Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

60 வார்டுகளுக்கும் கொசு மருந்தடிக்கும் இயந்திரம் வாங்க திருச்சி மாநகராட்சி முடிவு

Print PDF

தினமணி 23.02.2010

60 வார்டுகளுக்கும் கொசு மருந்தடிக்கும் இயந்திரம் வாங்க திருச்சி மாநகராட்சி முடிவு

திருச்சி, பிப். 22: திருச்சி மாநகராட்சியின் 60 வார்டுகளுக்கும் கொசு மருந்தடிக்கும் இயந்திரங்கள் (தலா 60 கைத் தெளிப்பான், புகை மருந்து அடிக்கும் இயந்திரம்) வாங்க மாமன்றம் ஒப்புதல் அளித்தது.

திருச்சி மாநகரில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி பரவலாக மக்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்தி வருகிறது. மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் தரப்பில் அவ்வப்போது இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும், "சாதாரண காய்ச்சல்தான்' என்ற நிலையில் அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். இந்நிலையில், கொசுக்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் ரெ. ஸ்ரீராமன், து. தங்கராஜ், வை. புஷ்பம் ஆகியோர் கடந்த ஜனவரி 25-ம் தேதி அன்று நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த மாமன்றக் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்திருந்தனர். 60

வார்டுகளிலும் தலா ஒரு கொசு மருந்து அடிக்கும் கைத்தெளிப்பான், ஒரு புகை மருந்து அடிக்கும் இயந்திரம் என 120 இயந்திரங்கள் வாங்க வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. ஒவ்வொரு வார்டுக்கும் இந்த இயந்திரங்களைக் கொடுத்து, துப்புரவுப் பணியாளர்கள் மூலம் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் நகர்நல அலுவலர் டாக்டர் கே.சி. சேரன் கூறினார்.

ஆனால், மாமன்றக் கூட்டங்கள் கடந்த இரண்டு முறையும் இரங்கல் தீர்மானங்களுடன் ஒத்திவைக்கப்பட்டன. இதனால், கொசுக்களைக் கட்டுப்படுத்தும் இந்தத் தீர்மானம் "தள்ளித்தள்ளிப் போய்' ஒரு வழியாக திங்கள்கிழமை நடைபெற்ற சாதாரணக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

தீர்மானம் படிக்கப்படுவதற்கு முன்பே சுகாதார பிரச்னைகள் குறித்து மாமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றதால், இந்தத் தீர்மானத்தின் மீது யாரும் அதிகம் பேசவில்லை. தேமுதிக உறுப்பினர் ஜோசப் ஜெரால்டு மட்டும் "இயந்திரங்களுடன் சேர்த்து போதியளவுக்கு மருந்தும் வாங்க வேண்டும்' எனக் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து இவற்றை வாங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையர் த.தி. பால்சாமி அறிவித்தார்.

ராணுவ இடத்துக்கு ரூ. 17 லட்சம்: முன்னதாக கிராப்பட்டி பகுதியில் ராணுவ நிலத்தை மாநகராட்சிக்குக் கோருவது குறித்த நடவடிக்கையில் இப்போதைய நிலை என்ன? என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஆணையர் த.தி. பால்சாமி, ராக்போர்ட் காலனி பகுதியிலுள்ள ஒரு பகுதி ராணுவ நிலத்தை ரூ. 17 லட்சம் செலுத்தி மாநகராட்சிக்கு வாங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகக் கூறினார்.

Last Updated on Tuesday, 23 February 2010 10:21
 

ஜெனரேட்டர் வாங்குகிறது மாநகராட்சி

Print PDF

தினமலர் 22.02.2010

ஜெனரேட்டர் வாங்குகிறது மாநகராட்சி

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மின்சாரம் தடைபடும் சமயத்தில், குடிநீர் வினியோகம் பாதிக்காமல் இருக்க, ஒன்பது நீரேற்று நிலையங்களில் 1.60 கோடி ரூபாய் செலவில் ஜெனரேட்டர் நிறுவ, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம், வரும் 25ல் நடக்க உள்ள மாமன்ற கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது.மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்க, ஒன்பது நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரம் தடைபடும் சமயத்தில், நீரேற்று நிலையங்களில் குடிநீர் வினியோகம் தடைபடுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெனரேட்டர் நிறுவ மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகம் 2009-10ம் ஆண்டுக்கான இடை நிரப்பு நிதியில் 50 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கி உள்ளது. மீதி, 1.10 கோடி ரூபாயை மாநகராட்சி குடிநீர் நிதியில் இருந்து செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம், வரும் 25ம் தேதி நடக்கும் மாமன்ற கூட்டத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

Last Updated on Monday, 22 February 2010 06:38
 

பாதாள சாக்கடை பணிகள் ஓராண்டில் நிறைவு பெறும் நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினமலர் 22.02.2010

பாதாள சாக்கடை பணிகள் ஓராண்டில் நிறைவு பெறும் நகராட்சி தலைவர் தகவல்

பெரம்பலூர்:பெரம்பலூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் இன்னும் ஓராண்டில் நிறைவுபெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று நகராட்சி தலைவர் ராஜா கூறினார்.பெரம்பலூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்த வார்டுகளில் நடைபெற்று வரும் தார்ச்சாலை பணிகளை நகராட்சி தலைவர் ராஜா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். 6வது வார்டில் நடைபெற்று வரும் தார்ச்சாலை பணிகளை பார்வையிட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ரூ.28.5கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் அனைத்து இடங்களிலும் சாலைகளின் நடுவே பைப் பதித்து மேன்ஹோல்கள் கட்டப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் வெகு வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் 6 மாதங்களில் முடிந்துவிடும். அதன் பின்னர் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் அடுத்த 6 மாதங்களில் முடிந்து விடும்.

இந்த பணிகள் முடிந்தவுடன் பாதாள சாக்கடை திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும் பாதாள சாக்கடை திட்டம் முடிவடைந்த வார்டுகளான 6வதுவார்டில் ரூ.23 லட்சம் மதிப்பிலும்,7மற்றும் 14 வது வாடுகளில் ரூ.24 லட்சம் மதிப்பிலும், 8வதுவார்டில் ரூ.14.5 லட்சம் மதிப்பிலும், 9வது வார்டில் ரூ.13 லட்சம் மதிப்பிலும், 11வதுவார்டில் ரூ.30 லட்சம் மதிப்பிலும், 15வது வார்டில் ரூ.16 லட்சம் மதிப்பிலும், 20 மற்றும் 21 வதுவார்டுகளில் ரூ.54 லட்சம் மதிப்பிலும் என சுமார் ரூ.1.88 கோடி நிதி நகர்புற சாலை மேம்பாட்டு திட்டம் மற்றும் நகராட்சி பொது நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிதியை கொண்டு பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இந்த வார்டுகளிலும் தற்போது தார்சாலைகள் போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 9வது வார்டில் தார்ச்சாலைப் பணிகள் ஒரு வாரத்திற்குள் துவங்கி விடும். தார்ச்சாலைகள் தரமானதாகவும் உறுதியானதாகவும் போடவேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12, 13வது வார்டு பகுதிகள் நகரின் இதயப்பகுதியாக இருப்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்து அதன் பின்னர் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் துவங்கப்பட்டு பணிகள் விரைவாக முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். பேட்டியின் போது வருவாய் உதவியாளர்கள் அப்பநேசன், மகேஸ்வரன், இளநிலை உதவியாளர் குமரன், பைப்லைன் பிட்டர் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Last Updated on Monday, 22 February 2010 06:26
 


Page 203 of 238