தினகரன் 18.06.2010
தென்மும்பையில் 876 கட்டிடங்கள் ஆபத்தானவை
மும்பை,ஜூன் 18: மும்பை யில் மழைக்காலத்தை யொட்டி மாநகராட்சி நிர்வாகம் மிகவும் பழைய கட்டிடங்களை ஆய்வு செய்து வருகிறது. தென் மும்பையில் மேற் கொள்ளப் பட்ட ஆய்வில் 876 கட்டி டங்கள் மிகவும் ஆபத்தான வையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த கட்டிடங்கள் அனைத்தும் 100 முதல் 125 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய தொழிற் நுட்பத்தில் கட்டப்பட்ட வை ஆகும். இவை நான்கு முதல் ஆறு மாடிகள் கொண்டதாக உள்ளன. இக்கட்டிடங் கள் இருக்கும் பகுதியில் சாலைகள் மிகவும் குறுகியதாக இருக்கிறது.இதனால் மிகவும் அசுத்தமான நிலை காணப்படுகிறது. இக்கட்டி டங்களில் வசிக்கும் மக்க ளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டாலும் அவர்கள் வீடுகளை காலி செய்வ தாக இல்லை. என வே அவர்கள் தொடர்ந்து மிகவும் ஆபத் தான நிலையில் வசித்து வருகின்றனர்.