Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டை இடம் மாற்ற அதிகாரிகள் ஆலோசனை

Print PDF

தினமலர் 17.04.2010

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டை இடம் மாற்ற அதிகாரிகள் ஆலோசனை

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட், புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண் விளை பொருள் பேரங்காடிக்கு மாற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.., நாராயணன் தலைமையில் நடந் தது.ஒட்டன்சத்திரம்-நாகணம்பட்டி பைபாஸ் ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 3.06 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய வேளாண் விளைபொருள் பேரங்காடி கட்டப் பட்டுள்ளது. டெண்டர் விடப்பட்டு பல நாட்கள் கடந்த பின் பும் இன்னமும் செயல்படாமல் பூட்டிக் கிடக்கிறது. தற்போது ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டிற்கு எதிரில் உள்ள காய்கறி மார்க்கெட் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் வேளாண் விளைபொருள் பேரங்காடி திண்டுக்கல் வேளாண் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள காய்கறி மார்க்கெட்டை வேளாண் விளைபொருள் பேரங்காடிக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகிகள் தற்போது உள் ளது போல் பேரூராட்சிக்கு சொந்தமான இடமாக இருந்தால் அங்கு செல்வதாக தெரிவித்தனர். பேரங்காடி வேறு துறையின் கீழ் உள்ளது. பேரூராட்சிக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. பின்னர் மற்ற கடைக்காரர்களிடம் ஆலோசித்து கூறுவதாக மார்க்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஒட்டன்சத்திரம் தாசில்தார் பசீர், டி.எஸ்.பி., அரங்கசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Last Updated on Saturday, 17 April 2010 06:31
 

சங்கரன்கோவிலில் நவீன ஆடு அறுப்புக் கூடம் திறப்பு

Print PDF

தினமணி 16.04.2010

சங்கரன்கோவிலில் நவீன ஆடு அறுப்புக் கூடம் திறப்பு

சங்கரன்கோவில், ஏப். 15: சங்கரன்கோவிலில் நவீன ஆடு அறுப்புக் கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புதிய பஸ்நிலையம் அருகில் ரூ.20 லட்சம் செலவில் நவீன ஆடு அறுப்புக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை நகராட்சித் தலைவர் பார்வதிசங்கர் திறந்து வைத்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சங்கரன்கோவிலில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஆடு அறுப்புக் கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இனி ஆடுகளை சாலையில் அறுக்கக் கூடாது.

கால்நடைமருத்துவர் பரிசோதனைக்குப் பின்னரே ஆடுகள் அறுக்கப்படும். இதற்காக கால்நடை மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சோலார் மூலம் இந்த ஆடு அறுப்புக் கூடம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. கறிகளை கழுவுவதற்கு சுடுதண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இறைச்சிக் கடைகளை ஒரே இடத்தில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. ஆடு அறுப்பதற்கான கூலி தொடர்பாக, நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்களின் ஆலோசனையைப் பெற்று முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ச.தங்கவேலு, நகராட்சித் துணைத் தலைவர் சங்கரன், சுகாதார அதிகாரி குருசாமி, ஓவர்சியர் பட்டுராஜ், நகராட்சி உறுப்பினர் நடராஜன், முகம்மதுஅலிஜின்னா, சங்கரமகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 16 April 2010 10:29
 

கருங்காலிவிளையில் கலையரங்கு திறப்பு

Print PDF

தினமணி 16.04.2010

கருங்காலிவிளையில் கலையரங்கு திறப்பு

நாகர்கோவில், ஏப். 15: வெள்ளிமலை பேரூராட்சி அம்மாண்டிவிளை அருகே கருங்காலிவிளையில் ரூ. 2 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கலையரங்கை எஸ். ஜெயபால் எம்எல்ஏ திறந்துவைத்தார்.

குளச்சல் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்தக் கலையரங்கு கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில் பேரூர் காங்கிரஸ் தலைவர் தேவராஜ், வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன், கவுன்சிலர் சரோஜா, திமுக பிரதிநிதி பொன்னுலிங்கம், ஊர்த் தலைவர் அரிகிருஷ்ணன்ராஜா, ஆசாரிப்பள்ளம் பேரூராட்சித் தலைவர் வில்லியம், நகரத் தலைவர் விஜிலியஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 16 April 2010 10:28
 


Page 184 of 238