Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ. 7 லட்சத்தில் கொசு மருந்தடிக்கும் இயந்திரம்

Print PDF

தினகரன்         01.02.2011

ரூ. 7 லட்சத்தில் கொசு மருந்தடிக்கும் இயந்திரம்
 
கோவை மாநகராட்சி சார்பில் கொசுப்புகை மருந்தடிக்கும் இயந்திரங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.

கோவை,பிப்.1:

கோவை மாநகராட்சி 72 வார்டுகளில் அனைத்து வீதிகளில் கொசு ஒழிக்கும் பணிக்காக வாகனங்களில் பொருத்தப்பட்ட 4 புகை மருந்தடிக்கும் எந்திரம், 12 ஆட்டோக்களில் பொருத்தப்பட்ட எந்திரம், பணியாளர்கள் கைகளால் இயக்கப்படும் 20 எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஆட்டோக்கள் செல்ல முடியாத குறுகலான வீதிகள் மற்றும் சந்துகளில் மருந்தடிப்பதை தீவிரப்படுத்த மண்டலத்திற்கு 5 விகிதம் நான்கு மண்டலத்திற்கும் 20 கொசுப்புகை மருந்தடிக்கும் எந்திரம் ரூ.7 லட்சத்து 38 ஆயிரம் செலவில் வாங்கப்பட்டுள்ளது. புதிதாக வாங்கப்பட்ட கொசுப்புகை மருந்தடிக்கும் எந்திரம் நேற்று அந்தந்த மண்டலத்திற்கு வழங்கப்பட்டன. மேயர் வெங்டாச்சலம், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் வழங்கினர். மாநகராட்சி வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் துணை மேயர் கார்த்திக், துணை ஆணையாளர் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர்கள் பாரி, மேற்குமண்டல தலைவர் வி.பி.செல்வராஜ், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் அருணா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், சுகாதார குழு தலைவர் நாச்சிமுத்து மற்றும் அதன் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. விழா குறித்து முறையான அழைப்பிதழ் இல்லாததால் பங்கேற்கவில்லை என நாச்சிமுத்து தெரிவித்தார்.
 

உலகிலேயே முதல் முறையாக லம் மயானத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

Print PDF

தினகரன்      27.01.2011

உலகிலேயே முதல் முறையாக லம் மயானத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

சேலம், ஜன. 27:

சேலம் காக்காயன் மயானத்துக்கு, உலகிலேயே முதன் முறையாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்துள்ளது.

சேலம் மரவனேரி கோர்ட் ரோடு காலனியில் காக்காயன் மயானம் அமைந்துள்ளது. சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த மயானத்தை தமிழக அரசின் நிதி மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ரூ.2.34 கோடி மதிப்பில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் நவீனமயமாக்கியது.

இங்கு 2 எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டது. சடலத்தை எரித்ததும், உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தியான மண்டபம் கட்டப்பட்டது. மயானத்தை சுற்றிலும் அழகான பூங்கா, கார் பார்க்கிங் போன்றவை அமைக்கப்பட்டன. ஜூலை மாதம் நவீன மயானம், சேலம் மாநகர மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

நவீனமயமாக்கப்பட்ட மயானத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று பெற சேலம் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, மும்பையைச் சேர்ந்த இன்டர்நேஷனல் சர்ட்டிபிகேஷன் சர்வீசஸ் என்ற தர நிர்ணய நிறுவனத்திடம் சேலம் மாநகராட்சி நிர்வாகம் விண்ணப்பித்தது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனத்தின் அங்கீகாரத்துடன் இந்த சான்றை மும்பை தர நிர்ணய நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு தர நிர்ணய சான்று வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சேலம் மாநகராட்சியின் கோரிக்கையின் பேரில், காக்காயன் மயானத்தை நேரடியாகப் பார்வையிட்ட தர நிர்ணய நிறுவனத்தினர், காக்காயன் மயானத்துக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஐஎஸ்ஓ 14001:2004 தரச்சான்றை வழங்கியுள்ளனர்.

 

மாநகராட்சி பகுதியில் மார்க்கெட், மயானம், பூங்கா 28ல் திறப்பு : நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு

Print PDF

தினகரன்       24.01.2011

மாநகராட்சி பகுதியில் மார்க்கெட், மயானம், பூங்கா 28ல் திறப்பு : நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு

கோவை, ஜன.24:

மீன்மார்க்கெட், மயானம், பூங்கா, ஆடுவதை கூடம், மண்டல அலுவலகம் வரும் 28ம் தேதி திறக்கப்படவுள்ளது. நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

கோவை மாநகராட்சியில் புதிய கட்டடங்கள் பணி முடிந்தும் நீண்ட காலமாக திறக்கப்படவில்லை. தேர்தல் நெருங்கி வருவதால், கட்டடங்களை திறக்க காலம் கடத்த கூடாது என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதைதொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டிய கட்டடங்களை வரும் 28ம் தேதி திறக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்தது.

கோவை மாநகராட்சி பூமார்க்கெட் அருகே பழமையான அண்ணா பூங்கா செயல்படுகிறது. 40 ஆண்டு கடந்து செயல்படும் இந்த பூங்காவிற்கு ஒரு காலத்தில் 10 பைசா தான் கட்டணம். இதற்கு பத்து பைசா பூங்கா என்ற பெயரும் உண்டு. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், 25 லட்ச ரூபாய் செலவில் சீரமைப்பு பணி நடத்தப்பட்டது. நீரூற்று, நடைபாதை, புல்வெலி, மலர் செடி என புதுப்பொலிவுடன் பூங்கா திறப்பு விழாவிற்கு தயாராகி விட்டது.

நஞ்சுண்டாபுரத்தில், 2 ஆண்டு காலமாக நடந்த எரிவாயு மயான பணி முடிவுக்கு வந்துள்ளது. இது கோவை மாநகராட்சியின் முதல் எரிவாயு மயானம். 1 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ள இந்த மயானத்தில் 10 நிமிடத்தில் ஒரு பிணத்தை எரித்து சாம்பல் வழங்க முடியும். ஒரு நாளில் 30 பிணங்களை எரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிணம் காத்திருப்பு பிரச்னைக்கு எரிவாயு மயானம் தீர்வாக அமையும். மின் மயானத்தை காட்டிலும் எரிவாயு மயானம் 30 மடங்கு பயனுள்ளது. தனியார் மூலம் இந்த மயானத்தை பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உக்கடம் செல்வபுரம் பைபாஸ் ரோட்டில், 1.37 கோடி ரூபாய் செலவில் மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. 66 கடைகளுடன் கூடிய இந்த மீன் மார்க்கெட்டில் கடை ஒதுக்கீடு, ஏலம் விவகாரத்தில் பிரச்னை நீடிக்கிறது. பல ஆண்டுகளாக வியாபார கடை நடத்துபவர்கள், ஏலம் இன்றி முன்னுரிமை அடிப்படையில் கடை ஒதுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மின் ஏல முறையை மாநகராட்சி நிர்வாகம் கடை பிடிப்பதால் முடிவு ஏற்படவில்லை. பல்வேறு எதிர்ப்புக்கு இடையே இந்த மீன் மார்க்கெட்டும் திறக்கப்படவுள்ளது.

உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் 97 லட்ச ரூபாய் செலவில் ஆடுவதை கூடம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளாக நடந்தது. பணி முடிந்த போது சுற்று சுவர் அமைக்க கோரிக்கை விடப்பட்டது. இதைதொடர்ந்து சுவர் அமைக்கும் பணியும் முடிவுற்றது. புருக்பாண்ட் ரோட்டில் சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனை வளாகம், 50 லட்ச ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது. கோவையில் தெற்கு மண்டல மாநகராட்சி அலுவலகம் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. கட்டடம் கட்டி 4 ஆண்டு முடிந்த பின் மண்டல அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், “தெற்கு மண்டல அலுவலகம், எரிவாயு மயானம், மருத்துவமனை கட்டடம், ஆடுவதை கூடம், மீன் மார்க்கெட் போன்றவை வரும் 28ம் தேதி திறக்கப்படும். தெற்கு மண்டல அலுவலகம் கட்டியதில் விதிமுறை மீறல் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே தான் திறப்பு நடத்த முடியாத நிலையிருந்தது. வரும் 28ம் தேதி கட்டடம் திறக்கப்படும். பணி உத்தரவு பெறாமல் ஒப்பந்ததாரர் கட்டுமான பணி துவக்கியுள்ளார். ஒப்பந்த நிறுவனத்திற்கு குறிப்பிட்ட அளவு பில் தொகை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலக விவகாரத்தில் அதிகாரிகள் சிலர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
 


Page 89 of 238