Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

காயல்பட்டினம் நகராட்சியில் நவீனகுப்பைத் தொட்டிகள்

Print PDF
தினமணி        21.04.2013

காயல்பட்டினம் நகராட்சியில் நவீனகுப்பைத் தொட்டிகள்


தமிழக அரசின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், காயல்பட்டினம் நகராட்சி வார்டுகளில் குப்பை சேகரிக்கும் நவீனத் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கோவை ஷார்ப் சிஸ்டம் நிறுவனத்துக்கு நகர்மன்றம் சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டு, குப்பை சேகரிக்கும் நவீன தொட்டிகள் பெறப்பட்டு வருகின்றன. நகராட்சி சார்பில் உச்சினிமாகாளியம்மன் கோவில் தெரு, காட்டு தைக்கா தெரு உள்ளிட்ட பகுதிகளில் குப்பை சேகரிக்கும் நவீன தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவில் குப்பைத் தொட்டி வைக்கப்படும்போது, அந்த வார்டு உறுப்பினர் கே.ஜமால், அதிமுக 15-வது வார்டு செயலர் காசிலிங்கம், அப்பகுதியைச் சேர்ந்த கணேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
 

சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ரூ.75 கோடியில் சாலை மற்றும் வளர்ச்சி பணிகள்

Print PDF
தினத்தந்தி                  15.04.2013

சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ரூ.75 கோடியில் சாலை மற்றும் வளர்ச்சி பணிகள்

சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர், 15–வது மண்டலத்தின் மண்டலக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அதன் தலைவர் என்.சுந்தரம் தலைமை தாங்கினார். மண்டல அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ரூ.74 கோடியே 87 லட்சத்தில் சாலை பணிகள், பள்ளி கழிப்பறை மற்றும் பள்ளி கட்டிடம் சீரமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. மொத்தம் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்பொறியாளர் நடராஜ், உதவி செயற்பொறியாளர் பாலாஜி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

ஈரோட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க திட்டம்

Print PDF
தினமணி        09.04.2013

ஈரோட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க திட்டம்


ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக திங்கள்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக தனியார் நிறுவனம் உதவியுடன் மாநில அரசு ஆய்வு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தனியார் நிறுவனத்தின் ஆலோசகர் லீனா கரில்லா தலைமையிலான குழுவினர் ஈரோட்டுக்கு திங்கள்கிழமை வந்தனர். மேயர் ப.மல்லிகா பரமசிவம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு துணைமேயர் கே.சி.பழனிசாமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனை குறித்து மேயர் மல்லிகா பரமசிவம் கூறியது:

ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு மருத்துவமனை அருகே மேம்பாலம், 80 அடி சாலைத் திட்டம் மற்றும் பிற சாலைகளை மேம்படுத்த ஆலோசிக்கப்பட்டது. அதேபோல கனி மார்க்கெட்டில் ரூ.37 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய பசுமை வளாகம் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது.

கங்காபுரம், முத்தம்பாளையம் பகுதிகளில் குளிர்பதனக் கிடங்கு அமைக்கவும், பெருந்துறை சாலை, சித்தோட்டில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. சாக்கடை, குப்பை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் பலர் கருத்து தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், கருத்துகளை அறிக்கையாக தயாரித்து மாநில அரசிடம் தாக்கல் செய்ய இக்குழு முடிவு செய்துள்ளது என்றார். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி, மாநகராட்சிப் பொறியாளர் ஆறுமுகம், மாவட்ட அனைத்துத் தொழில்வணிகச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் என்.சிவநேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
 


Page 69 of 238