கழிவு அகற்ற நவீன வாகனம்
Thursday, 25 November 2010 05:36
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
தினகரன் 25.11.2010
கழிவு அகற்ற நவீன வாகனம்
கோவை, நவ.25: கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய நவீன வாகனம் வாங்கப்பட்டது. கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக பல்வேறு இடங்களில் அசுத்தம் ஏற்படுகிறது. ரோட்டில் கழிவு வெள்ளமாக ஓடுகிறது. இதை தவிர்க்க, மாநகராட்சி பொது நிதியிலிருந்து 53.50 லட்ச ரூபாய் செலவில் 3 கழிவு நீர் அகற்றும் வாகனம் வாங்கப்பட்டது. இதனை மேயர் வெங்கடாசலம், கமிஷனர் அன்சுல் மிஸ்ரா நேற்று துவக்கி வைத்தனர். இதில் துணை மேயர் கார்த்திக், மேற்பார்வை பொறியாளர் பூபதி, செயற்பொறியாளர் கணேஷ்வரன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், ஆளுங்கட்சி தலைவர் திருமுகம், எதிர்க்கட்சி தலைவர் உதயகுமார், கிழக்கு மண்டல தலைவர் சாமி, சுகாதார குழு தலைவர் நாச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த வாகனத்தில் ஜெட்டிங் மற்றும் உறிஞ்சும் மெஷின் உள்ளது. பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டால், அந்த இடத்திற்கு வாகனத்தை கொண்டு சென்று அடைப்பை ஜெட்டிங் கருவி மூலம் அகற்ற முடியும். எவ்வளவு ஆழத்திற்கு, நீளத்திற்கு அடைப்பு ஏற்பட்டிருந்தாலும் ‘டியூப்’ மூலம் அதிவேக நீர் பிரசர் மூலம் கழிவு அடைப்பு நீக்கப்படும். கழிவு அடைப்புகளை பைப் மூலம் வெளியே உறிஞ்சி எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. சாக்கடை அடைப்பு ஏற்பட்டால், சரி செய்ய இனி நாள் கணக்கில் காத்திருக்கவேண்டியதில்லை. ஒரிரு மணி நேரத்தில் அடைப்பு சரி செய்ய மாநகராட்சி தயாராகவுள்ளது.
|
பக்கிள் ஓடை 3ம் கட்ட பணிக்கு தமிழக அரசு ரூ.4 கோடி அனுமதி
Tuesday, 23 November 2010 09:24
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
தினமலர் 23.11.2010 பக்கிள் ஓடை 3ம் கட்ட பணிக்கு தமிழக அரசு ரூ.4 கோடி அனுமதி
தூத்துக்குடி : பக்கிள் ஓடை மூன்றாம் கட்ட பணிக்கு தமிழக அரசு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகளை விரைவாக மேற்கொள்ள மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் கமிஷனர் குபேந்திரன், துணைமேயர் தொம்மைஜேசுவடியான் முன்னிலையில் நடந்தது. மாநகராட்சி இன்ஜி., ராஜகோபாலன், சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி, ஜுனியர் இன்ஜி.,கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். துரைமணி அஜென்டா வாசித்தார்.தூத்துக்குடி மாநகராட்சி பக்கிள் ஓடையில் முதல் கட்டமாக 1.82 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாட்டு பணிகள் 6 கோடியே 98 லட்சத்திற்கு செய்து முடிக்கப்பட்டுள்ளது. தற்போது 2.42 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏழரை கோடி ரூபாய் செலவில் இரண்டாம் கட்ட பணிகளான சிமெண்ட் தளம் மற்றும் சிறு கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. விரைவில் பணிகளை முடிக்கும் வகையில் வேகமாக பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பக்கிள் ஓடை மூன்றாம் கட்ட பணி 2.06 கிலோ மீட்டர் தூரம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு 8 கோடியே 30 லட்சத்திற்கு மாநகராட்சியில் இருந்து அரசுக்கு பிரேரணை அனுப்பப்பட்டது. இதில் மூன்றாம் கட்ட பணிக்கு 1.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தற்போது 4 கோடி ரூபாய் அரசு அனுமதியளித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 4 கோடியே 30 லட்சத்திற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
4 கோடி அரசு மானியம் நீங்கலாக மீதியுள்ள 30 லட்ச ரூபாயை மாநகராட்சி பொதுநிதியில் இருந்து செலவு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிதம்பரநகர் மெயின்ரோடு, வி.வி.டி மெயின் ரோட்டில் ரோட்டை அகலப்படுத்தி சாலையை மேம்பாடு செய்ய ஒரு கோடியே 6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயிற்கு அனுமதியளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குறிப்பாக சண்முகபுரம் பகுதிக்கு 6 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது என்றும், சில இடங்களுக்கு தண்ணீர் சரியாக வரவில்லை என்றும் அதிமுக கவுன்சிலர்கள் சரவணன், ஈஸ்வரன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். இதற்கு திமுக கொறடா கனகராஜ், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், சுரேஷ், ராமகிருஷ்ணன், ஆனந்தராஜ், இசக்கிமுத்து, செந்தில்குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானத்தை வாசியுங்கள், அதிமுக உறுப்பினர் உட்கார வேண்டும் என்று கூறினர்.
இதற்கு பதில் அளித்த மேயர் , வல்லநாடு தருவைகுளத்தில் பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டதால்தான் குடிநீர் வரத்து நின்றது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் சென்று அதனை சரி செய்தனர். நானும் அங்கு சென்று பணிகளை பார்வையிட்டேன். மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு இதெல்லாம் தெரியும். இதனால் குடிநீர் வருவது தாமதம் ஏற்பட்டது. எல்லா விபரமும் தெரிந்து கொண்டே அதிமுக கவுன்சிலர்கள் இதுபோன்று கேள்வி கேட்க கூடாது. தற்போது குழாய் உடைப்பு சீர் செய்யப்பட்டு குடிநீர் சப்ளை சீராகியுள்ளது என்றார். டூவிபுரம் பகுதியில் சில தெருக்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. கொசுக்கள் அதிகமாக உள்ளது என்று அதிமுக கவுன்சிலர் ஜெயபாரதி கூறினார். கொசு மருந்து அடிக்கவும், தண்ணீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மேயர் கூறினார். கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மில்லர்புரம் மெயின் ரோடு உள்ளிட்ட ரோடுகள் சீரமைப்பு செய்யப்படவில்லை. தங்கள் வார்டு புறக்கணிக்கப்படுவதாக கூறி 51வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே மேம்பாலம் கட்ட மண் ஆய்வு
Tuesday, 23 November 2010 06:34
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
தினகரன் 23.11.2010
காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே மேம்பாலம் கட்ட மண் ஆய்வு கோவை, நவ.23: கோவை காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வரை புதிதாக மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 100 கோடி ரூபாய் செலவில், 4 வழிப்பாதையாக இந்த மேம்பாலம் அமையும்.
1.6 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான டெண்டர் விடப்பட்டது. மேம்பால தாங்கு தூண் அமைக்கப்படும் இடத்தில் தற்போது மண் ஆய்வு பணி நடக்கிறது. சில நாளில் இந்த பணி முடியும் நிலையில் உள்ளது. 20க்கும் மேற்பட்ட இடத்தில், ஆழ்துளையிட்டு, 100 அடி ஆழம் வரை மண் எடுத்து கட்டுமான துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மண்ணின் தன்மைக்கு ஏற்ப தாங்கு தூண் அமைக்கப்படும் . இதுவரை நடந்த ஆய்வில், சில இடங்களில் களிமண், கரிசல் மண், செம்மண் என பல்வேறு வகையான மண் கிடைத்துள்ளது. தொழில்நுட்ப குழுவினரும், இந்த மண்ணின் தன்மை குறித்து ஆய்வு நடத்தவுள்ளனர். அதற்கு பிறகே, மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கப்படும்.
மேம்பாலம் கட்ட முதல் கட்டமாக தாங்கு தூண்கள் பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ளது . இந்த இடத்தை அதிகாரிகள் குழு பார்வையிட்டு சர்வே நடத்தியது. காந்திபுரம் சத்தி ரோட்டின் ஒரு புறம், அதாவது காவலர் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள அதிக இடங்கள் மேம்பால பணிக்காக கையகப்படுத்தப்படும்.
மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது . மத்திய பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரோட்டை ஒட்டியுள்ள சில வணிக வளாக கடைகள், மின் கம்பங்கள் அகற்றப்படவுள்ளது. டவுன்பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டியுள்ள விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு கிளம்புள்ளது.
ஆனால் , கோயிலை இடிப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. மேம்பால பணிக்காக, இப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். வரும் ஜனவரி மாதம் பணி துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணியை துவக்கியதும் , காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, வடகோவை மேம்பாலம் செல்ல மாற்று பாதை ஒதுக்கப்படும். பஸ் ஸ்டாண்ட்டிற்குள் பஸ்கள் வந்து செல்லும் முறையில் மாற்றம் இருக்கும்.
கோவை காந்திபுரம் பகுதியில் மண் பரிசோதனை செய்யும் பணி நடக்கிறது . ![](http://dkn.dinakaran.com/pdf/2010/11/23/20101123c_01310500701.jpg)
|
|
|
|
Page 98 of 238 |