Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சித்தோடு புதுநகர் வளர்ச்சி குழும பகுதியில் கட்டிட வரைபட அனுமதி உள்ளாட்சிகளுக்கு அதிகாரம்

Print PDF

தினகரன் 04.06.2010

சித்தோடு புதுநகர் வளர்ச்சி குழும பகுதியில் கட்டிட வரைபட அனுமதி உள்ளாட்சிகளுக்கு அதிகாரம்

ஈரோடு, ஜூன் 4: சித்தோடு புதுநகர் வளர்ச்சிக்குழும பகுதிக்குட்பட்ட சித்தோடு, சூரியம்பாளையம் பேரூராட்சிகளில் 200 சதுரமீட்டர் பரப்பளவு வரை யுள்ள கட்டிடங்களுக்கு அந்தந்த உள்ளாட்சிகளில் கட்டிட வரைபட அனுமதி பெற்றுக் கொள்ள அதிகார பகிர்வு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுடலைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.சித்தோடு புதுநகர் வளர்ச்சிக்குழும தலைவரும், ஈரோடு கலெக்டருமான சுடலைக்கண்ணன் தெரிவித்துள்ளதாவது:

சித்தோடு புதுநகர் வளர்ச்சிக்குழு பகுதியில் 200 சதுர மீட்டர் பரப்பளவு வரையுள்ள கட்டிடங்களுக்கு உள்ளாட்சிகளில் வரைபட அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ள விபரம் பொதுமக்களுக்கு சரிவர தெரிவதில்லை என்றும் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வளர்ச்சியடைவதாகவும் சித்தோடு புதுநகர் வளர்ச்சி குழும கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 200 சதுரமீட்டர் பரப்பளவு வரையுள்ள கட்டிடங்களுக்கு சித்தோடு, சூரியம்பாளையம் பேரூராட்சி அலுவலகங்களில் வரைபட அனுமதி வழங்க அதிகார பகிர்வு வழங்கப்பட்டுள்ளதால் கட்டிட வரைபடங்களுக்கு அந்தந்த உள்ளாட்சிகளில் அனுமதி பெற்றுக் கொள்ள லாம். பொதுமக்கள் இடம், மனை வாங்கும்போது அங்கீகாரமற்ற மனைப்பிரிவில் மனைகள் வாங்கி கட்டிட வரைபட அனுமதி பெற சிரமப்படுவதை தவிர்க்க சித்தோடு, நடுப்பாளையம் நால்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் சித்தோடு புதுநகர் வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலரை தொடர்பு கொள்ளலாம்.