Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

கூடலூர் பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிக்காக பொதுமக்கள் பங்களிப்பு தொகை ரூ.20 லட்சம் கலெக்டர் கருணாகரனிடம் வழங்கப்பட்டது

Print PDF
தினத்தந்தி        09.04.2013

கூடலூர் பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிக்காக பொதுமக்கள் பங்களிப்பு தொகை ரூ.20 லட்சம் கலெக்டர் கருணாகரனிடம் வழங்கப்பட்டது


கூடலூர் பேரூராட்சியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளுக்கான பொதுமக்களின் பங்களிப்பு தொகை ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.

வளர்ச்சிப் பணிகள்


கோவை பெரியநாயக்கன்பாளையத்திற்கு அருகில் உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சியில் தன்னிறைவுத் திட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு பொதுமக்கள் சார்பில் பணம் வழங்கப்படுகிறது.பேரூராட்சியில் உள்ள சாமிசெட்டிபாளையத்திலிருந்து காமராஜ்நகர் செல்லும் வழியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பாலமும், பீக்காக் கார்டனில் ரூ.6 லட்சம் செலவில் தார்சாலையும் அமைக்கப்படுகின்றன.

பங்களிப்பு தொகை ரூ.20 லட்சம்

இதற்காக பேரூராட்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், பாலு, பேராசிரியர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் குழு அமைத்து பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ. 20 லட்சம் பெற்றனர். இதைதொடர்ந்து பேரூராட்சிகள் துணை இயக்குநர் திருஞானம் முன்னிலையில் பேரூராட்சித்தலைவர் அ.அறிவரசு, துணைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் பொதுமக்கள் சார்பில் ரூ.20 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டரிடம் கருணாகரனிடம் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சிவசாமி, முன்னாள் தலைவர் பாப்பண்ணன், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், முருகானந்தம், யு.ஐ.டி. கல்லூரி தாளாளர் சண்முகம் மற்றும் குடியிருப்பு நலமன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
 

கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுரங்க கார் நிறுத்தம்

Print PDF

தினமணி                  08.04.2013

கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுரங்க கார் நிறுத்தம்


கோயம்பேடு பஸ் நிலையத்தில் மேலும் ஒரு சுரங்க வாகன நிறுத்தம் கட்டுவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் லாரிகள் மற்றும் ஆம்னி பஸ்களை நிறுத்த 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. தற்போது அங்கு மெட்ரோ ரயில் நிலையமும் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக கோயம்பேடு பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

கோயம்பேடு பகுதி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கோயம்பேடு பகுதியில் காலியாக கிடந்த சுமார் 7 ஏக்கர் இடம் வாகனங்கள் நிறுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வாகன நிறுத்தும் இடம் சனிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய வாகன நிறுத்தும் இடத்தில் சுமார் 400 வாகனங்களை நிறுத்தலாம். இதற்கிடையே கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்குள்ளும் சமீப காலமாக வாகன பெருக்கம் மற்றும் வாகன வருகை அதிகரித்துள்ளது.

இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த சுரங்க வாகன நிறுத்தும் இடம் உள்ளது.

இந்த நிலையில் மேலும் சுரங்க வாகனம் நிறுத்தும் இடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் ரூ.20 கோடி செலவில் அந்த வாகன நிறுத்தம் கட்டப்பட உள்ளது.

இந்த புதிய சுரங்கப் பகுதியில் சுமார் 3 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களையும், 50 கார்களையும் நிறுத்த முடியும்.

 

மதுரையில் துணை நகரம் அமைக்கும் பணி துவக்கம் 6 மாதத்தில் நிலம் பயனாளிகளிடம் ஒப்படைப்பு

Print PDF
தினமலர்      06.04.2013

மதுரையில் துணை நகரம் அமைக்கும் பணி துவக்கம் 6 மாதத்தில் நிலம் பயனாளிகளிடம் ஒப்படைப்பு


மதுரை : மதுரையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 588.86 ஏக்கர் நிலத்தில் "துணை நகரம்' (சாட்டிலைட் சிட்டி) அமைப்பதற்கான பணி நேற்று துவங்கியது. ஆறு மாதத்தில், நிலத்தை பயனாளிகளிடம் ஒப்படைக்கும்படி, அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் மக்கள் தொகைக்கு ஏற்ப, கட்டமைப்பு வசதிகள் இல்லை. நகரும் விரிவாகவில்லை. நகரை மையமாகக் கொண்டு, எண்ணற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகி வருகின்றன. எனினும் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவு மக்களுக்கு, "மதுரையில் சொந்த வீடு' என்பது குதிரை கொம்பாகவே இருந்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், நகரை விரிவாக்கவும் மதுரை - திருமங்கலம் இடையே தோப்பூர், உச்சபட்டி பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 588.86 ஏக்கர் நிலத்தில், "துணை நகரம்' அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இங்கு அமையும் துணை நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்படவுள்ளது. சாலைகள், குடிநீர், பாதாள சாக்கடை, தெருவிளக்கு, பூங்காக்கள், போலீஸ் ஸ்டேஷன், பள்ளிகள், ஷாப்பிங் மால் என நவீன வசதிகளுடன் அமைகிறது. இதற்கான முதற்கட்டப்பணி தோப்பூரில் நேற்று துவங்கியது. உச்சபட்டி மற்றும் ஆஸ்டின்பட்டி மருத்துவமனை பின் புறத்தில் 520 ஏக்கர் நிலமும், தோப்பூரில் 23 சென்ட், 50 சென்ட் என தனித்தனியாக 200 ஏக்கர் நிலமும் உள்ளன. இவற்றை அளந்து பிரிப்பதற்காக வீட்டு வசதி வாரியத்தின் தலைமை சர்வேயர் தலைமையில், 25 துணை சர்வேயர்கள் நிலத்தை அளக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒரு சென்ட் ரூ.3.20 லட்சம்:

உச்சபட்டி, தோப்பூரில் மனைகள் பிரிக்கப்பட்டு ஆறு மாதங்களில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும், என அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நான்கு வழிச்சாலைக்கு மிகவும் அருகாமையில் நிலம் இருப்பதால், சென்ட் ஒன்றின் விலை ரூ.3.20 லட்சம் வரை என வீட்டு வசதி வாரியம் நிர்ணயித்துள்ளது. ஆறு மாதங்களுக்கு முன், பிளாட் கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் இருந்து, குறிப்பிட்ட தொகையை வீட்டு வசதி வாரியம் டெபாசிட்டாக பெற்றுள்ளது. இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மனைகள் ஒதுக்கப்படும் எனவும், தோப்பூர் நான்கு வழிச்சாலை பாலம் அருகே, 50 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டவும் திட்டமிட்டிருப்பதாக வீட்டு வசதி வாரிய வட்டார தகவல் தெரிவிக்கிறது.
 


Page 70 of 238