Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

தேனி புதிய பஸ் நிலையம்

Print PDF

தினமணி            26.08.2013

தேனி புதிய பஸ் நிலையம்

தேனியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

       தேனியில், தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை சிட்கோ வளாகம் பின்புறம் உள்ள இடத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலையப் பணி கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.

  புதிய பஸ் நிலையத்துக்கான அணுகு சாலையை சீரமைக்க வனத் துறையிடம் அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால், பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்குத் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், நகராட்சி புதிய பஸ் நிலையத்தை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதிய பஸ் நிலைய திறப்புக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.     மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, தேனி நகர் மன்றத் தலைவர் எஸ்.முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

74 லட்சத்தில் அடிப்படை வசதிகள்

Print PDF

தமிழ் முரசு          24.08.2013

74 லட்சத்தில் அடிப்படை வசதிகள்

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சி கூட்டம் தலைவர் அமுதா முனுசாமி தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் ஜெ.மகாதேவன், செயல் அலுவலர் முருகன் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் பங்கஜம் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பாஸ்கரன், எல்.சங்கர், மாலதி, வி.சங்கர், தி.வே.முனுசாமி, முருகன், கருணாநிதி, வேணுகோபால், செண்பகவல்லி, திருநாவுக்கரசு, சுபாஷினி, விஜயலட்சுமி, சந்திரன், ராசாத்தி ஆகியோர் குறைகளை குறித்தும் அவற்றை நிறைவேற்றி தரும்படியும் கேட்டுக்கொண்டனர்.

இதன் பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

திருமழிசை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 5 இடங்களில் ரூ.10 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் தொட்டி அமைக்க வேண்டும். ரூ.4 லட்சத்தில் மடவிளாகம் பம்ப் அறை முதல் தெற்கு மாடவீதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிவரை பைப் லைன் அமைப்பது, ரூ.40 லட்சம் மதிப்பில் பாரதி நகரில் தார் சாலை அமைப்பது. ரூ.20 லட்சம் மதிப்பில் குண்டுமேடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு சுற்றுச்சுவர் கட்டுவது தரைமட்ட தொட்டி, பம்ப் அறை கட்டுவது. ஜோசப் நன்றி கூறினார்.

 

ரூ. 2 கோடி செலவில் கோவை டைடல் பார்க்கிற்கு தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர்

Print PDF

தினத்தந்தி              23.08.2013 

ரூ. 2 கோடி செலவில் கோவை டைடல் பார்க்கிற்கு தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர்


 

 

 

 

 

கோவை பீளமேட்டில் உள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு(டைடல் பார்க்) தினமும் 1 கோடியே 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கான குழாய் இணைப்பு பணியை மேயர் செ.ம.வேலுச்சாமி தொடங்கி வைத்தார்.

டைடல் பார்க்கிற்கு குடிநீர்

கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையிலிருந்து தற்போது தினமும் ஒரு கோடியே 20 லட்சம் லிட்டர் குடிநீரும், பில்லூர் முதல் திட்டத்திலிருந்து தினமும் 6 கோடியே 20 லட்சம் லிட்டரும், இரண்டாவது திட்டத்திலிருந்து 3 கோடி லிட்டரும் எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை பீளமேட்டில் டைடல் பார்க் உள்ளது இங்கு 50-க்கும் மேற்பட்ட சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கு தேவையான குடிநீரை டைடல் பார்க் நிறுவனம் இதுவரை வெளியிலிருந்து தான் வாங்கி வந்தது. தற்போது கோவை மாநகராட்சி சார்பில் டைடல் பார்க்கிற்கு தினமும் ஒரு கோடியே 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது.இதற்காக கோவை கணபதி ராமகிருஷ்ணாபுரம் பிரதான குடிநீர் தொட்டியிலிருந்து (எம்.எஸ்.ஆர்.)பீளமேட்டில் உள்ள டைடல் பார்க்கிற்கு குடிநீர் சப்ளை செய்வதற்கான குழாய்கள் பதிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் கோவை மேயர் செ.ம.வேலுச்சாமி கலந்து கொண்டு குழாய் பதிப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.

ரூ. 2 கோடி செலவில்...

இந்தநிகழ்ச்சியில் சேலஞ்சர் துரை எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் லதா, துணை ஆணையாளர் சிவராசு, கிழக்கு மண்டல தலைவர் கே.ஆர்.ஜெயராமன்,குழுத்தலைவர்கள் அம்மன்அர்ச்சுனன், பிரபாகரன், கவுன்சிலர் சால்ட்வெள்ளிங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை ராமகிருஷ்ணாபுரத்திலிருந்து பீளமேடு டைடல் பார்க்கிற்கு குழாய்கள் பதிப்பு மற்றும் கட்டுமான பணிகள் ரூ. 1 கோடியே 92 லட்சம் செலவில் நடைபெற உள்ளது.சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு 200 மி.மீட்டர் விட்டத்தில் இந்த குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இந்த பணிகள் 3 மாதத்தில் முடிக்கப்பட உள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினார்கள்.

 


Page 51 of 238