Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

துப்புரவுப் பணிக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கல்

Print PDF
தினமணி        21.05.2013

துப்புரவுப் பணிக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கல்


ஒட்டன்சத்திரம் நகராட்சி துப்புரவுப் பணிக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் துப்புரவுப் பணிக்கு பயன்படும் வகையில் மூன்று சக்கர மிதிவண்டிகள் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5,20 லட்சத்தில் வாங்கப்பட்டன. அதே போல திடக்கழிவு மேலாண்மை பணி நிதி ஒதுக்கீட்டில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் நான்கு சக்கர மினி டிப்பர் ஆட்டோ ஒன்றும் வாங்கப்பட்டது. அவற்றை துப்புரவுப் பணியாளர்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் பி.பழனியம்மாள் கலந்து கொண்டு துப்புரவுப் பணியாளர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் ஜெ.ஜமால்தீன், அதிமுக தொகுதி கழகச் செயலாளர் பாலசுப்பிரமணி, நகராட்சி ஆணையர் எம்.ஜோதிக்குமார், நகர்மன்ற உறுப்பினர் கே.பி.வி. மனோகரன், தலைமை எழுத்தர் முத்துகுமரன், ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

நகரை தூய்மையாக்க 87 குப்பை வண்டிகள்

Print PDF
தினமணி        19.05.2013

நகரை தூய்மையாக்க 87 குப்பை வண்டிகள்


விழுப்புரம் நகராட்சியை தூய்மையாக்கும் திட்டத்தில் 87 புதிய குப்பை அள்ளும் தள்ளுவண்டிகள், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த தள்ளுவண்டிகள் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ளன. நகராட்சித் தலைவர் பாஸ்கர், இந்த புதிய வாகனங்களை பயன்பாட்டுக்கு வழங்கி குப்பை அள்ளும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்த புதிய தள்ளுவண்டிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பச்சை நிற வண்டிகளில் மக்கும் குப்பைகளும், சிவப்பு நிற வண்டிகளில் மக்காத குப்பைகளும் சேகரிக்கப்படும். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

மாநகராட்சி வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவி

Print PDF
தினமலர்     07.05.2013

மாநகராட்சி வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவி


சேலம்: சேலம் மாநகராட்சியில் பயன்படுத்தப்பட்டு வரும், 70 வாகனங்களில், நேற்று ஜி.பி.எஸ்., (புவி அமைப்பு தெரிவிக்கும் கருவி) பொருத்தப்பட்டது. இதனால், அலட்சியமாக செயல்பட்டு வந்த டிரைவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.சேலம் மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணி மற்றும் குடிநீர் வினியோகப்பணி ஆகியவற்றுக்காக டிராக்டர்கள், லாரிகள் உட்பட, 70 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாநகரில், தேக்கம் அடையும் குப்பைகளை அள்ளும் வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள், ஆமை வேகத்தில் வாகனங்களை ஓட்டி சென்றும், குப்பை கொட்டும் இடங்களில் மணிக்கணக்கில் வாகனத்தை கிடப்பில் போட்டும் பணியில் அலட்சியம் காட்டினர்.

ஒரு நாளைக்கு, அதிகப்பட்சம், இரண்டு நடை (டிரிப்) மட்டுமே வாகனங்கள் ஓட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆனால், நடை கணக்கு எழுதும் புத்தகத்தில், கூடுதல் நடை சென்றதாக பொய்யான தகவலை பதிவு செய்து வருகின்றனர். குப்பை அள்ளும் பணியில் மட்டுமின்றி குடிநீர் வினியோகத்திலும், இதே குளறுபடிகளை செய்து வருகின்றனர்.அரசியல் கட்சி பிரமுகர்களின் நிர்பந்தம், கமிஷன் தொகை உள்ளிட்ட காரணங்களுக்காக, பல டிரைவர்கள், அதிகாரிகளுக்கு தெரியாமல், தனியார் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றுக்கு கணக்கில் வராமல், குடிநீரை சப்ளை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

டிரைவர்களின் இந்த நடவடிக்கையால், மாநகரில் குப்பைகள் தேக்கம் அடைவதோடு, சரியான நேரத்துக்கு குடிநீர் வினியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களை முறையாக கண்காணிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைப்பணி மற்றும் குடிநீர் வினியோக பணியில் ஈடுபட்டுள்ள, 70 வாகனங்களுக்கு, நேற்று கோவையை சேர்ந்த ஜே டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தார் மூலம், 13 லட்சம் ரூபாய் செலவில், ஜி.பி.எஸ்., (புவி அமைப்பு தெரிவிக்கும் கருவி) பொருத்தப்பட்டது.
 
இதற்கான துவக்க விழாவில், மேயர் சவுண்டப்பன், மாநகராட்சி கமிஷனர் அசோகன், துணை மேயர் நடேசன், செயற்பொறியாளர்கள் அசோகன், காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளதால், மாநகராட்சி வாகனங்கள் புறப்படும் இடம், சென்று சேரும் இடம், செல்லும் தூரம், எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது, வாகனம் இயக்கத்தில் உள்ளதா, நிறுத்தப்பட்டுள்ளதா என்பது போன்ற விவரங்கள், மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டருக்கு தொடர்ந்து தகவல்கள் துல்லியமாக வந்து கொண்டிருக்கும்.மாநகராட்சி வாகனங்களை அலட்சியமாக இயக்கி வந்த டிரைவர்களை கண்காணிக்கும் விதமாக, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டதை, பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
 


Page 66 of 238