பெ.நா.பாளையம் அரசு மருத்துவமனை கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார்
Tuesday, 31 December 2013 11:09
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
தினமணி 31.12.2013 பெ.நா.பாளையம் அரசு மருத்துவமனை கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார்
பெரியநாயக்கன்பாளைத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரூ.1.03 கோடி செலவில் கட்டப்பட்ட 36 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டடத்தை திங்கள்கிழமை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பெ.நா.பாளையம் பேரூராட்சியில் 9-வது வார்டில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை கட்டடத்தில் எக்ஸ்ரே, பரிசோதனைக் கூடம், ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத்தை கொடநாடு முகாம் அலுவலகத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
விழாவில் பெ.நா.பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ், மாவட்ட கவுன்சிலர் டி.டி.கே.கதிர்வேல், கோவனூர் துரைசாமி, பேரூராட்சித் துணைத் தலைவர் சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
|
சேலம் மாநகராட்சிக்கு ரூ.7.68 கோடியில் புதிய கட்டடம்
Monday, 30 December 2013 00:00
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
தினமணி 30.12.2013 சேலம் மாநகராட்சிக்கு ரூ.7.68 கோடியில் புதிய கட்டடம்
சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகத்துக்கு ரூ.7.68 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை (டிசம்பர் 30) நடைபெறுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்பரன்ஸிங் முறையில் அடிக்கல் நாட்டுகிறார்.
சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகம் அரசு அதிநவீன மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப அலுவலகங்களின் எண்ணிக்கையும், வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட வேண்டிய நிலை உருவானது.
இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இதையடுத்து, இப்போது உள்ள கட்டடத்தை இடித்துவிட்டு ரூ.7.68 கோடியில் தரைத்தளம், இரண்டு மாடிகளைக் கொண்ட ஒருங்கிணைந்தக் கட்டடம் கட்ட அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளன.
இந்த நிலையில், சேலம் மாநகராட்சியின் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது. முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி முறையில் காலை 11 மணிக்கு புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேயர் எஸ்.செüண்டப்பன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஆணையர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
எண்ணூர் நெடுஞ்சாலை–மணலி சாலையில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக ரூ.60 கோடியில் மேம்பாலம் மக்கள் கருத்துக்களை மேயர் சைதை துரைசாமி கேட்டறிந்தார்
Monday, 23 December 2013 11:57
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
தினத்தந்தி 23.12.2013 எண்ணூர் நெடுஞ்சாலை–மணலி சாலையில் போக்குவரத்து நெரிசலை
சமாளிப்பதற்காக ரூ.60 கோடியில் மேம்பாலம் மக்கள் கருத்துக்களை மேயர் சைதை
துரைசாமி கேட்டறிந்தார் ![](http://www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/mayur-23122013.jpg)
எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில்
போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக ரூ.60 கோடி மதிப்பில் மேம்பாலம்
அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மக்களின் கருத்துக்களை மேயர் சைதை
துரைசாமி கேட்டறிந்தார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
கலந்தாய்வுக்கூட்டம்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,
சென்னை மாநகராட்சி பாலங்கள் துறை மூலம் ரூ.60 கோடி மதிப்பிலான பாலங்கள்
கட்டும்பணி குறித்த கலந்தாய்வுக்கூட்டம் சென்னை கொருக்குப்பேட்டை, வேலன்
நகரில் உள்ள வேலன் திருமண மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை
மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை
ஆணையர் டி.ஜி.வினய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எண்ணூர் நெடுஞ்சாலை, மணலி சாலை வடசென்னையில் பிரதான சாலையாகும். இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
60 கோடி மதிப்பில்...
இதை கருத்தில் கொண்டு, எண்ணூர்
நெடுஞ்சாலை, மணலி சாலையில் ரெயில்வே மேம்பாலம் சுமார் 60 கோடி மதிப்பில்
அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரெயில்வே மேம்பாலம் சுற்றுச்சூழல்
பாதிப்பு ஏற்படாத வண்ணம் நவீன தொழில்நுட்பத்துடனும், பொதுமக்களுக்கு
இடையூறு ஏற்படாத வகையிலும் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான திட்ட அறிக்கை 4 மாதங்களுக்குள்
தயாரிக்கப்பட்டு, பின்னர் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்.
இதற்கிடையே இதுகுறித்து, அந்த பகுதிகளில் உள்ள வர்த்தக சங்கங்கள்,
பொதுநலச்சங்கங்கள் ஆகியவைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் சென்னை
மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கருத்துக்களை கேட்டறிந்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
|
|
|
Page 28 of 238 |