Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பாதாள சாக்கடை பணி ஜனவரியில் நிறைவடையும் திருவாரூர் நகராட்சி ஆணையர் தகவல்

Print PDF

தினகரன்                     18.11.2010

பாதாள சாக்கடை பணி ஜனவரியில் நிறைவடையும் திருவாரூர் நகராட்சி ஆணையர் தகவல்

திருவாரூர், நவ.18: திருவாரூரில் பாதாளசாக்கடை பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிறைவுபெறும் என்று நகராட்சி ஆணையர் சரவணன் கூறினார்.

திருவாரூர் வர்த்தக சங்க கூட்டம் நேற்றுமுன்தினம் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் சேகர் வரவேற்றார். திருவாரூரில் பாதாள சாக் கடை பணிகளை கடைவீதிகளில் வியாபாரம் பாதிக்காதவகையில் விரைவில் பணியை முடிக்க வேண்டும். வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் ஆக்கிரமிப்பு அகற்றவேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தினர்.

நகராட்சி ஆணையர் சரவணன் பேசுகையில், பாதாள சாக்கடை திட்டப் பணி முக்கிய பிரமுகர்கள் வருகை, மழை போன்ற காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது. 63 கி.மீட்டரில் பணிகள் முடிவடைந்து விட்டது. இன்னும் 4 கி.மீ பாக்கி உள்ளது. பணி நிறைவுபெற்ற இடங்களில் சாலை போட ஏற்கனவே ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு சாலைகள் திட்டம் மூலம் 11கி.மீ சிமென்ட் சாலை அமைக்க ரூ5.50கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 10கி.மீ. சாலைக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் வரும் ஜனவரிக்குள் நிறைவுபெறும் என்றார். நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தன் பேசினார்

 

ரூ50 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையத்தில் கான்கிரீட் தளம் நகராட்சி கூட்டத்தில் தலைவர் தகவல்

Print PDF

தினகரன்                  18.11.2010

ரூ50 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையத்தில் கான்கிரீட் தளம் நகராட்சி கூட்டத்தில் தலைவர் தகவல்

பள்ளிபாளையம், நவ.18: குமாரபாளையம் நகராட்சி பேருந்து நிலையத்தில் கான்கிரீட் தளம் அமைக்க 50 லட்சம் ரூபாயினை தமிழக அரசு ஒதுக்கியுள் ளது என நகராட்சி கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.

குமாரபாளையம் நகர மன்ற கூட்டம் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மதிவாணன், ஆணையாளர் மாணிக்கவாசகம், பொறி யாளர் ரவி, துப்புரவு ஆய் வாளர் இளங்கோவன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நாரயணாநகர் பகுதி யில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். முன்னறிவிப்பு இன்றி செயல்படுவதால் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றப்படும் பணியினை நிறுத்த வேண்டும் என துணைத்தலைவர் மதிவாணன் கேட்டுக்கொண்டார். முறையாக தண்டோரா போட்டுத்தான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது என ஆணையாளர் தெரிவித்தார். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என தலைவர் சேகர் அறிவித்தார். நாய் தொல்லை அதிகரித்து விட்டது. நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அதிமுக உறுப்பினர் பாஸ்கர் கேட் டார். நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார ஆய்வாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

சாக்கடையில் கட்டிடங்களின் மண்ணை கொட்டுவதால் சாக்கடை அடைத்துகொள்கிறது. இதனால் தண்ணீர் செல் லாமல் தேங்கி நிற்கிறது என உறுப்பினர் துர்க்காரவி தெரிவித்தார். எனது வார்டில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அகற்றப்பட வேண்டும் என உறுப்பினர் முருகேசன் தெரிவிக்க, கடந்த வெள்ளியன்றுதான் உங்கள் வார்டில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகள் நடைபெற்றது என துப்புரவு அதிகாரி பதிலளித்தார். நகரில் பல இடங்களில் டயர்களும், இளநீர் கூடுகளும் கொட்டி கிடக்கிறது. இதனால் சுகாதாரம் கெடுகிறது என துணைத்தலைவர் மதிவாணன் தெரிவித்தார். இவை அனைத்தும் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் தெரிவித்தார்.

நடராஜா நகரில் கடைகளுக்கு முன்னால் மண்கொட்டி மேடை போட்டு விட்டதால் தண்ணீர் தேங்கி நிற்கிறது என அதிமுக உறுப்பினர் பாஸ்கர் புகார் செய்தார். நெடுஞ்சாலை துறைக்கு தெரிவித்து மண்மேடை களை அப்புறப்படுத்தப்படும் என தலைவர் பதிலளித்தார். சந்தைப்பேட் டையில் குப்பை கொட்டி கிடக்கிறது என திமுக உறுப்பினர் செல்வம் தெரிவித்தார். நகராட்சியில் குப்பைகளை கொட்ட இடம் இல்லை. இது பெரும் பிரட்சனையாக உள்ளது. இவற்றை எதிர்கட்சியினர் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர். இது பொதுவான பிரச்னை இதில் கட்சி கண்ணோட் டம் கூடாது. உரிய தீர்வை சொன்னால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தலைவர் அறிவித்தார்.

பேருந்து நிலையத்தில் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு கடைகளை கட்டினால் கூடுதல் வருவாய் கிடைக் கும். சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என திமுக உறுப்பினர் சண்முகம் தெரிவித்தார்.

பேருந்து நிலையத்தில் கான்கிரீட் தளம் அமைக்க அரசு 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. என தலைவர் பதிலளித்தார். தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.

 

ரூ209.22 கோடி பாதாள சாக்கடை திட்டப்பணி கலெக்டர் ஆய்வு

Print PDF

தினகரன்                18.11.2010

ரூ209.22 கோடி பாதாள சாக்கடை திட்டப்பணி கலெக்டர் ஆய்வு

ஈரோடு, நவ.18: ஈரோடு மாநகராட்சி சார்பில் ரூ.209.22 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சவுண்டையா நேற்று ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு மாநகராட்சி சார்பில் பெரியசேமூர், வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளை இணை த்து ரூ.209.22 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

5 பேக்கேஜ்களாக நடைபெறும் இந்த கட்டுமான பணிகளில் தற்போது பேக்கேஜ் 1 மற்றும் பேக்கேஜ் 3 ஆகிய பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று கலெ க்டர் சவுண்டையா ஆய்வு மேற்கொண்டார். மாணிக்கம்பாளையத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் கட்டுமான பணிகள் குறி த்து கேட்டறிந்தார். ஆழ் துழை குழாய் அமைக்கும் இடத்தில் குழாய்களின் நீள, அகலங்கள் குறித்தும், தரமாக கட்டப்படுகிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் மல்லிகை நகரில் பம்பிங் ஸ்டேஷனை ஆய்வு செய்தார். பெரியார் நகர் ராஜா கார்டன் பகுதியில் பேக்கேஜ் 1 பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது பணிகள் மந்தமாக நடந்து வந்தது. இதுகுறித்து காண்ட்ராக்டரிடம் விசாரித்தார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தினசரி எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள், எவ்வளவு பணிகள் செய்யப்படுகிறது என்பது குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் சவுண்டையா உத்தரவிட்டார்.

பின்னர் மாநகராட்சி சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் காந்திஜி ரோடு மகப்பேறு மருத்துவமனையை ஆய்வு செய்தார். அங்கிருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த கலெக்டர் அங்கு புதியதாக ரூ.3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாநகராட்சி மாமன்ற கூட்ட கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் இதுகுறித்து பத்திரிக்கையாளர்களுக்கு கலெக்டர் சவுண்டையா பேட்டியளித்தார். அப் போது அவர் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டம் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 1 மற்றும் 3 ஆகிய இரண்டு பிரிவு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

3வது பேக்கேஜ் வேகமாக பணிகள் நடந்து வருகிறது. 1வது பேக்கேஜ் பணிகள் பல மாதங்கள் ஆகியும் இன்னும் சரியாக நடைபெறவில்லை. அதிக ஆட்களை கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். மற்ற 3 பிரிவுகளுக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 2012 மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேம்பாலம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

தோண்டப்பட்ட குழிகளை மூடுவது குறித்து அரசிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். 80 அடி ரோடு திட்டம் குறித்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை யாணை பெற்றுள்ளார்கள். இதுதொடர்பாகவும் அர சிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர் வடிவேல், பாதாள சாக்கடை திட்ட பொறி யாளர் ஞானமணி, செயற்பொறியாளர்கள் முருகானந்தம், சுகந்தி உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 


Page 102 of 238