Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

கோபாலசமுத்திரம் கண்மாயை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர் 03.03.2010

கோபாலசமுத்திரம் கண்மாயை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை

திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி பின்பகுதியிலுள்ள கோபாலசமுத்திரம் கண்மாய் 40 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி பின்பகுதியில் கோபாலசமுத்திரம் கண்மாய் உள்ளது. இதற்கு நீர் வரத்து வாய்க்கால்களே கிடையாது. பாசனம் பெறும் நிலங்களும் இல்லை. மழைநீர் தேங்கி நிற்கும் இக்கண்மாய் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு பயன்பட்டு வருகிறது.தற்போது மழைநீர் இல்லாமல் முழுக்க ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளின் கழிவுநீர் தேங்கி பெரிய சாக்கடை குளம் போல் காணப்படுகிறது.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஏழு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயில் மூன்றே கால் ஏக்கர் நிலம் அரசு ஆஸ்பத்திரி பயன் பாட்டிற்கு வழங்கப்பட் டுள்ளது. மீதம் உள்ள நிலத்தில் 40 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டி, கரைகளை அகலப்படுத்தி பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. கழிவுநீர் தேங்குவதை தடுத்து, மழைநீர் மட்டும் தேங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. தற்போது கண்மாய்க்கு வரும் சாக்கடை கால் வாய்களை மற்ற கால் வாய்களுடன் இணைக்கும் பணி நடக்கிறது. வீடுகளின் கழிவுநீரும் பாதாள சாக்கடையில் சென்று விடும். இதனால் இந்த கண்மாயில் சுத்தமான மழைநீர் மட்டும் தேங்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Wednesday, 03 March 2010 06:35
 

வரும் ஏப்ரலுக்குள் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் பணி முடியும்

Print PDF

தினமணி 02.03.2010

வரும் ஏப்ரலுக்குள் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் பணி முடியும்

மதுரை, மார்ச் 1: மதுரை மாட்டுத்தாவணியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சென்ட்ரல் மார்க்கெட் பணி வரும் ஏப்ரலுக்குள் முடியும் என்று மாநகராட்சி ஆணையாளர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி வருவாய் வரி வசூல் சம்பந்தமான இனங்களுக்கான ஆய்வுக் கூட்டம் கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. ஆணையாளர் எஸ்.செபாஸ்டின் தலைமை வகித்தார். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி வசூல் செய்வதற்காக ஒவ்வொரு வார்டுகளுக்கும் உதவிப் பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக வசூல் செய்யப்படுகின்றன.

மேலும் மீனாட்சி பஜார், மாட்டுத்தாவணி பஸ் நிலைய வணிக வளாகம் உள்ளிட்ட 2 ஆயிரம் கடைகளுக்கான நிலுவைத் தொகைகள் வசூல் செய்யப்படுகிறது. காய்கறி மார்க்கெட், சந்தை உள்ளிட்ட குத்தகைக்கு இந்த மாதத்திற்குள் உரிமம் முடிந்தால், நிலுவை செலுத்தினால் மட்டுமே புதுப்பித்துத் தரப்படும்.

புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் மேற்கூரைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. மேலும் சாலை, குடிநீர், கழிவு நீர் வசதிகள் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் இந்த மாதத்திற்குள் முடியும்.

ஏப்ரல் முதல் வாரத்தில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைக்க உள்ளார். மேலும் தற்போது உள்ளவர்களுக்கே கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

கடை உரிமையாளர்களுக்கு எந்தவிதப் பிரச்னையும் ஏற்படாமல் இருக்க அடையாள அட்டைகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கூட்டத்தில் தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், வருவாய் ஆணையாளர் இரா.பாஸ்கரன் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 02 March 2010 09:34
 

குப்பைகளை அகற்ற டிராக்டர்

Print PDF

தினமலர் 01.03.2010

குப்பைகளை அகற்ற டிராக்டர்

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பேரூராட்சி துப்புரவு பணிக்காக 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய டிராக்டர் வாங்கப் பட்டுள்ளது. பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் குப்பைகளை சேகரித்து கிடங் கிற்கு கொண்டு செல்ல ஏற் கனவே இரண்டு டிராக் டர்கள் உள்ளன. அரசு நிதியாக ரூபாய் மூன்று லட்சம், பேரூராட்சி பொது நிதியாக ரூபாய் 2.50 லட்சம், மொத்தம் 5.50 லட்சம் செலவில் புதிய டிராக்டர் வாங்கப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 01 March 2010 06:55
 


Page 200 of 238