Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மின்மோட்டாருடன் கூடிய மினி குடிநீர் தொட்டி திறப்பு

Print PDF
தினகரன்              02.09.2013

மின்மோட்டாருடன் கூடிய மினி குடிநீர் தொட்டி திறப்பு


இடைப்பாடி, : இடைப்பாடி அருகே வெள்ளாண்டி வலசையில், மின்மோட்டாருடன் கூடிய மினி குடிநீர் தொட்டியை அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

இடைப்பாடி நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், ரூ23.40 லட்சம் மதிப்பில் மின்மோட்டாருடன் கூடிய மினி குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளாண்டிவலசை 22வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கதிரேசன், துணை தலைவர் ராமன், கந்தசாமி, நகர ஜெ.பேரவை பொருளாளர் நாராயணன், இளைஞர்கள் பாசறை செயலாளர் சங்கர்கணேஷ், கவுன்சிலர்கள் முருகன், தனம், செந்தில்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

எடப்பாடியில் குடிநீர்த் தொட்டிகள் திறப்பு

Print PDF

தினமணி               02.09.2013 

எடப்பாடியில் குடிநீர்த் தொட்டிகள் திறப்பு

எடப்பாடி நகராட்சியில் மின் மோட்டார் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் குடிநீர்த் தொட்டிகளை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட வெள்ளாண்டிவலசு, ஆலச்சம்பாளையம், கவுண்டம்பட்டி, நடுத்தெரு ஆகிய பகுதிகளில் மின்சார மோட்டார் மூலம் குடிநீர் எடுத்து, மக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில், 14 குடிநீர்த் தொட்டிகளையும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட அங்கன்வாடி மையங்களையும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்தார்.

நகர்மன்றத் தலைவர் டி.கதிரேசன், துணைத் தலைவர் ராமன், ஆலச்சம்பாளையம் நாராயணன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

கும்மிடிப்பூண்டி ம.பொ.சி. நகரில் ரூ.33 லட்சத்தில் மழைநீர் கால்வாய்

Print PDF

தினமணி               02.09.2013

கும்மிடிப்பூண்டி ம.பொ.சி. நகரில் ரூ.33 லட்சத்தில் மழைநீர் கால்வாய்

கும்மிடிப்பூண்டி ம.பொ.சி. நகரில் ரூ.33.30 லட்சம் செலவில் கான்கிரீட்டால் ஆன மழைநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளதாக கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கூட்டம், அதன் தலைவர் வே.முத்துகுமரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, செயல் அலுவலர் மணிவேல், துணைத் தலைவர் கோமளா கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பேரூராட்சியின் வரவு செலவு இருப்புக் கணக்கு, பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பிறப்பு இறப்பு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட ம.பொ.சி நகரில் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தின்கீழ் 590 மீட்டர் அளவில் கான்கிரீட்டால் ஆன மழைநீர் வடிகால் கால்வாய் கட்டப்படும் என்றும், அதற்கான ஒப்பந்த விவரம் குறித்தும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் ஈசா ஏரிக்கரையை ஒட்டி கிறிஸ்தவர்களுக்கான மயான பூமிக்கான இடஒதுக்கீடு செய்து தரக்கோரி வட்டாட்சியரை கேட்டுக் கொள்வது என கிறிஸ்தவ ஐக்கிய சங்கத்தின் மூலம் வரப்பெற்ற கடிதம் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய கவுன்சிலர் தீனதயாளன், கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள திருமண மண்டபங்கள் வாகனங்கள் நிறுத்த போதிய வசதிகள் இல்லாத நிலையில் திருமணங்களுக்கு வருபவர்கள் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அந்த நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்கப்படுத்த திருமண  மண்டப உரிமையாளர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து கவுன்சிலர்கள் அறிவழகன், வடிவேலு, பாலசுப்பிரமணியம், வெங்கடேசன், சிராஜுதின், வெண்ணிலா சண்முகவேல், சரஸ்வதி, லட்சுமி ராஜா ஆகியோர் பேசினர்.

 


Page 48 of 238