Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

கட்டி முடித்து ஓராண்டாக திறக்கப்படாத சமுதாயக் கூடம்

Print PDF
தினமணி                  05.03.2013

கட்டி முடித்து ஓராண்டாக திறக்கப்படாத சமுதாயக் கூடம்
 
நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் கட்டப்பட்டு திறக்கப்படாத சமுதாயக் கூடம்.  

நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகத் திறக்கப்படாமல் உள்ள சமுதாயக் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி சார்பில் பஸ் நிலையம் பின்புறம் அம்பேத்கர் தெருவில் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நிதி ரூ.20 லட்சம், பொதுநிதி ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.26 லட்சம் செலவில் ஏழைகளின் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படும் வகையில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் கட்டி முடித்து ஓராண்டாகியும் சமுதாயக் கூட கட்டடம் திறக்கப்படவில்லை.

இதனால் சமுதாயக் கூடம் சமூக விரோத கூடமாக மாறும் நிலை உள்ளது. இதனை உடனடியாகத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் சரவணன், வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.ஆர்.லோகநாதன் ஆகியோர் கோரிக்கை விடுத்த்துள்ளனர்.
Last Updated on Tuesday, 05 March 2013 10:24
 

ரூ. 12 லட்சம் செலவில் 2 சுகாதார வளாகங்கள் திறப்பு

Print PDF
தினமணி                       01.03.2013

ரூ. 12 லட்சம் செலவில்  2 சுகாதார வளாகங்கள் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சியில் 12 லட்சம் செலவில் இரண்டு சுகாதார வளாகங்கள் திறக்கப்பட்டன. வத்தலக்குண்டு பேரூராட்சி 7 வது மற்றும் 9 வது வார்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பேரூராட்சி கவுன்சிலர் எம்.வி.எம். பாண்டியன் தலைமை வகித்து, திறந்து வைத்தார். துணைத் தலைவர் எம்.ஏ. பீர்முகமது, செயல் அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துப்பரவு ஆய்வாளர் ஜாபர் அலி வரவேற்றார். கவுன்சிலர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தலைமை எழுத்தர் பாண்டி நன்றி கூறினார்.
Last Updated on Friday, 01 March 2013 09:32
 

திருச்செங்கோடு நகராட்சிக்கு புதிய அலுவலகக் கட்டடம்

Print PDF
தின மணி              26.02.2013

திருச்செங்கோடு நகராட்சிக்கு புதிய அலுவலகக் கட்டடம்


திருச்செங்கோடு நகராட்சிக்கு ரூ. 250 லட்சத்தில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படுகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று பூமி பூஜையைத் தொடக்கிவைத்தார்.

திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் வேலூர் சாலையில் செயல்பட்டு வருகிறது.  இந்த வளாகத்தில் இருந்த பழைய சிதிலமடைந்த கட்டடம் இடிக்கப்பட்டு ரூ. 250 லட்சத்தில்  புதிய கட்டடம்  கட்டப்படுகிறது. திங்கள்கிழமை  இதற்கான பூமி பூஜையை  தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி தொடக்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் பொன். சரஸ்வதி, ஆணையர் (பொ) ராஜேந்திரன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர்,  முன்னாள் எம்எல்ஏ பி.ஆர். சுந்தரம், நாமக்கல் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜோதி  முத்துசாமி, லாரி உரிமையாளர்கள்  சங்கத் தலைவர் அனிதாவேலு, பஸ்  உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சேரன் மணி, கூட்டுறவாளர்கள் என்பிஎஸ் பொன்னுசாமி, மனோகரன் மற்றும்  நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் பொன். சரஸ்வதி கூறியது:

ரூ. 250 லட்சத்தில் அமையவுள்ள புதிய அலுவலகக் கட்டடம் 2 தளங்களைக் கொண்டது.   தரை தளத்தில் நகர்மன்றத் தலைவருக்கான  அறை, ஆணையருக்கான அறை, கணினி அறை, காசாளர் அறை,  வரவேற்பறை, தகவல் மையம்  போன்றவை அமைக்கப்படும். முதல் தளத்தில்  நகர்மன்றக் கூட்ட அரங்கு,  நகரமைப்பு பிரிவு, பொறியியல் பிரிவு,  வருவாய் பிரிவு போன்றவை அமையும்.  மொத்தம் 9 ஆயிரம் சதுரஅடி பரப்பில் இந்த கட்டடம் அமையவுள்ளது. சுமார் 1 வருட காலத்திற்குள் இதனை கட்டி முடிக்க  நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகும்  செலவுத் தொகையில் 175 லட்சத்தை அரசு மானியமாக அளிக்கிறது. மீதித் தொகையை நகராட்சி அளிக்கும் என்றார் அவர்.
Last Updated on Tuesday, 26 February 2013 11:58
 


Page 74 of 238