தினமலர் 12.05.2010
அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம்
நகராட்சி ஆணையர் மக்களுக்கு எச்சரிக்கைபட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியற்றமனைகளை வாங்க வேண்டாம் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி மனைப்பிரிவு அமைத்துள்ளனர். நகராட்சி அனுமதி பெற்றே மனைகள் அமைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். அனுமதி பெறாத மனைகளை பொதுமக்கள் வாங்கும் பட்சத்தில் உரிமையாளருக்கு கட்டிட வரைபட அனுமதி, சாலைவசதி, குடிநீர் வசதி மற்றும் மின்வசதி வழங்க இயலாது. எனவே அனுமதியின்றி மனைப்பிரிவு அமைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போறலீஸ் உதவியோடு மனைப்பிரிவுகள் அகற்றப்படும். எனவே அனுமதி பெறாத மனைகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம். வாங்கும் பட்சத்தில் ஏற்படும் நஷ்டங்களுக்கு பொதுமக்களே முழு பொறுப்பு.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.