தினகரன் 22.07.2010
ஆரோக்கியபுரம் & புதுவிளை இணைப்பு பாலம் திறப்பு
திங்கள்சந்தை, ஜுலை 22: திங்கள் நகர் தேர்வுநிலைப்பேரூராட்சிக்குட்பட்ட ஆரோக்கியபுரம் & புதுவிளை பகுதிக்கு ரூ2 லட்சம் செலவில் புதிய பாலம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.
விழாவுக்கு கவுன்சிலர் சேவியர் ராஜமணி தலைமை வகித்தார். பேரூ ராட்சி தலைவி ராஜம், ஒன்றிய முன்னாள் தி.மு.க அவைத்தலைவர் புஷ்பராஜ், பேரூர் தி.மு.க முன்னாள் செயலர் பாலையன், சுப்பிரமணியம் மாவட்ட பிரதிநிதி சர்ச்சில் வேல்குமார், பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் ஜோசப் ராஜ், ஹெலன்டேவிட்சன் எம்.பி ஆகியோர் புதிய பாலத்தை திறந்து வைத்து பேசினார். விழாவில் ஊர்பொது மக்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.