Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில்வே கூடுதல் மேம்பாலம் நவம்பரில் முதல்வர் திறக்கிறார்

Print PDF

தினமணி 12.10.2010

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில்வே கூடுதல் மேம்பாலம் நவம்பரில் முதல்வர் திறக்கிறார்

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் அருகில் ரூ..9.25 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்தார் மேயர் மா.சுப்பிரமணியன்.

சென்னை, அக்.11: பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில்வே கூடுதல் மேம்பாலத்தை நவம்பர் மாதம் முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க உள்ளார் என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் கூடுதல் மேம்பாலப்பணி மற்றும் வில்லிவாக்கம் சுரங்கப்பாதைப் பணிகளை ரயில்வே துறை அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியது:

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில்வே மேம்பாலத்தை ஒட்டி கூடுதலாக மேம்பாலம் கட்டும் பணி ரூ. 9.25 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பாலம் அயனாவரம் மற்றும் கொளத்தூர் பகுதிகளை இணைக்கும் மிக முக்கியமான பாலமாகும். இப்பாலப்பணி நவம்பரில் முடிக்கப்பட்டு, முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்படும். துணை முதல்வர் மு.. ஸ்டாலின் முன்னிலையில் இந்தப் பாலத் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

வில்லிவாக்கம் சுரங்கப்பாதை பணி:

வில்லிவாக்கம் சுரங்கப்பாதை பணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ரூ. 34.16 கோடியில் கட்டப்படும் இச்சுரங்கப்பாதையில் மாநகராட்சியின் பணிகள் 85 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன.

ரயில்வே துறை சார்பில் 5 பெட்டக வடிவிலான அமைப்புகள் அமைக்கும் பணியில் 3 முடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சுரங்கப்பாதையின் பணிகள் வரும் டிசம்பரில் முடிக்கப்பட்டு, தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்படும் என்றார் மா. சுப்பிரமணியன்.

 

தயாநிதி மாறன் தொகுதி நிதியில் கட்டப்படும் லோகோ ஒர்க்ஸ் மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு

Print PDF

தினகரன் 12.10.2010

தயாநிதி மாறன் தொகுதி நிதியில் கட்டப்படும் லோகோ ஒர்க்ஸ் மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு

அண்ணா நகர், அக்.12: தயாநிதி மாறன் தொகுதி நிதியில் கட்டப்பட்டு வரும் லோகோ ஒர்க்ஸ் மேம்பாலம் அடுத்த மாதம் திறக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில்வே மேம்பாலத்தை ஒட்டி கூடுதல் மேம்பாலம் ரூ8.41 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இதன் சர்வீஸ் ரோடு உள்பட இதர பணிகளுக்கும் சேர்த்து மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ9.25

கோடி வழங்கியுள்ளார். இந்த பாலம் வடசென்னை மக்கள் சென்னை நகருக்குள் எளிதாக வந்து செல்ல மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதுதவிர வில்லிவாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ரூ34.16

கோடியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. இரண்டு பணிகளையும் மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

லோகோ ஒர்க்ஸ் ரயில்வே மேம்பால பணிக்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், தொகுதி நிதியில் இருந்து ரூ9.25 கோடியை அளித்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியில் அதிக தொகை ஒதுக்கியிருப்பது இந்தியாவிலேயே இது முதல் முறை.

லோகோ ஒர்க்ஸ் ரயில்வே மேம்பாலம் நவம்பர் இறுதியில் கட்டி முடிக்கப்படும். வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை வரும் டிசம்பரில் கட்டி முடிக்கப்படும். இந்த இரண்டு பணிகளும் முடிவடைந்ததும். அவற்றை முதல்வர் திறந்து வைப்பார்.

இவ்வாறு மேயர் கூறினார்.

வி.எஸ்.பாபு எம்.எல்., 4வது மண்டல குழு தலைவர் சீனிவாசன் உடனிருந்தனர். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் மேம்பால பணியை மேயர் மா.சுப்பிரமணியன் பார்வையிடுகிறார். அருகில், வி.எஸ்.பாபு எம்.எல்., மண்டல குழு தலைவர் சீனிவாசன்.

 

வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை டிசம்பரில் திறக்க முடிவு

Print PDF

தினமலர் 12.10.2010

வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை டிசம்பரில் திறக்க முடிவு

சென்னை: ""வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப் பாதையை டிசம்பர் மாதம் முதல்வர் திறந்து வைப்பார்,'' என, மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சென்னை மாநகராட்சி லோகோ ஒர்க்ஸ் ரயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தையொட்டி ஒன்பது கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பில், புதிய பாலம் அமைக்கும் பணியும், வில்லிவாக்கம் ரயில்வே லெவல் கிராசிங்கில், 34 கோடியே 16 லட்ச ரூபாய் மதிப்பில், சுரங்கப் பாதை கட்டும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகளை மேயர் சுப்ரமணியன் நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: வட சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மணியக்கார சத்திர தெருவில், ரயில்வே சுரங்கப் பாதை, கத்திவாக்கம் நெடுஞ்சாலை - காக்ரேன் பேசின் சாலை சந்திப்பு ரயில்வே மேம்பாலம், தங்க சாலை சந்திப்பு மேம்பாலம் கட்டும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் மேம்பாலம் 508 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன், 6.3 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. தற்போது தூண்கள் அமைக்கப்பட்டு, மேல் தளம் சாய்வு சுவர் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த பாலத்தின் கட்டுமானப் பணி அடுத்த மாதத்தில் முடிக்கப்பட்டு முதல்வர் திறந்து வைப்பார். அது போல், வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப் பாதை 447.50 மீட்டர் நீளத்திலும் 2.5 மீட்டர் அகலத்தில் சைக்கிள் பாதை உட்பட 13 மீட்டர் அகலத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. இந்த சுரங்கப் பாதையில் 85 சதவீத கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்திற்குள் முழுமையான கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு முதல்வர் திறந்து வைப்பார். இவ்வாறு மேயர் கூறினார். மேயருடன், புரசைவாக்கம், பாபு எம்.எல்.., துணை கமிஷனர் (பணிகள்) தரேஷ் அகமது, தலைமைப் பொறியாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் இருந்தனர்.

 


Page 124 of 238