Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பாதாளச் சாக்கடைக்குள் திடப்பொருளைத் தடுக்க சேம்பருடன் கூடிய தொட்டி ஜன. 1க்குள் கட்ட உத்தரவு

Print PDF

தினமணி               14.12.2010

பாதாளச் சாக்கடைக்குள் திடப்பொருளைத் தடுக்க சேம்பருடன் கூடிய தொட்டி ஜன. 1க்குள் கட்ட உத்தரவு

திருப்பூர், டிச. 13: பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுத்தும் வகையில் திடப்பொருட்கள் செல்வதைத் தடுக்க, ஜன. 1ம் தேதிக்குள் சேம்பருடன் கூடிய தொட்டியை அனைத்து நிறுவனங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்று, மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பாதாளச் சாக்கடை பராமரிப்பு குறித்து ஹோட்டல், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகளின் நிர்வாகத்தினருக்கு விழிப்புணர்வுக் கூட்டம் திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு மேயர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி பேசியது:

விஷவாயுக்கள் நிறைந்த பாதாளச் சாக்கடை, செப்டிக் டேங்க் உள்ளிட்டவற்றில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்யவும், சுத்தம் செய்யவும் மனிதர்களை இறக்கக் கூடாது என்றும், தகுந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி மட்டுமே சீர்செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில், திருப்பூரிலுள்ள ஹோட்டல், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், வீடுகள் உள்ளிட்டவற்றில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போது தகுந்த இயந்திரங்களையே பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறு சுத்தம் செய்வது குறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். அதையும் மீறி மனிதர்களைப் பயன்படுத்துவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், திடப்பொருட்கள் அதிக அளவில் கலப்பதாலேயே பாதாளச் சாக்கடைகளில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. பாதாளச் சாக்கடையில் அடைப்புகள் ஏற்படு வதைத் தடுக்க, உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், துணிகள், உதிந்த முடி உள்ளிட்ட திடப்பொருட்களை சாக்கடையில் போடக் கூடாது.

அவ்வாறு போடப்படும் திடப்பொருட்கள் பாதாளச் சாக்கடைக்குள் செல்வதைத் தடுக்கும் வகையில் சாக்கடைக் கழிவுநீர் குழாயின் இடையே தொட்டியுடன் சேம்பர்கள் அமைக்க வேண்டும். அந்த சேம்பர்கள் மூலம் சாக்கடையில் செல்லும் திடக்கழிவுகள் தடுக்கப்பட்டு தொட்டிக்குள் விழும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.

இம்முறையை வரும் ஜன. 1ம் தேதிக்குள் அனைத்து நிறுவனங்கள், வீடுகளிலும் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்படாத பட்சத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

அதன்படி, சேம்பர்களுடன் கூடிய தொட்டி அமைப்பது குறித்து மாதிரி வரைபடமும் காட்டப்பட்டது. செயற்பொறியாளர் திருமுருகன், மாமன்ற உறுப்பினர்கள் முத்து, சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

ரூ216 கோடியில் முதல்கட்ட பணி மாநகரில் பாதாள மின் கேபிள் திட்டம்

Print PDF

தினகரன்                  14.12.2010

ரூ216 கோடியில் முதல்கட்ட பணி மாநகரில் பாதாள மின் கேபிள் திட்டம்

ஈரோடு, டிச. 14: துணை மின்நிலையத்தில் இருந்து கேபிள் மூலமாக அனுப்பி வைக்கப்படும் மின்சாரம் முழுமை யாக சென்றடையவும், மின் இழப்பை தடுக்கவும், தடையில்லாத மின்விநியோகத்தை உறுதிப்படுத்தவும் பாதாள மின் கேபிள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக அனைத்து மாநகராட்சிகளிலும் பாதாள மின்கேபிள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து சென்னை, கோவை மாநகராட்சிகளில் பெரும்பாலான பகுதிகளில் பாதாள மின்கேபிள் பதிக்கும் பணி செய்து முடிக்கப்பட்டு விட்டது.

தற்சமயம் சேலம் மாநகராட்சியில் தரைக்கு அடியில் மின்கேபிள் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோன்று ஈரோடு மாநகராட்சியிலும் பாதாள மின் கேபிள் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் முடிவு செய்து அதற்கான திட்ட மதிப்பீட்டை தயா ரித்து வழங்கும் படி கூறியிருந்தது. அதன்படி, தற்போது ஆர்ஏபிடிஆர்பி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் முதற்கட்டமாக ரூ216 கோடி செலவில் பாதாள மின் கேபிள் அமைக்கும் பணியை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மண்டல தலைமைப்பொறியாளர் சங்கர் கூறியதாவது: மின் இழப்பை தடுக்கும் வகையில் மாநகராட்சிகளில் தரையில் கேபிள் பதிக்கும் திட்டமான பாதாள மின் கேபிள்அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாநகராட்சியில் இப்பணி தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போதைய ஈரோடு மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், காசிபாளையம் மூன்றாம் நிலை நகராட்சிகளில் ஆர்ஏபிடிஆர்பி எனப்படும் மின் இழப்பை சரி செய்வதற்கான திட்டத்தின் கீழ் பாதாள மின் கேபிள் அமைக்க எவ்வளவு செலவாகும் என மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஒருங்கிணைந்த மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 135 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மின் அழுத்த கேபிள்கள் பதிக்கவும், 630 கிலோ மீட்டருக்கு தாழ் மின் அழுத்த கேபிள்கள் பதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ. 216 கோடி செலவாகும் என மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. அரசிடம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதும் முறைப்படி பணி துவங்கும். நீண்ட கால திட்டமான இத்திட்டத்தை முழுமையாக நிறை வேற்ற குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாகும். இவ்வாறு தலைமை பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.

தலைமை பொறியாளர் தகவல் இன்று முதல் மின் சிக்கன வாரம்

ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் சங்கர் கூறியதாவது: ஆண்டுதோறும் டிசம்பர் 14ம் தேதி (இன்று) மின் சிக்கன தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று முதல் 20ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் மின் சிக்கன வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

ஈரோடு மின் மண்டலம் சார்பில் நடைபெற உள்ள மின் சிக்கன வாரத்தில் வரும் 16ம் தேதி காலையில் மின் சிக்கனத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் பேரணி நடைபெறும். அதேநாள் மாலையில் கிளப்மெலாஞ்ச் ஓட்டலில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் நடைபெறும். இதேபோன்று கோபி, நாமக்கல் ஆகிய இடங்களிலும் மின் சிக்கனத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகளின் பேரணி நடக்கும், என்று தெரிவித்தார்.

 

பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைவில் முடிக்க நகர்நல அமைப்பு வலியுறுத்தல்

Print PDF

தினமணி               10.12.2010

பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைவில் முடிக்க நகர்நல அமைப்பு வலியுறுத்தல்

விருதுநகர், டிச. 9: விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்நல அமைப்புக் கூட்டத்திóல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர் வியாபார சங்க அரங்கத்தில் நகர் நல அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்நல அமைப்பின் தலைவர் எம்.ரத்தினகுமார் தலைமை வகித்தார். செயலாளர் ரத்தினவேல் சிறப்புரையாற்றினார்.

இக் கூட்டத்தில், விருதுநகரில் 2006-ல் துவங்கி 2008-ல் முடியும் என அறிவிக்கப்பட்ட பாதாளச் சாக்கடைப் பணி இன்று வரை முடிவு பெறாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.

பாதாளச் சாக்கடைப் பணிகள் முறையாக நடைபெறாமல் கெüசிகா நதியில் கழிவு நீர் கலப்பதால் சுகாதாரச் சீர்கேட்டை விளைவிக்கிறது என பலர் முறையிட்டதன் பேரில் இதுகுறித்து பொது நலன் வழக்கு தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரச்னைகளை ஆராய வார்டுகளில் தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர்நல அமைப்பின் உறுப்பினர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொருளாளர் மேனகைக் கண்ணன் நன்றி கூறினார்.

 


Page 93 of 238