தினமலர் 22.03.2010
தரைப்பால பணி விரைவில் முழுமையடையும் : திண்டிவனம் நகராட்சி கமிஷனர் தகவல்
திண்டிவனம் : திண்டிவனம் காவேரிப் பாக்கம் பகுதி தரைப்பாலப் பணி விரைவில் துவங்கும் என கமிஷனர் முருகேசன் கூறினார்.திண்டிவனம் காவேரிப் பாக்கம் பகுதி தரைப்பால பணி தாமதமானதால், அந்த பகுதி மக்களே திறந்து விட்டனர். இது குறித்து நகராட்சி கமிஷனர் முருகேசன் கூறியதாவது; இந்த பாலத்தில் தற் போது தார் ரோடு, மின்சார பணி,மின்விளக்குகள், பூசு வேலை தான் மீதமுள்ளன. தற்போதுள்ள நிலையில் மக்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் ஆர்வ மிகுதியால் அவர்களே திறந்து விட்டனர். ஆறு மாதத் திற்கு முன்பு இந்த பால பணி மீண்டும் துவங்கிய போது, மழை காலமானதால் ஊற்றெடுத்தது. கோடை காலத்தில் இந்த பணியை செய்யலாம் என்று இருந்தோம். இந்த பாலப் பணி விரைவில் துவங்கி விடும்என்றார