Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

குடும்ப வருமானம் ரூ.2 1/2 லட்சத்துக்கு கீழ் உள்ள ஏழை மாணவர்களின் கல்விக் கடன் வட்டி ரத்து: மத்திய அரசு முடிவு

Print PDF

மாலை மலர் 27.08.2009

குடும்ப வருமானம் ரூ.2 1/2 லட்சத்துக்கு கீழ் உள்ள ஏழை மாணவர்களின் கல்விக் கடன் வட்டி ரத்து: மத்திய அரசு முடிவு

புதுடெல்லி, ஆக. 27-

உயர்க்கல்வி மற்றும் தொழில் கல்வி பயிலும் மாணவ- மாணவிகளுக்கு கடன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தேசிய மயம் ஆக்கப்பட்ட வங்கிகள் கல்விக்கடன் வழங்கி வருகின்றன.

கல்விக் கடன் வழங்குவதை எளிமை ஆக்கவும், அதிக அளவில் கடன் வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. படிப்பை முடித்தவர்கள், பெற்ற கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்.

உலக பொருளாதார நெருக்கடி காரணமாக படிப்பை முடித்த அனைவரும் வேலை வாய்ப்பு பெற முடியாத நிலை இருக்கிறது. எனவே ஏழை மாணவ -மாணவிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு, குடும்ப வருமானம் குறைவாக உள்ள ஏழை மாணவ -மாணவிகளின் கல்விக்கடன் வட்டியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் மனித வள மேம்பாட்டுதுறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தியது.

அதன்படி குடும்ப வருட வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால் வட்டி செலுத்த வேண்டியது இல்லை. இன்று நடைபெறும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதன் மூலம் மாணவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை குறையும். 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன் அடைவார்கள்.

 

அரசு மருத்துவமனைளில் குழந்தை பெற்றால் பரிசு

Print PDF

தினமலர் 20.08.2009

 

ராமேசுவரத்தில் மலேரியா தடுப்பு ஆராய்ச்சி நிலையம்: அதிகாரி ஆய்வு

Print PDF

தினமணி 20.08.2009

ராமேசுவரத்தில் மலேரியா தடுப்பு ஆராய்ச்சி நிலையம்: அதிகாரி ஆய்வு

ராமேசுவரம், ஆக. 19: ராமேசுவரத்தில் மலேரியா காய்ச்சல் தடுப்பு ஆராய்ச்சி நிலையத்துக்கான இடத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமேசுவரம் தீவில், கடந்த சில ஆண்டுகளாக மலேரியா காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

இந் நிலையில், மலேரியா கொசுவை ஒழிக்க, ராமேசுவரம் அருகே தென்குடாவில், மலேரியா நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையம் அமைக்க, மாநில மருத்துவ இயக்குநரகம் முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன், புதன்கிழமை ராமேசுவரம் வந்து அதற்கான இடத்தை ஆய்வு செய்தார்.

மேலும், ராமேசுவரம் பொந்தம்புளி அருகே வருவாய்த் துறைக்குச் சொந்தமான காலி இடத்தில் கருவூல அலுவலகம் அமைக்கப்பட உள்ளதையும், பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ள நரிக்குழி இடத்தையும் அவர் பார்வையிட்டார்.

உடன், வட்டாட்சியர் ராஜாராமன், கிராம நிர்வாக அலுவலர் நாகநாதன் சென்றனர்.

இதன்பின் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியும் பணி குறித்தும், நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் பொருள்களின் தரம், இருப்பு குறித்தும் ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

 


Page 29 of 42