Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

வேலூர் நகராட்சி மண்டலத்தில் ரூ.5 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டிகள் பணிகள் அரக்கோணத்தில் ஆய்வு நடத்திய நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் தகவல்

Print PDF

தினத்தந்தி                18.06.2013 

வேலூர் நகராட்சி மண்டலத்தில் ரூ.5 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டிகள் பணிகள் அரக்கோணத்தில் ஆய்வு நடத்திய நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் தகவல்

வேலூர் நகராட்சி மண்டலத்தில் ரூ.5 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் நடராஜன் தெரிவித்தார்.

ஆய்வு

அரக்கோணம் நகராட்சி அலுவலகத்திற்கு நேற்று வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் நடராஜன் வருகை தந்தார். அலுவலகத்தில் அவர் கோப்புகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள், வருகை பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ரூ.5¼ கோடியில் பணிகள்

வேலூர் மண்டல நகராட்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இதில் மொத்தம் 18 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் 5 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரக்கோணத்தில் ஒருங்கிணைந்த நகராட்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் சாலை பணிகள், கால்வாய் பணிகள், குடிநீர் பணிகள், வடிகால் வசதி பணிகள் 3 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. வறட்சி நிவாரண திட்டத்தின்கீழ் 68 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு 36 வார்டுகளிலும் கை பம்பு, ஆழ்துழை கிணறு, மின்மோட்டார் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 18 வார்டுகளில் பணிகள் நிறைவு பெற்று உள்ளன. மீதமுள்ள 18 வார்டுகளில் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரக்கோணத்தில் உள்ள நகராட்சி ஒப்பந்தகாரர்களை அழைத்து பொதுமக்களின் நலன் கருதி வேகமாக பணிகளை முடித்துதர உத்தரவிடப்பட்டு உள்ளது.

எரிவாயு தகன மேடை

அரக்கோணம் நேருஜி நகர் பகுதியில் 60 லட்சம் ரூபாய் செலவில் எரிவாயு தகனமேடை கட்டி முடிக்கப்பட்டு விட்டது. மிகச்சிறிய மின் இணைப்பு பணிகள் மட்டுமே உள்ளன. இம்மாதம் 30–ந் தேதிக்குள் முழுமையான பணிகள் முடிக்கப்படும். அடுத்த மாதம் 10–ந் தேதிக்குள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். அரக்கோணம் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு பிணத்தை பெற்று எரிவாயு தகனமேடை முழுமையாக சரியாக செயல்படுகிறதா என்று சோதனை செய்யப்படும். சாதாரணமாக பிணத்தை எரிப்பதற்கு ரூ.12 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என்று பொதுமக்கள் செலவு செய்கிறார்கள். ஆனால் எரிவாயு தகனமேடையில் ஒரு பிணத்தை எரிப்பதற்கு 700 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். அதற்கு ரசீதுகள் கொடுக்கப்படும்.

மழை நீர் சேகரிப்பு பணி

 மழைநீர் சேகரிப்பு பணிகள் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் நகராட்சிகளில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு நகராட்சிகளில் ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரித்தால்தான் நாம் நிலத்தடி நீரை பெற முடியும் என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

வேலூர் மண்டலத்தில் மொத்தம் 61 குளங்கள் உள்ளன. இவற்றில் மழைநீர் வரத்திற்கான கால்வாய்கள் சரிசெய்யப்பட உள்ளது. இதன் மூலமாக குளங்களில் மழைநீர் தேங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

பேட்டியின்போது நகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், பொறியாளர் டி.ராஜவிஜயகாமராஜ் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக நகராட்சி ஒப்பந்தகாரர்களுடன் நிர்வாக இயக்குனர் நடராஜன் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் ஒப்பந்தகாரர்கள் வி.ஆர்.பி.ராஜா, கோபண்ணாரவி, வீரராகவன், சதீஷ், பத்மநாபன், முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

புதிய பேரூராட்சிக் கட்டடம் திறப்பு

Print PDF

தினமணி             17.06.2013

புதிய பேரூராட்சிக் கட்டடம் திறப்பு

ரூ. 30 லட்சம் செலவில் சித்தையன் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேரூராட்சிக் கட்டடத்தை, மின்துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

  அதன் பின்னர், சித்தரேவு ஊராட்சியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்திற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

 இந்த இரு விழாக்களுக்கும் ஆட்சியர் ந. வெங்கடாசலம் தலைமை வகித்தார்.

 

தமிழகத்திற்கு திட்ட நிதியாக ரூ.37.128 கோடி ஒதுக்கீடு

Print PDF
தினபூமி       11.06.2013

தமிழகத்திற்கு திட்ட நிதியாக ரூ.37.128 கோடி ஒதுக்கீடு


புதுடெல்லி, ஜூன்.11 - டெல்லியில் நேற்று  மாலை நடைபெறும் திட்டக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று ,அங்கு மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை சந்தித்து தமிழ்நாட்டின் 20132014ம் ஆண்டு திட்டங்களுக்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தினார்.

டெல்லியில் நடைபெறும்  திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று சென்னையில் இருந்து வருகை தந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விமான நிலையத்திலும், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது..

புதுடெல்லியில்நேற்று மாலை நடைபெறும் திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று  காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புதுடெல்லி வருகை தந்தார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்திற்கு போயஸ் கார்டனில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா புறப்பட்டபோது செய்தியாளர்கள் அவரை சந்தித்தனர். டெல்லி பயணம் குறித்தும், நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தும் சில கருத்துக்களை முதலமைச்சர் நிருபர்களிடம் தெரிவித்து பின்னர் விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.

போயஸ் தோட்ட வளாகத்திலும், சென்னை விமான நிலையத்திலும் தமிழக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் மலர் கொத்து கொடுத்து முதல்வரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

டெல்லி வருகை தந்த முதலமைச்சரை விமான நிலைய வளாகத்தில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், அதிமுக எம்பிக்கள் டாக்டர் மைத்ரேயன், தம்பிதுரை, ஓ.எஸ்.மணியன், குமார், இளவரசன், திருப்பூர் சிவசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் முதலமைச்சருக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

விமான நிலையத்திற்கு வெளியே டெல்லி பிரதேச அதிமுக சார்பில் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமான மகளிர்களும் கைகளில் அதிமுக கொடிகளை ஏந்தி வாழ்த்து முழக்கம் எழுப்பி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சரை அதிகாரிகள் வரவேற்றனர். அங்கு தமிழ்நாடு காவல் துறை சார்பில் சிறப்பு அணிவகுப்பும் முதல்வருக்கு வழங்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார். அங்கு மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாவை  சந்தித்த்து பேசினார். அப்போது, தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திட்டக்குழு துணைத் தலைவர் அலுவாலியாவிடம் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டிஅளித்த அவர், தமிழகத்துக்கு 37,128 கோடி நிதி ஒதுக்கும்படி கேட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு நிருபர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:-

2013-14 நிதியாண்டில் தமிழகத்திற்கு ரூ.37 ஆயிரத்து 128 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சென்ற ஆண்டிலும் 20 ஆயிரம் கோடிரூபாய் அளவுக்கு திட்ட இலக்கைக்கூடாது தமிழகம் சாதனை படைத்தது. அதேபோல இப்போதும் 37 ஆயிரம் கோடி திட்ட இலக்கை கடந்து தமிழகம் சாதனை படைக்கும்.

பா.ஜனதா கட்சியின் பொறுப்புகளில் இருந்து அத்வானி விலகியது உட்கட்சி விவகாரம். அதுபற்றி கூற முடியாது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடும். பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.
Last Updated on Tuesday, 11 June 2013 11:05
 


Page 61 of 238