Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

சாலையோர கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 14.10.2010

சாலையோர கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

சென்னை : சாலையோர வியாபாரிகளுக்கு, நீதிபதி முன்னிலையில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்படும் என்று மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.சென்னை மேயர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:தி.நகர் பகுதியில், தியாகராயா சாலை, உஸ்மான் சாலை, சிவபிரகாசம் சாலை ஆகிய சாலைகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு, பாண்டி பஜாரில் அடுக்கு மாடி வணிக வளாகம் கட்டப்பட்டது.அயனாவரம் பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு பால வாயல் மார்க்கெட் தெருவில் வணிக வளாகம் கட்டப்பட்டது.அதுபோல் ராயபுரம் மணியக்கார சத்திர தெருவிலும் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகங்களை கடந்த மாதம் 13ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மணியக்கார சத்திரத் தெரு வளாகத்தில் 117 நபர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார்கள் வந்தது.இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, 101 உண்மையான பயனாளிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போல், பாண்டி பஜார், அயனாவரம், வணிக வளாகங்களில் உண்மையான பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, "ஹாக்கிங்' கமிட்டி நீதிபதி ராமமூர்த்தி முன்னிலையில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

காந்திபுரத்தில் ரூ100 கோடியில் புதிய மேம்பாலம் பணி ஜனவரியில் துவக்கம் பஸ் நிலைய போக்குவரத்தில் மாற்றம்

Print PDF

தினகரன் 14.10.2010

காந்திபுரத்தில் ரூ100 கோடியில் புதிய மேம்பாலம் பணி ஜனவரியில் துவக்கம் பஸ் நிலைய போக்குவரத்தில் மாற்றம்

கோவை, அக். 14: காந்திபுரத் தில் புதிய மேம்பாலம் கட்டும் பணி, வரும் ஜனவரியில் துவக்கப்படும். பஸ் ஸ்டா ண்ட்டுகளுக்கான போக்குவரத்து மாற்றப்படும்.

காந்திபுரத்தில் 100 கோடி ரூபாய் செலவில் புதிய மேம் பாலம் கட்டும் பணி நடத்தப்படவுள்ளது. தற்போது விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கும் பணி நடக்கிறது. அடுத்த மாதம் பணி முடியும். இதைதொடர்ந்து டெண்டர் விட்டு, பணியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி முதல் வாரத்தில் பணியை துவக்க மாநில நெடுஞ்சாலைத்துறை ஆயத்தமாகி வருகிறது. நகரின் போக்குவரத்து நெரிசல் மிகு ந்த மையப்பகுதியில் மேம் பாலம் கட்டுவது மிகவும் சவாலான விஷயம்.

நடைபாதை வேலை நடந்தாலே, கோவை நகரின் போக்குவரத்து ஸ்தம்பித்து விடும். இதுபோன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க, நெரிசல் இன்றி மேம்பால பணி நடத்த நெடுஞ்சாலைத்துறை ஆலோசித்து வருகிறது.

இது குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதி காரி ஒருவர் கூறியதாவது;

காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட், டவுன்பஸ் ஸ்டா ண்ட், விரைவு பஸ் ஸ்டாண்ட் (திருவள்ளுவர் பஸ் ஸ்டா ண்ட்), ஆம்னி பஸ் ஸ்டாண்ட் என 4 பஸ் ஸ்டாண்ட் ஒரு கி.மீ தூரத்திற்குள் அமைந்துள்ளது.

1500 மீட்டர் நீளத்திற்கு அதிகமாக மேம்பாலம் அமை யும். மேம்பாலம் கட்டினால், இப்பகுதிக்கு குறிப்பாக, பஸ் ஸ்டாண்டிற்கு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படும். கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு என நகரின் மிகப்பெரிய வர்த்தக, வணிக பகுதி க்கு பொதுமக்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது.

எனவே, வாகனங்கள் சென்று வர மாற்று திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரோட்டின் ஒரு பகுதியை பாலம் கட்டும் பணிக்கும், இதர பகுதியை வாகன போக்குவரத்திற்கும் பயன்படுத்த ஆலோசனை நடத்தியிருக்கிறோம்.

ரோட்டின் இரு பகுதியை மேலும் அகலமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போதுள்ள ரோட்டின் அளவிற்கு, வாகனங்கள் செல்ல பாதை அமைக்கப்படும். இதன் மூலம் பஸ் ஸ்டாண்டிற்கு நெரிசல் இல்லாமல் பஸ்கள் செல்ல முடியும்.

பெங்களூரு மைய பகுதி மேம்பாலம், சென்னை கத்திப்பாரா மேம்பாலம் ஆகிய வை கூட போக்குவரத்து நெரி சல் மிகுந்த இடத்தில் தான் கட்டப்பட்டது. இதேபோல், காந்திபுரம் மேம்பாலத்தை நெரிசலை சமாளித்து கட்ட திட்டம் வகுக்கப்பட்டு வரு கிறது. பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல மாற்றுப்பாதை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். பணி துவங்கி 2 ஆண்டிற்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

ரோட்டை கடந்து செல்ல சென்னையில் 7 இடங்களில் நகரும் படிக்கட்டு வசதி தமிழக அரசு முடிவு

Print PDF

மாலை மலர் 13.10.2010

ரோட்டை கடந்து செல்ல சென்னையில் 7 இடங்களில் நகரும் படிக்கட்டு வசதி தமிழக அரசு முடிவு

ரோட்டை கடந்து செல்ல
 
 சென்னையில் 7 இடங்களில்
 
 நகரும் படிக்கட்டு வசதி
 
 தமிழக அரசு முடிவு

சென்னை, அக். 13- சென்னை நகரின் போக்குவரத்து நெரி சலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

முக்கிய இடங்களில் மேம்பாலம், சுரங்கப்பாதை, பொது மக்கள் சாலையை கடக்க நடைபாலம், ரோட்டு ஓரமாக நடந்து செல்ல நடைபாதை ஆகியவை அமைக்கப்படுகின்றன.

தற்போது பொதுமக்கள் வசதிக்காக சென்னை நகரில் 7 இடங்களில் சாலையை கடக்கும் நடைபாலம் அமைத்து, நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதியும் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இதற்கான பரிந்துரையை செய்து இருக்கிறது.

அதன்படி, வேளச்சேரி பைபாஸ் ரோட்டில் உள்ள குடிநீர் நிரம்பும் நிலையம் அருகில், அண்ணா நகர் மேற்கு பணிமனை சந்திப்பு, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி அருகில், தாம்பரம் அரசு ஆஸ்பத்திரி அருகில், குரோம்பேட்டை, பெருங் குடி அருகே உள்ள தரமணி இணைப்பு சாலை, டி.சி.எஸ். சந்திப்பு ஆகிய 7 இடங்களில் நகரும் படிக்கட்டு வசதியுடன் நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

நெடுஞ்சாலைத் துறை யினர், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக் கள் சாலையை கடக்க சிரமப்படும் இடங்கள் ஆகிய வற்றை ஆய்வு செய்து, இந்த இடங்களை முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டம்-3ன் மூலம் இந்த திட்டம் நிறை வேற்றப்படுகிறது. அரசு ஒப்புதல் பெற்று வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இதற்கான பணி தொடங்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

 


Page 122 of 238