Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

திருச்செந்தூர் பேரூராட்சிக்கு புதிய குப்பைத் தொட்டிகள், கனரக வாகனம்

Print PDF

தினமணி             27.09.2013

திருச்செந்தூர் பேரூராட்சிக்கு புதிய குப்பைத் தொட்டிகள், கனரக வாகனம்

திருச்செந்தூர் பேரூராட்சி சுகாதாரப் பணிக்காக ரூ.24 லட்சம் செலவில் எவர்சில்வர் குப்பைத் தொட்டிகள் மற்றும் புதிய கனரக வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

பேரூராட்சிகளின் பொதுநிதியிலிருந்து ரூ. 24 லட்சம் செலவில் 12 எவர்சில்வர் குப்பைத்தொட்டிகள் மற்றும் கனரக வாகனம் வாங்கப்பட்டுள்ளது. டப்பர் பிளேசர் முறையிலான இந்த குப்பைத் தொட்டிகள் முதல்கட்டமாக திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்லும் நாவற்பழசாலை, 3-வது வார்டு தாலுகா அலுவலகம் செல்லும் சாலை, சரவணப்பொய்கை அருகில், பாரத ஸ்டேட் வங்கி அருகில், வெயிலுகந்தம்மன் கோவில் தெரு, அரசு மருத்துவமனை முன், வீரராகவபுரம் தெரு உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் பேரூராட்சியில் ஏற்கனவே குப்பைத் தொட்டிகள் இருந்த இடங்களில் புதிய எவர்சில்வர் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. திருச்செந்தூர் பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு, செயல் அலுவலர் கொ.ராஜையா ஆகியோர் பேரூராட்சிப் பகுதியில் குப்பைத்தொட்டிகள் வைக்கும் இடங்களை தேர்வு செய்து வருகின்றனர்.

 

உயர் கோபுர மின்விளக்கு அமைக்க ரூ.15 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி             27.09.2013

உயர் கோபுர மின்விளக்கு அமைக்க ரூ.15 லட்சம் ஒதுக்கீடு

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் எல்.எம்.டபிள்யூ. பிரிவில் உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்கு கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

நான்கு சாலைகள் சந்திக்கும் இடமாக உள்ள இந்தப் பிரிவில், மின் விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் அடிக்கடி இங்கு விபத்துகளும் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார், இங்கு உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்காக, கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, அவர் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்தார். விரைவில் அப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என பி.ஆர்.ஜி.அருண்குமார் தெரிவித்தார்.

 

எட்டயபுரம் ரோடு, திருச்செந்தூர் ரோட்டில்: மாநகராட்சி எல்லை ஆரம்பிக்கும் இடத்தில் வரவேற்பு வளைவு

Print PDF

தினமலர்           27.09.2013

எட்டயபுரம் ரோடு, திருச்செந்தூர் ரோட்டில்: மாநகராட்சி எல்லை ஆரம்பிக்கும் இடத்தில் வரவேற்பு வளைவு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி எல்லை ஆரம்பிக்கும் எட்டயபுரம் ரோடு மற்றும் திருச்செந்தூர் ரோடு ஆகிய இடங்களில் தலா ஒரு வரவேற்பு வளைவு அமைப்பதற்கு 20 லட்ச ரூபா ய் அனுமதித்து இன்றைய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா தலைமையில் கமிஷனர் மதுமதி முன்னிலையில் நடக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சி வார்டு எண் 10 அம்பேத்கர் நகர் மெயின் ரோடு எம்ஜிஆர் சிலை வடக்கில் மிகவும் பழுதடைந்துள்ள நிலையில் அபாயகரமான மாநகராட்சி பம்பிங் கட்டடத்தினை இடிக்க இன்றைய கூட்டத்தில் அனுமதியளித்து தீர்மானம் நிறை வேற்றப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அரசு உத்தரவுப்படி 1.10.2013 முதல் (2013-2014) இரண்டாம் அரையாண்டு முதல் வருமான வரம்பு விகிதத்தை மாற்றம் செ ய்யாமல் ஏற்கனவே நிர்ணயம் செ ய்யப்பட்டுள்ள அரையாண்டு தொழில் வரியில் 25 சதவீதத்திற்கு குறையாமலும், 35 சதவீதத்திற்கு மிகாமலும் உயர்வு செ ய்து நிர்ணயம் செ ய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அரையாண்டிற்கான வருமான வரம்பு 20 ஆயிரம் ரூபா ய் வரை தொழில் வரி கிடையாது. 20 ஆயிரத்து 1 ரூபா ய் முதல் 30 ஆயிரம் ரூபா ய் வரை 94 ரூபா ய், 30 ஆயிரத்து ஒரு ரூபா ய் முதல் 45 ஆயிரம் ரூபா ய் வரை 238 ரூபா ய், 45 ஆயிரத்து ஒரு ரூபா ய் முதல் 60 ஆயிரம் ரூபா ய் வரை 469 ரூபா ய், 60 ஆயிரத்து ஒரு ரூபா ய் முதல் 75 ஆயிரம் ரூபா ய் வரை 706 ரூபா ய், 75 ஆயிரத்து ஒரு ரூபாய் மற்றும் அதற்கு மேல் 938 ரூபா ய் தொழில் வரி செலுத்த வேண்டும். இதற்கான அனுமதியும் இன்று மாநகராட்சி கூட்டத்தில் வழங்கப்பட்டு தீர்மானம் நிறை வேற்றப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான 35, 36, 37, 42, 43, 44, 46, 47 ஆகிய 8 வார்டு பகுதியில் தனியார் மூலம் குப்பை அள்ளும் பணிக்கு ஓராண்டு காலத்திற்கு ஆகும் செலவு தொகை ஒரு கோடியே 96 லட்சத்திற்கு அனுமதியளித்தும், இதே போல் வார்டு எண் 4, 6, 19, 20, 25, 32, 33 ஆகிய ஏழுவார்டு பகுதியில் தனியார் மூலம் குப்பை அள்ளும் பணிக்கு ஓராண்டிற்கு ஆகும் செலவு தொகை ஒரு கோடியே 65 லட்சத்திற்கு அனுமதியளித்தும் தீர்மானம் நிறை வேற்றப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்குப் பகுதி எட்டயபுரம் சாலையில் மாநகராட்சி எல்லை ஆரம்பிக்கும் இடத்தில் வரவேற்பு வளைவு (ஆர்ச்) 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபா ய் செலவிலும், மாநகராட்சி பகுதி அத்திமரப்பட்டியில் உள்ள திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் எல்லை ஆரம்பிக்கும் இடத்தில் வரவேற்பு வளைவு (ஆர்ச்) 9 லட்சத்து 95 ஆயிரம் செலவிலும் அமைப்பதற்கு மாநகராட்சி அனுமதித்து இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

 


Page 45 of 238