Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மாநகராட்சிக் கட்டடங்களில் சூரிய மின்சக்தி அமைப்பு ஏற்படுத்த முடிவு

Print PDF
தினமணி         30.05.2013

மாநகராட்சிக் கட்டடங்களில்  சூரிய மின்சக்தி அமைப்பு ஏற்படுத்த முடிவு


திருநெல்வேலி மாநகராட்சி கட்டடங்களின் மேல் தளத்தில் சூரியஒளி மூலம் மின்சாரம் பெறும் அமைப்பை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 மின் பற்றாக்குறையைச் சமாளிக்க சூரியஒளி மின்சக்திக்கு முதல்வர் ஜெயலலிதா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதையடுத்து கடந்த ஆண்டு சூரியஒளி மின்சக்தி கொள்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 2015-க்குள் சூரியஒளியில் இருந்து 3,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டடங்களில் சூரியஒளி மின்சக்தி வசதி கட்டாயம் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள கட்டடங்களில் சூரியஒளி மின்தகடுகளைக் கொண்ட கூரைகள் படிப்படியாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில் சூரியஒளி மின்சக்தி சாதனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மின்சிக்கனத்தையும், சூரியஒளி மின்சாரம் தயாரித்து பயன்படுத்திக் கொள்ளும் அமைப்பையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

 இதற்காக தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சூரியஒளி மின்சக்தி அமைப்பு ஏற்படுத்துவதற்கான அளவுக் குறியீடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவு குறியீடுபடி சூரியஒளி அமைப்பை மாநகராட்சி கட்டடங்களின் மேல் தளங்களில் படிப்படியாக அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான செலவை தமிழக அரசிடம் இருந்து பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெறும் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

வ‌ட்ட‌ச்சா‌லை, ரயி‌ல்‌வே ‌மே‌ம்பால‌ம் அமைக்க ரூ.65 ‌கோடி: மேய‌ர் தகவ‌ல்

Print PDF
தினமணி         30.05.2013

வ‌ட்ட‌ச்சா‌லை, ரயி‌ல்‌வே ‌மே‌ம்பால‌ம் அமைக்க ரூ.65 ‌கோடி: மேய‌ர் தகவ‌ல்


ஈ‌ரோடு மாநகரா‌ட்சியி‌ல் வ‌ட்ட‌ச்சா‌லை, ரயி‌ல்‌வே ‌மே‌ம்பால‌ம் அமைக்க ரூ.65.5 ‌கோடி ஒ‌து‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள‌து எ‌ன்று ‌மேய‌ர் ப.ம‌ல்லிகா பரமசிவ‌ம் கூறினா‌ர்.

ஈ‌ரோடு மாம‌ன்ற‌க் கூ‌ட்ட‌ம், ‌மேய‌ர் ம‌ல்லிகா பரமசிவ‌ம் த‌லை‌மையி‌ல் புத‌ன்கிழ‌மை ந‌டை‌பெ‌ற்ற‌து. ‌து‌ணை ‌மேய‌ர் ‌கே.சி.பழனி‌ச்சாமி மு‌ன்னி‌லை வகி‌த்தா‌ர்.

கூ‌ட்ட‌ம் ‌தொட‌ங்கிய‌து‌ம் ‌மேய‌ர் ‌பேசிய‌து:

ஈ‌ரோடு மாநகரா‌ட்சி பகுதிகளி‌ல் ‌சேகரி‌க்க‌ப்படு‌ம் திட‌க்கழிவுகளி‌ல் இரு‌ந்‌து மி‌ன்சார‌ம் தயாரி‌க்கு‌ம் தி‌ட்ட‌த்‌து‌க்கு ரூ.90 ல‌ட்சமு‌ம், ‌போ‌க்குவர‌த்‌து ‌நெரிச‌லை கு‌றை‌க்கு‌ம் வ‌கையி‌ல் ஈ‌ரோடு அரசு மரு‌த்‌துவம‌னை அரு‌கே புதிய ‌மே‌ம்பால‌ம் அமைக்க ரூ.50 ‌கோடியு‌ம், வ‌ட்ட‌ச்சா‌லை, சா‌ஸ்திரி நகரி‌ல் ரயி‌ல்‌வே ‌மே‌ம்பால‌ம் அமைக்க ரூ.65.60 ‌கோடியு‌ம் தமிழக அரசு ஒ‌து‌க்கியு‌ள்ள‌து.

இத‌ற்காகவு‌ம், மாநகரா‌ட்சி பகுதியி‌ல் 10 இட‌ங்களி‌ல் அ‌ம்மா உணவக‌ம் திற‌க்க முத‌ல்வ‌ர் ‌ஜெயலலிதா உ‌த்தரவி‌ட்டு‌ள்ளத‌ற்காகவு‌ம் ந‌ன்றி‌யை ‌தெரிவி‌த்‌து‌க்‌கொள்கி‌றே‌ன் எ‌ன்றா‌ர். அ‌தை‌த் ‌தொட‌ர்‌ந்‌து ம‌ன்ற‌க் கூ‌ட்ட‌த்தி‌ல் ந‌டை‌பெ‌ற்ற விவாத‌ம்:

46-வ‌து வார்டு உறு‌ப்பின‌ர் எ‌ம். ஈ‌ஸ்வரமூ‌ர்‌த்தி (அதிமுக): என‌து வார்டி‌ல் உ‌ள்ள மு‌த்‌து‌ச்சாமி காலனியி‌ல் குடிநீ‌ர்‌ப் ப‌ற்றா‌க்கு‌றை அதிகமாக உ‌ள்ள‌து. இத‌ற்கு தீ‌ர்வுகாண உரிய நடவடி‌க்‌கை எடு‌க்க ‌வே‌ண்டு‌ம்.

‌மேய‌ர்: குடிநீ‌ர்‌ப் பிர‌ச்‌னை‌க்கு மு‌ன்னுரி‌மை அளி‌த்‌து உடனடி நடவடி‌க்‌கை எடு‌க்க‌ப்படு‌ம்.

ம‌ண்டல‌த் த‌லைவ‌ர் இரா.ம‌னோகர‌ன் (அதிமுக): ‌து‌ப்புரவு‌த் ‌தொழிலாள‌ர்களு‌க்கு  ‌மே‌ஸ்திரியாக பதவி உய‌ர்வு அளி‌க்க ‌வே‌ண்டு‌ம்.

ஆ‌ணைய‌ர் மு.விஜயல‌ட்சுமி: அரசி‌ன் விதிமு‌றைகளு‌க்கு உ‌ள்ப‌ட்டு அலுவலக உதவியாளராக பதவி உய‌ர்வு அளி‌க்க‌ப்படு‌ம்.

35-வ‌து வார்டு உறு‌ப்பின‌ர் த‌ங்க‌வே‌ல் (அதிமுக): என‌து வார்டி‌ல் உ‌ள்ள ப‌ழையபா‌ளைய‌த்தி‌ல் பாதாள சா‌க்க‌டை தி‌ட்ட‌த்‌து‌க்காக சா‌லை ‌தோ‌ண்ட‌ப்ப‌ட்டு ‌வே‌லை முடி‌க்க‌ப்படாம‌ல் குழி மூட‌ப்ப‌ட்டுவி‌ட்ட‌து. இதனா‌ல், அ‌ப்பகுதியி‌ல் பாதாள சா‌க்க‌டை தி‌ட்ட‌ம் பாதி‌க்க‌ப்ப‌ட்ட‌தோடு, சா‌லையு‌ம் பழுத‌டை‌ந்‌து‌ள்ள‌து.

‌மேய‌ர்: சரியாக ‌வே‌லை ‌செ‌ய்யாத ஒ‌ப்ப‌ந்ததார‌ர்க‌ளை மா‌ற்றிவி‌ட்டு ‌வேறு நபரிட‌ம் அ‌ப்பணி‌யை வழ‌ங்க நடவடி‌க்‌கை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள‌து.

45-வ‌து வார்டு உறு‌ப்பின‌ர் எ‌ன்.விநாயகமூ‌ர்‌த்தி (விடுத‌லை‌ச் சிறு‌த்‌தைக‌ள்): என‌து வார்டி‌ல் தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட ம‌க்க‌ள் அதிகமாக வசி‌த்‌து வருகி‌ன்றன‌ர். இ‌ப்பகுதி‌க்கு இ‌துவ‌ரை வி‌லையி‌ல்லா மி‌ன்விசிறி, கி‌ரை‌ண்ட‌ர், மி‌க்ஸி வழ‌ங்க‌ப்படவி‌ல்‌லை.

‌து‌ணை ‌மேய‌ர் ‌கே.சி.பழனிசாமி: சிறிய வார்டுகளி‌ல்தா‌ன் முதலி‌ல் வி‌லையி‌ல்லா ‌பொரு‌ள்க‌ள் வழ‌ங்க‌ப்ப‌ட்டு வருகி‌ன்றன. ஈ‌ரோடு கிழ‌க்கு‌த் ‌தொகுயி‌ல் ‌தேமுதிக உறு‌ப்பின‌ர் ‌வெ‌ற்றி ‌பெ‌ற்றாலு‌ம்கூட, அ‌ங்குதா‌ன் அதிகமாக வி‌லையி‌ல்லா ‌பொரு‌ள்க‌ள் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. இ‌ந்த ஆ‌ண்டு முத‌ல்வ‌ர் கூடுதலாக வி‌லையி‌ல்லா ‌பொரு‌ள்களு‌க்கு நிதி ஒ‌து‌க்கியு‌ள்ளா‌ர். என‌வே, இ‌ந்த ஆ‌ண்டு நி‌ச்சய‌ம் வழ‌ங்க‌ப்படு‌ம்.

54-வ‌து வார்டு உறு‌ப்பின‌ர் சபுராமா (கா‌ங்கிர‌ஸ்): என‌து வார்டி‌ல் உ‌ள்ள ப‌ன்றி வள‌ர்‌க்கு‌ம் ப‌ட்டிக‌ளை ‌வேறு இட‌த்‌து‌க்கு மா‌ற்ற ‌வே‌ண்டு‌ம். வற‌ட்சியி‌ன் காரணமாக ஆ‌ழ்‌து‌ளை கிணறுகளி‌ல் கூட த‌ண்ணீ‌ர் இ‌ல்‌லை. ஆ‌ழ்‌து‌ளை கிண‌ற்றி‌ல் ஆழ‌த்‌தை அதிகரி‌க்க ‌வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர்.
 

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் குப்பை அள்ளுவதற்காக புதிய வாகனங்கள்: மேயர் தொடங்கி வைத்தார்

Print PDF
தினத்தந்தி        29.05.2013

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் குப்பை அள்ளுவதற்காக புதிய வாகனங்கள்: மேயர் தொடங்கி வைத்தார்


விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் குப்பை அள்ளுவதற்காக புதிய வாகனங்களை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார்.

புதிய வாகனங்கள்

மதுரை மாநகரை தூய்மையாக பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குப்பை அள்ளுவதற்கு தேவையான வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவதில் மாநகராட்சி முனைப்பு காட்டி வருகிறது. அதன்ஒரு பகுதியாக மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த பகுதிகளில் குப்பைகள் அள்ளுவதற்காக 17 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது.

அந்த வாகனங்களின் செயல்பாட்டினை மேயர் ராஜன்செல்லப்பா கொடி அசைத்து நேற்று தொடங்கி வை த்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.

குப்பையில்லா நகரம்

நிகழ்ச்சியின் போது மேயர் பேசியதாவது:–

மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளுக்கு தேவையான டம்பர் பின், காம்பேக்டர் பின், டம்பர் பிளேசன் மற்றும் காம்பேக்டர் ஆகிய வாகனங்கள் வாங்குவதற்கு தமிழக அரசு ரூ.10 கோடி மானியமாக தந்துள்ளது. இந்த நிதியில் ஒவ்வொரு பகுதியாக வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது.

முதல்கட்டமாக 17 வாகனங்கள் கடந்த 11–ந் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. இரண் டாம் கட்டமாக இன்று 17 வாகனங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த வாகனங்கள் துப்புரவு பணிகள் சீராக்கப்பட்டு, குப்பையில்லா நகரமாக மதுரை மாற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் நகர் பொறியாளர் (பொறுப்பு) மதுரம், உதவி கமிஷனர் தேவதாஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 


Page 63 of 238