Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

அரியலூர் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணி ஆய்வு

Print PDF

தினமலர்                         25.07.2012

அரியலூர் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணி ஆய்வு

அரியலூர்: அரியலூர் நகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல்துறை இணைந்து நடத்தும் பாதாள சாக்கடை திட்ட பணி அரியலூரில் நடந்து வருகிறது.கடந்த இரண்டு ஆண்டாக நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டத்துக்கான பைப் லைன் அமைக்கும் பணிகள் குறித்து, அரியலூர் நகராட்சி தலைவர் முருகேசன், அரியலூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், நகராட்சி கமிஷ்னர் சரஸ்வதி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.அரியலூர் சிங்கார தெரு, செந்துறை ரோடு, தோல் கிடங்கு தெரு, வடக்கு திரௌபதி அம்மன் கோயில் தெரு, கல்லூரி சாலை, ராஜாஜி நகர், காமராஜ் நகர், முனியபடையாட்சி தெரு, குறிஞ்சாங்குளம் தெரு உள்ளிட்ட இடங்களில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.செந்துறை ரோடு, ராஜாஜிநகர், கல்லூரி சாலை உள்ளிட்ட பல இடங்களிலும், பாதாள சாக்கடைக்கு என தோண்டப்பட்ட பள்ளங்களை, பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு, உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் காண்ட்ராக்டர்கள், நகராட்சி சார்பில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை விரைந்து செயல்படுத்திட, ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளரிடம், நகராட்சி தலைவர் முருகேசன் கேட்டு கொண்டார்.ஆய்வின் போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி கோட்ட பொறியாளர் முருகேசன், செங்குட்டுவன், உதவி பொறியாளர்கள் சண்முகம், ராபர்ட் கென்னடி, நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், மாலா தமிழரசன், குணா, மணிவண்ணன், பாபு, மாரிமுத்து, கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

குப்பைகளை அகற்ற 24 புதிய வாகனங்கள்

Print PDF

தினமணி       13.07.2012

குப்பைகளை அகற்ற 24 புதிய வாகனங்கள்


புதிதாக வாங்கப்பட்ட குப்பை அள்ளும் வாகனங்களின் சாவியை ஓட்டுநருக்கு வழங்குகிறார் மேயர் சைதை துரைசாமி. உடன், துணை மேயர் பா. பெஞ்சமின், மாநகராட்சி ஆணையர்

புசென்னை, ஜூலை 12: சென்னை நகரில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு புதிதாக 24 வாகனங்களை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது.

சென்னையில் குப்பைகளை அகற்றுவதற்கு போதுமான வாகனங்கள் இல்லாமல், பல இடங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசிகிறது. குப்பைகளை விரைவாக அகற்ற 15 கனரக டிப்பர் லாரிகள், 9 நவீன குப்பை அள்ளும் இயந்திரங்கள் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன.

இவற்றை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி ரிப்பன் கட்டடத்தில் வியாழக்கிழமை நடந்தது. இதனை மேயர் சைதை துரைசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: ஒரு டிப்பர் லாரியின் விலை ரூ. 15 லட்சம். மொத்தம் ரூ. 2 கோடியே 25 லட்சத்தில் 15 டிப்பர் லாரிகள் வாங்கப்பட்டுள்ளன. இதேபோல, நவீன குப்பை அள்ளும் இயந்திரத்தின் மதிப்பு ரூ. 56.35 லட்சம். 9 இயந்திரங்களின் மதிப்பு மொத்தம் சுமார் ரூ. 5.07 கோடி.

இந்த புதிய வாகனங்கள் மூலம் குப்பை அள்ளும் பணியை மேலும் சிறப்பாக செய்யமுடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின்போது துணை மேயர் பா. பெஞ்சமின், ஆணையர் கார்த்திகேயன், இணை ஆணையர் பூஜை குல்கர்னி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

புதிய மீன் மார்க்கெட் திறப்பு

Print PDF

தினமலர்         10.03.2011

புதிய மீன் மார்க்கெட் திறப்பு

கோவை : கோவை மாநகராட்சி சார்பில் ரூ.2.38 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மீன் மார்க்கெட்டில், வியாபாரிகள் நேற்று விற்பனையை துவக்கினர்.கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டுகளை முழுமையாக இடித்து விட்டு புதிய மீன் மார்க்கெட் கட்டுவதற்கு மாநகராட்சி முடிவு செய்தது. அதற்கான தீர்மானத்தை மன்றத்தில் நிறைவேற்றியது. அதன்படி உக்கடத்திலிருந்து செல்லும் பேரூர் பைபாஸ் ரோட்டில் ரூ.2.38 கோடி செலவில் 68 நவீன மீன் கடைகள் கட்டப்பட்டன. அவை மின் ஏலம் மூலம் மீன் வியாபாரிகளுக்கு மாநகராட்சி ஒதுக்கீடு செய்தது. அதில் மீன் வளர்ச்சித்துறைக்கு இரு கடைகள் ஒதுக்கப்பட்டன. ஒரு சில காரணங்களால் மீன் வியாபாரிகள் பழைய கடைகளை காலிசெய்து விட்டு புதிய கடையை பயன்படுத்த தயக்கம் காட்டிவந்தனர். இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து புதிய கடைகளை இன்று வியாபாரிகள் திறந்து வியாபாரத்தை துவக்கினர். ஏலத்தில் கடை கிடைக்காத மீன் வியாபாரிகளுக்கு தரைக்கடைகள் நாளொன்றுக்கு ரூ.20 கட்டணத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இது தொடர்பாக மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதன் பின் தரைக்கடை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே மீன் மார்க்கெட் திறக்கப்பட்டதால் எந்த சர்ச்சையும் ஏற்படவில்லை.

 


Page 88 of 238