தினகரன் 29.10.2010
பாலக்கோடு பேரூராட்சியில் ரூ12.50 லட்சத்தில் புதிய மன்றக்கூடம் திறப்பு
பாலக்கோடு, அக்.29: பாலக்கோடு பேரூராட்சியில் ரூ12.5 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட மன்றகூட திறப்பு விழா நடந்தது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி பொதுநிதியில் இருந்து ரூ12.50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட மன்ற கூட்டரங்கத்தை மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார் திறந்து வைத்து பேசினார்.
முன்னதாக செயல் அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பேரூராட்சி தலைவர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முருகன், பேரூராட்சி துணைத் தலைவர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் முரளி பேசும்போது, பாலக்கோடு அருகே மணியக்காரன்கொட்டாய் செல்லும் பாதையில் உள்ள சுடுகாடும் காவல்நிலையம் பின்புறம் உள்ள சுடுகாடு இவைகளை பாலக்கோடு பேரூராட்சியில் இணைத்து அடிப்படை வசதிகளை செய்ய உத்தரவு வழங்க ஆட்சியரை கேட்டுக்கொண்டார். ரூ12.5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய மன்ற கூட்டரங்கை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். அருகில், பேரூராட்சி தலைவர் முரளி, அன்பழகன் எம்.எல்.ஏ., தர்மபுரி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் இன்பசேகரன் எம்.எல்.ஏ. ஒன்றிய குழுத்தலைவர் முருகன், மாவட்ட பொருளாளர் சூடப்பட்டி சுப்பிரமணி ஆகியோர் உள்ளனர். உள்படம்: புதிதாக கட்டப்பட்ட மன்ற கூட்டரங்கு.
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் முரளி பேசும்போது, பாலக்கோடு அருகே மணியக்காரன்கொட்டாய் செல்லும் பாதையில் உள்ள சுடுகாடும் காவல்நிலையம் பின்புறம் உள்ள சுடுகாடு இவைகளை பாலக்கோடு பேரூராட்சியில் இணைத்து அடிப்படை வசதிகளை செய்ய உத்தரவு வழங்க ஆட்சியரை கேட்டுக்கொண்டார்.
விழாவில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ருக்மணி, சுபாஸ்போஸ், தாசில்தார் மணி, கவுன்சிலர்கள் ஜெயந்தி, சிவசங்கரி, முருகன் ஆசீப், கண்ணையன், சீனிவாசன், பாலகிருஷ்ணன், ஜீனத்பேகம், வகாப்ஜான், பத்தேகான், சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இளநிலை பொறியாளர் கிருபாகரன் நன்றி கூறினார்.