Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

குப்பை அள்ள தானியங்கி லாரி சுகாதார சீர்கேட்டுக்கு 'குட்பை'

Print PDF

தினமலர் 05.01.2010

குப்பை அள்ள தானியங்கி லாரி சுகாதார சீர்கேட்டுக்கு 'குட்பை'

வால்பாறை : வால்பாறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த தானியங்கி குப்பை லாரி பயன் பாட்டிற்காக இயக்கப்படுகிறது.வால்பாறை நகராட்சி சார்பில் அள்ளப்படும் குப்பைக்கழிவுகள், கோழி மற்றும் இறைச்சிக்கழிவுகள் ஸ்டான்மோர் சந்திப்பில் உள்ள திறந்த வெளிக்குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன. இப்பகுதியில் குடியிருப்பு இருப்பதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். கல்லூரியின் எதிரில் குப்பைக்கிடங்கு இருப்பதால் மாணவர்கள் துர்நாற்றத்தால் படிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், நகராட்சி சார்பில் குப்பைக்கழிவுகளை கொண்டு இயற்கை உரம் தயாரித்து எஸ்டேட் பகுதிகளுக்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, குப்பைக்கிடங்கு விரிவு படுத்தும் பணியும், தடுப்புச்சுவர் கட்டும் பணியும் நடக்கிறது.குப்பைகளை தரம் பிரித்து தானியங்கி லாரி மூலம் குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குப்பைகள் தரம்பிரிக்கும் அறைகளும், தடுப்புச்சுவரும் கட்டும் பணி நடந்துவருகிறது.வால்பாறை டவுன் பகுதியில் உள்ள குப்பைகளை சேகரித்து ஒரே வாகனத்தில் எடுத்து செல்லும் விதமாக தானியங்கி குப்பை லாரி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த லாரியை பொதுமக்கள் பயன் பாட் டிற்காக நகராட்சி செயல்அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் நகராட்சித்தலைவர் கணேசன், துணைத் தலைவர் ராஜதுரை துவக்கி வைத்தனர்.

Last Updated on Tuesday, 05 January 2010 07:10
 

விழுப்புரம் நகரம் முழுவதும் சிமென்ட் சாலை: நகராட்சி சேர்மன் ஜனகராஜ் உறுதி

Print PDF

தினமலர் 30.12.2009

விழுப்புரம் நகரம் முழுவதும் சிமென்ட் சாலை: நகராட்சி சேர்மன் ஜனகராஜ் உறுதி

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற கூட்டம் சேர்மன் ஜனகராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தார் சாலை அமைத்தல், அறிவியல் கண்காட்சி நடத்தியதற் கான பணிகளுக்கான நிதி ஒதுக்குவது உள்ளிட்ட 68 தீர்மானங்கள் குறித்து விவாதம் நடந்தது.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

கணேஷ்சக்திவேல்: பாதாள சாக்கடை திட்டத் தால் தெரு சாலைகள் மோசமடைந்துள்ளன.

சேர்மன்: பாதாள சாக் கடை திட்டத்தில் 90 சதவீத பணிகள் முடிவடைந் துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடையும்.

பாபு: மக்கும் குப்பை, மக்காத குப்பை திட் டத்தை கொண்டு வந்தும் பலனில்லை. கொட்டப்படும் குப்பையை எரிப்பதால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.

சேர்மன்: குப்பைகளுக்கு சமூக விரோதிகள் தீ வைத்து விடுகின்றனர். குப்பைகளை கொட்டுவதற்காக கஸ்பா காரணையில் மாற்று இடம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அசோக்குமார்: ஒரு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந் தவுடன், பைப் லைன் பணிகளையும் முடித்து சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.சேர்மன்: ஒரு பகுதி முடிவடைந்தவுடன் பைப் லைன் கொடுக்க இயலாது. அனைத்து பகுதியிலும் முடிந்த பிறகே சாலை அமைக்கப்படும். கடந்த 1996ம் ஆண்டு தமிழகத்திலேயே விழுப்புரம் நகராட்சிக்கு தான் அதிளவாக தார் சாலை அமைக் கப் பட்டது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்தவுடன் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடியின் பரிந்துரையின் பேரில் நகராட்சி முழுவதும் சிமென்ட் சாலை அமைக்கப்படும்.

Last Updated on Wednesday, 30 December 2009 07:03
 

பேரூராட்சிக்கு மூன்று சக்கர டிப்பர் ஆட்டோ

Print PDF

தினமணி 24.12.2009

பேரூராட்சிக்கு மூன்று சக்கர டிப்பர் ஆட்டோ

பெரம்பலூர், டிச. 23: பெரம்பலூர் மாவட்டம், லெப்பைகுடிக்காடு பேரூராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மூன்று சக்கர ஆட்டோவை மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர டிப்பர் ஆட்டோ வாங்கப்பட்டது.

இந்த வாகனம், பெரம்பலூர் மாவட்டம், லெப்பைகுடிகாடு பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மக்கும், மக்கா குப்பைகளைத் தரம் பிரித்து திடக்கழிவு மேலாண் கூடத்துக்கு கொண்டு செல்லும் வகையில் பயன்படுத்தப்படும். அந்த வாகனத்துக்கான சாவியை பேரூராட்சிகள் உதவி இயக்குநர் எஸ். சம்பந்தத்திடம், மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் புதன்கிழமை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது, லெப்பைகுடிகாடு பேரூராட்சி செயல் அலுவலர் க.திலகம், துணைத் தலைவர் எஸ். நூர்ஜகான் சம்சுதீன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கி. கண்ணதாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Thursday, 24 December 2009 10:31
 


Page 216 of 238