Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மாநகராட்சி சார்பில் 4 இலவச பல் மருத்துவமனைகள் திறப்பு

Print PDF
தினமணி                23.04.2013

மாநகராட்சி சார்பில் 4 இலவச பல்  மருத்துவமனைகள் திறப்பு


சென்னை மாநகராட்சியின் சார்பில் 4 இலவச பல் மருத்துவமனைகள் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

சென்னையில் மாநகராட்சி சார்பில் 11 இடங்களில் இலவச பல் மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி ஆழ்வார்பேட்டையில் முதல் பல் மருத்துவமனை ஏப்ரல் 19-ஆம் தேதி திறக்கப்பட்டது. திங்கள்கிழமை ஒரே நாளில் 4 இடங்களில் பல் மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.

கந்தன் சாவடியில் உள்ள மருத்துவமனையையை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா திறந்து வைத்தார். மேயர் சைதை துரைசாமி, கே.பி.கந்தன் எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் ராஜாராம், மண்டல மருத்துவ அதிகாரி டாக்டர் கல்யாணி, உதவி ஆணையர் இளஞ்செழியன், கவுன்சிலர்கள் அமுதா வெங்கடேஷ், ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். நங்கநல்லூர், அண்ணாநகர், பெசன்ட் நகர் எல்லையம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் பல் மருத்துவமனைகளை மேயர் சைதை துரைசாமி திறந்து வைத்தார். மேலும், நெற்குன்றம், வியாசர்பாடி, இளங்கோநகர், செம்பியம், அம்பத்தூர் வரதராஜபுரம் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமையும், கத்திவாக்கம் பஜார் தெரு, மாதவரம் கண்ணபிரான் கோவில் தெரு ஆகிய இடங்களில் 25-ஆம் தேதியும் பல் மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளன.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பில் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சியில் ஏற்கெனவே 4 பல் மருத்துவர்கள் உள்ளனர். இப்போது கூடுதலாக 26 புதிய பல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பல் மருத்துவமனை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும்.
 

போடியில் நவீன எரிவாயு தகன மேடை திறப்பு

Print PDF
தினமணி        21.04.2013

போடியில் நவீன எரிவாயு தகன மேடை திறப்பு

போடி நகராட்சி மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

போடி நகராட்சி மயானத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. இந்த எரிவாயு தகன மையம் 2 மாதங்களுக்கு முன் சோதனை ரீதியாக திறக்கப்பட்டு, சடலங்கள் எரியூட்டப்பட்டன. இதில், பணியாளர்களுக்கு உரிய பயிற்சிகள், ஓட்டன்சத்திரம் நகராட்சி மூலம் வழங்கப்பட்டது.

பயிற்சி மற்றும் சோதனைகள் நிறைவுபெற்று, முறையான திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், நகராட்சி ஆணையர் எஸ். சசிகலா தலைமை வகித்தார். நகராட்சிப் பொறியாளர் ஆர். திருமலைவாசன், துணைத் தலைவர் ஜி. வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்றத் தலைவர் வி.ஆர். பழனிராஜ், எரிவாயு தகன மேடை மையத்தை திறந்து வைத்தார்.

பின்னர், மயானத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர், ஆணையர் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்னர். பெரியார் சேவை மைய தலைவர் ச. ரகுநாகநாதன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், வர்த்தகர் சங்கம், லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம், ஏலக்காய் வியாபாரிகள் சங்கம், நால்வர் தெய்வீகப் பேரவை, விவேகானந்தா சமூக சேவை அறக்கட்டளை, சர்வலிங்கம் அன்னதான அறக்கட்டளை ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
 

ரூ.33.22 லட்சம் மதிப்புள்ள கட்டடங்கள் திறப்பு

Print PDF
தினமணி        21.04.2013

ரூ.33.22 லட்சம் மதிப்புள்ள கட்டடங்கள் திறப்பு


கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.33.22 லட்சம் செலவில் கட்டப்பட்ட நூலகக் கட்டடம், ஸ்கேன் அறை, மருத்துவமனை கூடுதல் கட்டடம், வணிக கட்டடம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட கட்டடம் ஆகியவற்றை மேயர் செ.ம. வேலுசாமி சனிக்கிழமை திறந்து வைத்தார்.

68-வது வார்டுக்கு உள்பட்ட ராமநாதபுரம் 80 அடி சாலையில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நூலகக் கட்டடம், 72-வது வார்டுக்கு உள்பட்ட டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் ரூ.6.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்கேன் அறை, 51-வது வார்டு டிக்கி பாய் மகப்பேறு மருத்துவமனையில் ரூ.6.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடம், 81-வது வார்டு திருமால் வீதியில் ரூ.4.02 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிகக் கட்டடம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட கட்டடத்தை மேயர் குத்துவிளக்கேற்றித் திறந்து வைத்தார்.

ஆணையாளர் க.லதா, எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை, துணை மேயர் லீலாவதி உண்ணி, மாநகரப் பொறியாளர் கே.சுகுமார், மத்திய மண்டலத் தலைவர் கே.ஏ. ஆதிநாராயணன், உதவி ஆணையாளர் (பொ) ஏ.லட்சுமணன், நியமனக் குழு உறுப்பினர் எம்.ராஜேந்திரன், பணிக்குழுத் தலைவர் அம்மன் அர்ச்சுனன், கல்விக் குழுத் தலைவர் ஆர்.சாந்தாமணி, சுகாதாரக் குழுத் தலைவர் எஸ்.தாமரைச்செல்வி, கணக்குக் குழுத் தலைவர் கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜே.அசோக்குமார், ஜே.சசிரேகா, கே.சக்திவேல், எம்.ஏ. குத்புதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 


Page 68 of 238