பெரும்பாலான தொழில்களுக்கு வரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டது. 14 சதவீதமாக இருந்த வரி விதிப்பு 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. தற்போது பொருளாதார நிலை மீட்சியடைந்து இயல்பு நிலைக்கு படிப்படியாகத் திரும்பத் தொடங்கியுள்ளது. இதன் அறிகுறியாக தொழில்துறை உற்பத்தி அதிகரித்தது. தற்போது அடுத்த கட்டமாக நிறுவனங்கள் முன்கூட்டியே செலுத்தும் வரியின் அளவும் அதிகரித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்தம் ரூ. 49,502 கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது.

செப்டம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் 50 பெரிய நிறுவனங்களில் 12 நிறுவனங்கள் குறைவான வரியை செலுத்தியுள்ளன.

இருப்பினும் நிலைமை இம்மாத இறுதிக்குள் சீரடையும் என எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பண்டிகைக் காலம் வருவதால் மூன்றாம் காலாண்டில் வரி வருவாய் உயரும் என்று அவர்கள் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாட்டின் பெரும்பாலான பகுதியில் நிலவும் வறட்சியின் தாக்கம் ஓரளவு இருக்கும் என்றாலும் வரி வருவாய் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிறுவனங்களின் வரி வருவாய் 14.7 சதவீதம் அதிகரித்து ரூ. 44,010 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலத்தில் வசூலான வருவாய் ரூ. 20,728 கோடியாகும்.

தனிநபர் வரி வருமானம் 1.7 சதவீதம் உயர்ந்து ரூ. 5,492 கோடியைத் தொட்டுள்ளது.

முதல் காலாண்டில் 44 சதவீதம் குறைவாக இருந்த வருவாய் தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் வசூலான வரி ரூ. 5,398 கோடி. முதல் காலாண்டில் ரூ. 725 கோடி வரி வசூலானது. முந்தைய ஆண்டு இது ரூ. 1,296 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிக வரி வருவாய் செலுத்தும் பாரத ஸ்டேட் வங்கி ரூ. 1,832 கோடியை செலுத்தியுள்ளது. இது இரண்டாம் காலாண்டில் 17.44 சதவீதம் கூடுதலாகும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாமிடங்களைப் பிடித்துள்ளன.

Last Updated on Wednesday, 23 September 2009 06:58
 

9-வது உலகத் தமிழ் மாநாடு: இணையதளம் தொடங்க முடிவு .

Print PDF

தினமணி 22.09.2009

9-வது உலகத் தமிழ் மாநாடு: இணையதளம் தொடங்க முடிவு .

9-வது உலகத் தமிழ் மாநாடு குறித்து, சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

9சென்னை, செப். 21: உலகத் தமிழ் மாநாடு குறித்து, அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழறிஞர்களுக்கு தகவல்களைத் தர இணையதளம் ஒன்று தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்த முடிவு, முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

உலகத் தமிழ் மாநாட்டினை நடத்துவது குறித்து, உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் நெபுரு கரோசீமாவுடன் தொடர்பு கொள்வது குறித்தும், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் துணைத் தலைவர் வா. செ. குழந்தைசாமி இதற்காக, அதன் நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டி அதிலே மாநாட்டுக்கான ஒப்புதலைப் பெறுவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

உலகத் தமிழ் மாநாடு குறித்து அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழறிஞர்களுக்கு அவ்வப்போது தகவல்களைத் தர "இணையதளம்' ஒன்றை பதிவு செய்து தொடங்குவதென்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு..ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தலைவர் வா.செ.குழந்தைசாமி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஆனந்த கிருஷ்ணன், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், தஞ்சைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ம.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 22 September 2009 05:44
 


Page 21 of 42